தமிழ்நாடு காவல்துறையில் பத்திரிகை மற்றும் தொவைக்காடசி செய்தி ஊடகங்களைச் சந்திப்பதற்காக, புதிதாக ஊடகத் செய்தி தொடர்பு காவல்துறை உயர் அலுவலர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஊடகத் தொடர்புத்துறை காவல் அதிகாரியாக முத்தரசி ஐபிஎஸ் நியமனம்.
காவல்துறையில் புதிதாக ஊடக செய்தி தொடர்பு அலுவலர் என்று தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த பதவியால் காவல்துறை செய்திகள் வழங்க ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் வருமா என்பதும் தமிழ்நாடு முழுவதுமுள்ள செய்தியாளர்கள் அப்பகுதி காவல் நிலையங்களுக்கு சென்று செய்தி சேகரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உருவாகுமா? அந்த உயர் அலுவலரின் பணி குறித்த விளக்கத்தை காவல்துறைத் தலைவர் அலுவலகம் வெளியிடுமா? என்பதும் இனிமேல் தான் தெரியும். தமிழ்நாடு மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியும், இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதில் தமிழ்நாடு காவல்துறையில் புதியதாக உருவாக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உத்தரவில், சென்னை குற்ற ஆவணக் காப்பகப் பிரிவு ஐஜி வி.ஜெயஸ்ரீ, சென்னை ஊர்க்காவல் படை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்பப் பிரிவு ஐஜி அவினாஷ
குமாருக்கு, குற்ற ஆவணக் காப்பக ஐஜி பொறுப்பு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை சட்டம், ஒழுங்கு உதவி ஐஜி ஜெ.முத்தரசி, சென்னை செய்தி மக்கள் தொடர்புத்துறை கண்காணிப்பாளராக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் புதியதாக உருவாக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் பதவி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆவடி போக்குவரத்துத் துணை ஆணையர் சி.சங்கு, செங்குன்றம் போக்குவரத்துத் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடிக் காவலர் பயிற்சி பள்ளி கண்காணிப்பாளர் கே.மகேஸ்வரி, சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


கருத்துகள்