முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் உரை

குஜராத்தின் தெடியாபாடாவில் தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

ரூ.9,700 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு 

குஜராத்தின் தெடியாபாடாவில் இன்று நடைபெற்ற தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், ரூ 9,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டினார். நர்மதாவின் புனித பூமி இன்று மற்றொரு வரலாற்று நிகழ்வைக் காண்கிறது என்று கூறிய திரு மோடி, அக்டோபர் 31 -ம் தேதி, சர்தார் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் அதே இடத்தில் கொண்டாடப்பட்ட பாரத் விழா தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இன்று பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளின் பிரமாண்டமான கொண்டாட்டத்துடன்,அந்த விழாவின் உச்சக்கட்டத்தை நாம் காண்கிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில் பகவான் பிர்சா முண்டாவுக்கு அவர் மரியாதை செலுத்தினார். குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் முழு பழங்குடிப் பகுதியிலும் சுதந்திர உணர்வை எழுப்பிய கோவிந்த் குருவின் ஆசீர்வாதங்களும் இந்த நிகழ்வோடு தொடர்புடையவை என்பதை பிரதமர் எடுத்துரைத்தார். சிறிது நேரத்திற்கு முன்பு தேவமோக்ரா அன்னை கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.


தேசிய வளர்ச்சி மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பான பல திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டதாக திரு மோடி எடுத்துரைத்தார். பிரதமர்-ஜன்மன் மற்றும் பிற திட்டங்களின் கீழ், இப்பகுதியில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏராளமான ஏகலைவா  மாதிரி பள்ளிகள் மற்றும் ஆசிரமப் பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.  பிர்சா முண்டா பழங்குடி பல்கலைக்கழகத்தில் ஸ்ரீ கோவிந்த் குரு இருக்கை நிறுவப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். சுகாதாரம், சாலைகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான பல திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி மற்றும் சேவை முயற்சிகளுக்கு அனைவரையும் அவர் பாராட்டினார்.

குஜராத் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பல துணிச்சலான தேசபக்தர்களின் தாயகமாகவும் உள்ளது என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், பகத் இயக்கத்தை வழிநடத்திய கோவிந்த் குரு, பஞ்ச்மஹாலில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக நீண்ட காலம் போராடிய ராஜா ரூப்சிங் நாயக், ஏகி இயக்கத்தைத் தொடங்கிய மோதிலால் தேஜாவத் மற்றும் காந்திஜியின் கொள்கைகளை பழங்குடி சமூகத்திற்கு கொண்டு சென்ற தஷ்ரிபென் சவுத்ரி ஆகியோரைக் குறிப்பிட்டார். சுதந்திரப் போராட்டத்தின் பல அத்தியாயங்கள் பழங்குடி பெருமை மற்றும் வீரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர இயக்கத்திற்கு பழங்குடி சமூகத்தின் பங்களிப்பை எதிர்கால சந்ததியினருக்கு வழங்குவதன் முக்கியத்துவத்தை திரு மோடி வலியுறுத்தினார். நாடு முழுவதும் பல பழங்குடி அருங்காட்சியகங்கள் நிறுவப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். குஜராத்தில், ராஜ்பிப்லாவில் 25 ஏக்கரில் ஒரு பெரிய பழங்குடி அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, சத்தீஸ்கருக்குச் சென்று அங்கு ஷாஹீத் வீர் நாராயண் சிங் பழங்குடி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்ததையும்  அவர் பகிர்ந்து கொண்டார். பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை, ராஞ்சியில் பழங்குடி அருங்காட்சியகமாக மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


பழங்குடி சமூகங்களால் பேணப்படும் பாரம்பரியங்களின் உண்மையான சாரத்தை பழங்குடியினர் கௌரவ தினம் கொண்டுள்ளது என்றும், எதிர்கால சந்ததியினருக்கான விருப்பங்களையும் கொண்டுள்ளது என்றும் திரு மோடி மேலும் கூறினார். எனவே, பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ம் தேதி, இந்தியா முழுவதும் பழங்குடியினர் கௌரவ தினம் என்று கொண்டாடப்படுகிறது என்றும் அவர் கூறினார். இந்தியத்தன்மையில் வேரூன்றி புதிய வலிமையுடனும், வீரியத்துடனும் நாம் முன்னேறி, புதிய மகிமையின் சிகரங்களை அடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்ரத், குஜராத் முதலமைச்சர்  திரு பூபேந்திரபாய் படேல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பகவான் பிர்சா முண்டாவின் சிலைக்கு குடியரசுத்தலைவர், குடியரசு துணைத் தலைவர், மக்களவைத் தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு சி பி ராதாகிருஷ்ணன், மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், மற்றும் இதர முக்கிய  பிரமுகர்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரேர்ணா ஸ்தலில் உள்ள பகவான் பிர்சா முண்டாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் மக்களவைத் தலைவர் திரு ஓம்  பிர்லா வெளியிட்டுள்ள செய்தியில், ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடி மக்களின் அடையாளமாக உள்ள தார்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150 - வது பிறந்த தினத்தில் அவருக்கு பணிவான மரியாதை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி அனைத்து குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறைவான வளங்கள் இருந்தபோதிலும், நீர், வனம் மற்றும் நிலத்திற்கான உரிமைகளுக்காக அவர் நடத்திய துணிச்சலான போராட்டம் அந்நிய ஆட்சிக்கு எதிரான ஒளிவீசும் புரட்சியாக உருவெடுத்து, நாடு முழுவதும் மக்களிடையே சுதந்திர உணர்வை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார். விளிம்பு நிலை மற்றும் பழங்குடியின சமூகங்களின் குரலாகவும், கொள்கையில் உறுதியான நிலைப்பாடு, தியாகம் மற்றும் பிரத்யேகத் தலைமைத்துவப் பண்பு ஆகியவற்றின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே நாட்டுப்பற்று, சுயமரியாதை மற்றும் நீதியின் மகத்துவத்தை அறிந்துகொள்ளச் செய்தார்.

அவரது உறுதியான கடமையுணர்வு, சமூக நீதி மற்றும் கலாச்சார உணர்வின் கண்ணியமான  பாதையை நம் அனைவருக்கும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்றும், பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவரது சேவை என்றென்றும் நினைவுகூரப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...