கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார். (வயது 92.) முதுமை காரணமாகக் காலமான அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்
தெரிவித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை வாழ்ந்த செ.இரா.நடராசன்- வள்ளியம்மாள் தம்பதியரின் மகனாக 1933 செப்டம்பர் 28 ல் பிறந்தவரது இயற்பெயர் ந.செகதீசன் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார் ஈரோடு தமிழன்பன் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘அச்சமில்லை அச்சமில்லை’, ஹரிஹரன் இயக்கிய ‘நீயும் நானும்’ ஆகிய திரைபடங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
‘வசந்தத்தில் ஒரு வானவில் ‘ எனும் திரைபட இணை இயக்குநராகவும் கதை வசன ஆசிரியராகவும் பணியாற்றினார். பாவேந்தர் பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் (1954 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரை) பழகிய அனுபவம் கொண்டவர். 'நெஞ்சின் நிழல்கள்' எனும் நாவல் பாரதிதாசன் பரிந்துரையால் சென்னை பாரி நிலையத்திலிருந்து 1965-ல் வெளியானது. ஆனால் தொடர்ந்து புனைவுகள் எழுதாமல் கவிஞராகவே நிலை கொண்டார். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக உவமைக் கவிஞர் சுரதா காலத்தில் மரபுக்கவிதைகளை எழுதி வந்தவர்
வானம்பாடி கவிதை இயக்கம் தொடர்புக்குப்பின் புதுக்கவிதையில் ஈடுபட்டார்.உவமைக் கவிஞர் சுரதா மற்றும் ஈரோடு கவிஞர் தமிழன்பன் இருவரும் பாவேந்தர் பாரதிதாசன் மரபைச் சேர்ந்தவர்கள். சுரதா உவமைகளில் சிறந்த கவிஞர், ஈரோடு தமிழன்பன் மரபு மற்றும் புதுக்கவிதை இரண்டிலும் வல்லவர் இருவரும் பா வேந்தர் பாரதிதாசன் மீது பற்றுக் கொண்டவர்கள், ஈரோடு தமிழன்பன் அவரை நெருங்கிப் பழகியவர்.
ஈரோடு தமிழன்பன் ஜப்பானிய கவிதை வடிவங்களான ஹைக்கூ, சென்ரியூ ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். ஒரு வண்டி சென்ரியு (2001) என்னும் தொகுதி அந்த வடிவை தமிழில் அறிமுகம் செய்தது. லிமெரிக், ஹைகூ ஆகிய கவிதை வடிவங்களை இணைத்து டெட் பாக்கர் அறிமுகப்படுத்திய
கவிதை வடிவமான லிமெரைக்கூவைச் சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் (2002) என்னும் கவிதைத் தொகுதி வழியாக தமிழில் அறிமுகம் செய்தார். "குன்றாத செறிவோடு தமிழ்த் தன்னைத் தகவமைத்துகொள்வதுபோல் தமிழ் எழுத்துலகிற்குத் தன்னைத் தத்துக்கொடுத்த
மணிக்கொடி, எழுத்து, கசடதபற, வானம்பாடி இயக்கங்கள் ஆற்றிய அளப்பரியப் பங்கின் எச்சம் பன்முக தமிழாளுமை வானம்பாடி பறவை கவிஞர் ஈரோடு தமிழன்பன்" மரபுக்கவிதை ஐயாவின் மறைவு தமிழின் பேரிழப்பு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஆழந்த இரங்கல்










கருத்துகள்