முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானாது ரசிகர்கள் மத்தியில் பேரிழப்பு

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா  மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானது ரசிகர்கள் மத்தியில் பேரிழப்பு மரணம் குறித்து இரண்டு நாள் முன் மதியம் தான் செய்தி வெளியானது. இறுதிச்சடங்குக்கு ஆம்புலன்ஸ் வந்த பிறகுதான் அவரது மரணம் குறித்துத் தெரிய வந்தது.

அதற்கு முன் பல வதந்திகள் ராமர் கோவில் நிறைவு விழா தொடர்பாக நமது செய்தி இரண்டு நாள் தாமதம் தெய்வ சங்கல்பம்.

பாலிவுட் நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் முன்பு அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.



அவரது உடல் இறுதிச்சடங்குகளுக்காக விலே பார்லேயில் உள்ள பவன் ஹென்ஸ் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தர்மேந்திராவின் மனைவி ஹேமாமாலினி, மகள் இஷா தியோல், சஞ்சய் தத், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரும் வந்திருந்தனர்.

தர்மேந்திராவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.தர்மேந்திரா பாலிவுட்டின் வெற்றிக் கதாநாயகன், பல்வேறு திறமை கொண்ட சிறந்த கலைஞர்  பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த தர்மேந்திரா, தமிழ்நாட்டின் பிரபல நடிகையைத் திருமணம் செய்த மருமகன்.  நடிகை ஹேமமாலினி திருச்சிராப்பள்ளி பூர்வீகமானவர்.



அனுபமா படத்தில் உணர்ச்சி பொங்கும் எழுத்தாளர் என்றால், சத்யகம், சுப்கே சுப்கேயில் நகைச்சுவை நடிகர் என நடிப்பின் பல பரிணாமங்களையும் வாழ்ந்து காட்டிய தர்மேந்திரா.

நிஜ வாழ்க்கையில் கவிஞர், காதலன், தந்தை, 'உலகின் மிக அழகான' மனிதர்களில் ஒருவர், மது போதையிலிருந்து விடுபட்ட மனிதர் மற்றும் ஒரு காலத்து அரசியல்வாதி




1935-ஆம் ஆண்டில் பஞ்சாபில் பிறந்த தரம் சிங் தியோல், தன்னுடைய பூர்வீக கிராமமான நர்சாலியிலிருந்து மராட்டிய மாநிலம் மும்பை எனும் பழைய பம்பாய்க்குச் சென்ற பயணத்தை கனவுப்பயணம் எனலாம்.

தர்மேந்திராவின் ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தான் உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ளனர். முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தர்மேந்திராவின் ரசிகர் தர்மேந்திராவின் தந்தை லூதியானாவுக்கு அருகில் சனேவால் கிராமத்தில் கணித ஆசிரியர், அங்கு திரைப்படங்களைப் பார்ப்பது என்பது நிறைவேறாத ஆசை எனலாம்.


1948  ஆம் ஆண்டில் வெளியான திலீப் குமாரின் ஷாஹீத் திரைப்படத்தை சிறுவனாக தரம் சிங் தியோல் ரகசியமாகப் பார்த்தார். அந்த திரைப்படமும், நடிகர் திலீப் குமாரும் சிறுவனின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த. அன்றே அவர் தலைவிதி நிர்ணயமானது என தர்மேந்திரா முடிவு செய்தார் எனலாம்

1958-ஆம் ஆண்டில், பிலிம்பேர் இதழ் போட்டியில் பிமல் ராய் மற்றும் குரு தத் போன்ற பிரபலங்கள் இருந்ததில் பங்கேற்க விரும்பிய தர்மேந்திரா, ஜான் முகமது போட்டோ ஸ்டுடியோவுக்குச் சென்று, "என்னை திலீப் குமார் போல படம் எடுத்துக்கொடு, நான் நிச்சயம் தேர்வாகிவிடுவேன்" என்றார்.

அவர் நினைத்தது தான் நடந்தது. கிராமத்து இளைஞர் பாலிவுட்டில் கோலோச்ச அன்றைய பம்பாயில் குடியேறினார்.

உணர்ச்சி, நாடகம் மற்றும் சோகம் கலந்த ஒரு திரைப்படக் கதை இப்படித்தான் தொடங்கியது தர்மேந்திரா 1960 ஆம் ஆண்டு துவக்கத்தில் நடிக்கத் துவங்கிய போது, ​​ஷம்மி கபூர் அனைவரின் விருப்ப நாயகர். 1970 ஆம் ஆண்டுகளில், ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன் போன்ற உச்ச நட்சத்திரத்திரங்களுக்கு மத்தியில்1960 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டு வரை பிரபலமாக இருந்தது நடிகர் தர்மேந்திரா மட்டும் தான்.


1970 ஆம் ஆண்டில் தர்மேந்திராவின் தனித்துவமான பாணி நடிப்பில் வெளிப்பட்ட காலகட்டத்தில், ஜீவன் மிருத்யு, சீதா அவுர் கீதா, சரஸ், பிளாக்மெயில், சுப்கே சுப்கே என, ஆக்‌ஷன், காதல், நகைச்சுவை மற்றும் வணிக சினிமா என பலவிதமான திரைப்படங்களில் நடித்தாலும், 1975- ஆம் ஆண்டில் வெளியான ஷோலே திரைப்படம், அவர் புகழ் உச்சத்திற்குப் போனது. பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினியுடன் காதல் ஏற்பட்டது. ஆனால் தர்மேந்திராவுக்கு அதற்கு முன்பே திருமணமாகியிருந்தது. 1980-ஆம் ஆண்டு தர்மேந்திரா, பாலிவுட்டின் கனவுக் கன்னி ஹேம மாலினியை மணந்த போது, ​​அது மிகப்பெரிய சர்ச்சையானது.

ஹேம மாலினியின் வாழ்க்கை வரலாறான "ஹேம மாலினி: பியாண்ட் தி ட்ரீம் கேர்ள்" என்ற புத்தகத்தில், எழுத்தாளர் ராம் கமல் முகர்ஜி கருத்து 1974-ஆம் ஆண்டு, ஜீதேந்திரா மற்றும் ஹேம மாலினியின் பெற்றோர், அவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, தர்மேந்திரா முன்பே ஹேம மாலினியின் வாழ்க்கையில் நுழைந்திருந்தார். மெட்ராஸில் திருமணம் நடக்கப் போவது தெரிந்ததும் தர்மேந்திரா நேராக அங்கு சென்று ஹேம மாலினியிடம் தனியாகப் பேசினார், அதன் பிறகு திருமணம் நின்றுபோனது. 

விஜேதா பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் தனது மகன்களான சன்னி மற்றும் பாபி தியோலை அறிமுகப்படுத்தினார் தர்மேந்திரா. இருப்பினும், தனது மகள்கள் இஷா மற்றும் அஹானா இருவரும் திரைத்துறையில் வருவதை விரும்பவில்லை.

மிகவும் பிரபலமான நடிகர் தர்மேந்திராவுக்கு  மதுப்பழக்கம் பின்னடைவு, இருந்தும் 1970 கால ரசிகர்கள் இன்னும் உண்டு.  ஹிந்தியில ஜெயலலிதா ஹீரோயினா நடிச்சது தர்மேந்திரா கூட மட்டுந்தான். ஒருயொரு படம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...