முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் கோயம்பத்தூர் வருகை எதிரொலி பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரக் கண்காணிப்பு ஏற்பாடு

கோயம்பத்தூர் கொடிசியாவில் இயற்கை விவசாயிகள் மாநாடு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி (நாளை மறுநாள்) துவங்க உள்ளது.


இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்து, சிறப்பாகச் செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருதுகள் வழங்குகிறார்.  இந்த மாநாட்டில் 50,000-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை மதியம் ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 1.25 மணிக்கு கோயம்பத்தூர் விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு மீண்டும் கோயம்பத்தூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.



பிரதமரின் வருகையை முன்னிட்டு கோயமுத்தூரில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக உரியஜபாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளது.மேலும், கோவை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி கோயம்பத்தூர் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் நிறுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோயம்பத்தூர் விமான நிலைய இயக்குநர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை விமான நிலைய முனையம் மற்றும் ஒய் சந்திப்பு பகுதிகளுக்கு முன் வாகனங்களை நிறுத்த கூடாது. அவ்வாறு நிறுத்தப்பட்டால் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.

அதே நேரத்தில் விமான முனையம் முன்பு 3 நிமிடங்களுக்குள் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் எந்தத் தடையுமில்லை. செவ்வாய் மற்றும் புதன் கிழமை வரை பயணிகள் தங்களது வாகனங்களை  நிறுத்துமிடத்தில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் கோயம்பத்தூர் வருகை நவம்பர் மாதம் 19 ஆம் தேதி

போக்குவரத்து மாற்றம் குறித்து விவரங்களை வெளியிட்ட கோயம்பத்தூர் மாநகரக் காவல்துறை :-

19.11.2025 ஆம் தேதியன்று கோயம்பத்தூர் மாநகருக்கு மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் வருகை புரிவதால் நண்பகல் 12.00 மணி முதல் 16.00 மணி வரை நேரத்திற்கு தகுந்தாற் போல் கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

கோயம்பத்தூர் மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள்



சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து விமான நிலையம் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம்.

நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக வெளியே செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள்

லட்சுமி மில் சந்திப்பில் U-Turn செய்து புளியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக L&T பைபாஸ் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள்

நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிப்பாளையம், கைகோலப்பாளையம், காளப்பட்டி நால் ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.

நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள்

அவினாசி ரோடு, டைட்டல் பார்க் சந்திப்பில் U -Tum செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். மேலும் நகருக்குள் இருந்து வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள் நேரத்திற்கு தகுந்தாற் போல் சித்ரா வழியாக அனுப்பப்படும்.

19.11.2025 தேதியன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் வருகையையொட்டி நண்பகல் 12.00 மணி முதல் 15.00 மணி வரை விமான நிலையத்திற்குள்ளே செல்லும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள் தடை செய்யப்படுகிறது. எனவே அன்றைய தினம் விமான நிலையத்திற்கு வருபவர்கள் 12.00 மணிக்கு முன்பாக விமான நிலையம் வரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 12.00 மணிக்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இறங்கி விமான நிலையத்திற்கு நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவினாசி ரோடு, ஜிடி நாயுடு மேம்பாலம் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் போது, 19.11.2025 தேதியன்று நண்பகல் 12.00 முதல் 15.00 மணி வரை மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் அதற்குத தகுந்தாற் போல் மாற்றுப் பாதையை தேர்வு செய்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

19.11.2025 ஆம் தேதியன்று காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

16.11.2025 முதல் 19.11.2025 வரை விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்படுகிறது. தற்போது நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்பு மாலை 4 மணிக்கு மேல் பார்வையாளாகள் அனுமதிக்கப்படுவர்.

எனவே மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்புக் கொடுத்து, தங்களது பயண திட்டம் மற்றும் பயண பாதையை வகுத்து விரைவான பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்ட கோயம்பத்தூர் கொடிசியாவில் இயற்கை விவசாயிகள் மாநாடு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி (நாளை மறுநாள்) துவங்க உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்து, சிறப்பாகச் செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருதுகள் வழங்குகிறார். இந்த மாநாட்டில் 50,000-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை மதியம் ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 1.25 மணிக்கு கோயம்பத்தூர் விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு மீண்டும் கோயம்பத்தூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு கோயமுத்தூரில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக உரியஜபாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளது.மேலும், கோவை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி கோயம்பத்தூர் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாகனங்கள் நிறுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோயம்பத்தூர் விமான நிலைய இயக்குநர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை விமான நிலைய முனையம் மற்றும் ஒய் சந்திப்பு பகுதிகளுக்கு முன் வாகனங்களை நிறுத்த கூடாது. அவ்வாறு நிறுத்தப்பட்டால் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.

அதே நேரத்தில் விமான முனையம் முன்பு 3 நிமிடங்களுக்குள் பயணிகளை ஏற்றவும், இறக்கவும் எந்தத் தடையுமில்லை. செவ்வாய் மற்றும் புதன் கிழமை வரை பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துமிடத்தில் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் கோயம்பத்தூர் வருகை நவம்பர் மாதம் 19 ஆம் தேதி

போக்குவரத்து மாற்றம் குறித்து விவரங்களை வெளியிட்ட கோயம்பத்தூர் மாநகரக் காவல்துறை :-

19.11.2025 ஆம் தேதியன்று கோயம்பத்தூர் மாநகருக்கு மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் வருகை புரிவதால் நண்பகல் 12.00 மணி முதல் 16.00 மணி வரை நேரத்திற்கு தகுந்தாற் போல் கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

கோயம்பத்தூர் மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள்

சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து விமான நிலையம் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம்.

நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக வெளியே செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள்

லட்சுமி மில் சந்திப்பில் U-Turn செய்து புளியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக L&T பைபாஸ் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.

நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள்

நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிப்பாளையம், கைகோலப்பாளையம், காளப்பட்டி நால் ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.

நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள்

அவினாசி ரோடு, டைட்டல் பார்க் சந்திப்பில் U -Tum செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். மேலும் நகருக்குள் இருந்து வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள் நேரத்திற்கு தகுந்தாற் போல் சித்ரா வழியாக அனுப்பப்படும்.

19.11.2025 தேதியன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் வருகையையொட்டி நண்பகல் 12.00 மணி முதல் 15.00 மணி வரை விமான நிலையத்திற்குள்ளே செல்லும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள் தடை செய்யப்படுகிறது. எனவே அன்றைய தினம் விமான நிலையத்திற்கு வருபவர்கள் 12.00 மணிக்கு முன்பாக விமான நிலையம் வரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 12.00 மணிக்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இறங்கி விமான நிலையத்திற்கு நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவினாசி ரோடு, ஜிடி நாயுடு மேம்பாலம் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் போது, 19.11.2025 தேதியன்று நண்பகல் 12.00 முதல் 15.00 மணி வரை மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் அதற்குத தகுந்தாற் போல் மாற்றுப் பாதையை தேர்வு செய்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

19.11.2025 ஆம் தேதியன்று காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

16.11.2025 முதல் 19.11.2025 வரை விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்படுகிறது. தற்போது நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்பு மாலை 4 மணிக்கு மேல் பார்வையாளாகள் அனுமதிக்கப்படுவர்.

எனவே மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்புக் கொடுத்து, தங்களது பயண திட்டம் மற்றும் பயண பாதையை வகுத்து விரைவான பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...