இந்திய ‘மரங்களின் தாய்' என அன்புடன் அழைக்கப்பட்ட பத்ம ஸ்ரீ சாலுமரத திம்மக்கா 114வது வயதில் காலமானார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு சரித்திரமாக வாழ்ந்து சாதனைகள் செய்தவர், தனது வாழ்வின் பெரும்பகுதியை, மரங்களை வளர்க்கும் மாபெரும் சேவைக்காக அர்ப்பணித்தார்.
தனது கணவருடன் இணைந்து, பல லட்சக்க்கணக்கான மரங்களை {ஆலமரம் உள்ளிட்ட) நட்டு, அவை செழித்து வளரும் வரை குழந்தைகளைப் போல் பராமரித்தார். அவரது சூழலியல் பணி அவரை உலகம் முழுவதும் அறியச் செய்தது.
வளர்ந்து வரும் காலநிலை மாற்றத்தின் தீங்குகளுக்கிடையில், அவரளித்த பங்களிப்பு ஒப்பிட முடியாதது. ஒரு தனி மனிதரால், சரியான கருவிகள் இல்லாமல், எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கு காலஞ்சென்ற திம்மக்கா ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்ந்தார். அவரது இயற்கைப் பணி, அவர் நட்டு வளர்த்த மரங்களைப் போலவும், தலைமுறைகள் தாண்டியும் மௌரியப் பேரரசர் சாம்ராட் அசோகர் புகழ் போல நிலைத்து நிற்கும்.
இயற்கையின் மீதான அவரது காதல் மற்றும் மனித குலத்திற்கான அவரது தன்னலமற்ற சேவை என்றென்றும் நினைவுகூரப்படும். மரங்களின் தாய், சாலுமரத திம்மக்கா அவர்களுக்கு நமது பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் மற்றும் மரம் அறக்கட்டளை நிறுவனர் மரம் இராஜா சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது. பத்மஸ்ரீ சாலுமரத திம்மக்கா, கர்நாடகா சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் பசுமை ஆர்வலர். இவர் பல லட்சம் மரங்களுடன் யாராலும் விதை போட்டு வளர்க்க முடியாத 300-க்கும் மேற்பட்ட ஆலமரங்களை மட்டுமே நட்டு வளர்த்ததற்காகப் புகழ்பெற்றவர், அதற்காகவே இவருக்கு "சாலுமரத திம்மக்கா" (வரிசையாக மரம் நட்ட திம்மக்கா) என்ற புனைப்பெயர் கிடைத்தது. இவர் தனது சுற்றுச்சூழல் பணிக்காக 2019-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றார். சாலுமரத திம்மக்கா, கர்நாடகாவின் இராம்நகர் மாவட்டத்தில் குடூர் மற்றும் ஹூலி ஆகிய கிராமங்களுக்கு இடையே சுமார் 4.5 கி.மீ தூரத்திற்கு 385 ஆலமரங்களை நட்டுப் பராமரித்து வளர்த்துள்ளார்.
இவரது பணிக்கு அங்கீகாரமளிக்கும் விதமாக, இந்திய அரசு அவருக்கு 2019-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதை வழங்கியது.
குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாத வேதனை காரணமாக, மரக்கன்றுகளை தனது பிள்ளைகளாக நினைத்து வளர்த்தார். இதனால், "ஆலமரங்களின் தாய்" என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இவரது பூத உடல் சகலவிதமான அரசு மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது, புகழுடம்பு பல தலைமுறை கண்டு வாழட்டும் ஓம் சாந்தி,. ஆம்! விழுதுகள் விட்ட ஆலமரம் பழுது படும் இயற்கை தானே?. இந்தியாவின் மகளை இயற்கை அழைத்துச் சென்றது, வா மகளே.!





.jpg)




கருத்துகள்