முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒக்கியம் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு குறித்துப் பரவிய வதந்தியின் பின்னணி

ஒக்கியம் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு குறித்துப் பரவிய வதந்தியின் பின்னணி

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிரபு ஒரு உணவு விற்பனைக்கடையில் வாரம் தோறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு உணவு வாங்கி மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு உணவு வாங்கியதாக சில பில்களின் நகல்களும் பதிவு ஒன்றும் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் பிரபுவின் படத்தைப் பார்த்ததும் அவரை அறிந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சி. காரணம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதலே அவரை நன்கு அறிந்தவர்கள் பலர் களத்தில் பணியாற்றி வரும் பத்திரிகை ஊடகவியலாளர்கள். 

பல்வேறு காவல் நிலையங்கள் துறைகளிலும் பணியாற்றினாலும் எந்தவித எதிர்மறையான பெயரும் பெறாதவர்.   

அந்த பில் நகல்கள் பத்தாயிரம் ரூபாய் என்றெல்லாம் கணக்குக் காட்டவில்லை, ஒன்றிரண்டு பில்கள் Complementary என்று தான் உள்ளன. அதுவும் சிறு தொகைக்குத்தான்.  ஆக, ரூபாய் 10,000, 20,000, 40,000 எல்லாம் இல்லை அங்கே.

Mob does'nt think என்பார்கள். அதாவது கூட்டம் சிந்திப்பதில்லை. கூட்டத்தில் ஒருவரைப் பார்த்து அதோ திருடன் ஓடுகிறான் என்று எவரைக் கை காட்டினாலும் கூட்டம் அவரை அடித்துக் கொன்றுவிட்டு பிறகுதான் யோசிக்கும். 

அதுபோலதான் சமூக வலைத்தளங்களும். ஒருவரின் படத்தைப் போட்டு, ஒன்றிரண்டு பில்களை வைத்து மாதம் ரூபாய் 40,000, மாதம் ஒரு லட்சம் என்றெல்லாம் எழுதி விட்டால் இது சாத்தியமா, இது உண்மையாக இருக்குமா என்றெல்லாம் சிந்திப்பதே இல்லை இந்த சமூக வலைதளக் கூட்டம். உடனே பார்த்தீர்களா ? ஐய்யோ ஐய்யயோ என்று கூப்பாடு போடுவார்கள்.  

டிபார்ட்மென்டல் ஸ்டோரில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள கறிவேப்பிலை 25 ரூபாய் என்றால் கௌரவமாக வாங்கி வரும் நபர்கள் அதே கறிவேப்பிலையை தலையில் சுமந்து கொண்டு 10 ரூபாய்க்கு விற்கும் கீரைக்காரம்மாவிடம் இரண்டு ரூபாய் குறைக்கச் சொல்லி சண்டை போடுவார்கள்.

கேஸ் சிலிண்டர் நிறுவனம் 200 ரூபாய் விலை ஏற்றினாலும் வாயை மூடிக்கொள்கிறவர்கள் அந்த சிலிண்டரைத் தோளில் சுமந்து கொண்டு ஐந்து மாடி ஏறி வருபவரிடம் எதுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாகக் கேட்கிறாய்  எனச் சண்டையிடுவார்கள். 

இதுதான் இன்றைய சமூக வலைதள நபர்கள் மனநிலை. அங்கீகரிக்காத அனுமதி இல்லாத செய்தியாளராக இவர்கள் மாறி விடுகிறார்கள் சரி அது ஒருபுறம் இருக்கட்டும். 

சின்னதாக அரசியல் ஜாதிக்கட்சியும், கல்வி நிறுவனமும் நடத்தும் நபர்களின் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய நடிகர் பெயர் கொண்ட செய்தியாளர் ஒக்கியம் துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று ஒரு இட விவகாரத்தின் வழக்கு தொடர்பாக அவர் சொல்வதைப் போல காவல் ஆய்வாளர் பிரபு  செய்த் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்,

"இல்லை, நியாயமில்லை அப்படி செய்து தர முடியாது, " என ஆய்வாளர் பிரபு எடுத்துக்கூறியும் அவர் கேட்கவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து இந்தப் பிரச்னையை அந்த தொலைக்காட்சி குழுமத் தலைமையிடம் எடுத்துச் சொல்கிறார் காவல் ஆய்வாளர் பிரபு மேலும், அதற்கான தொலைபேசி, காணொலிச் சான்றுகளையும் அந்த தலைமைக்கு அனுப்பி வைக்கிறார் ஆய்வாளர் பிரபு.

இதையடுத்து அந்தச் செய்தியாளரை நிர்வாகம் இடை நீக்கம் செய்கிறது அந்த செய்தி நிறுவனம். 

இப்படிப்பட்ட நிலையில் அந்த உணவகத்திற்குச் சென்று ஆய்வளர் பிரபு பெயரில் உள்ள ஒன்றிண்டு Complementary பில்களை எடுத்து திரைப்படப் பாடலில் வருவது போல மானே தேனே பொன்மானே என்றெல்லாம் எழுதிஅப்போதே ஒரு சிறு பிளாக்மெயில் பத்திரிகை ஒன்றில் ஆய்வாளர் பிரபு குறித்து ஒரு அட்டைப்படச் அவதூறுச் செய்தி வெளிவருகிறது. 

இது நடந்து சுமார் 25 நாட்களுக்கும் மேலாகிறது. 

அதே கதையைத்தான் தற்போது சமூக ஊடகங்களிலும் வலம் வர வைத்திருக்கிறார்கள். 

இறுதியில் இது பொய் என்று பிலால் நிறுவனம் கடிதம் மூலம் மறுத்துள்ளது. 

ஆய்வாளர் பிரபு ஒரு கொலையாளியைத் தப்பிக்க வைக்க 10 கோடி ரூபாய் பெற்றுவிட்டார், என ஏதாவது சான்று, ஆதாரங்களோடு நிரூபித்தால் கூட அதில் ஒரு logic இருக்கும். காரணம் ஒக்கியம் துரைப்பாக்கம் காவல் நிலையப் பகுதி OMR சாலையில் 25 ஆணடுகளாக IT கம்பெனி நிறைந்த மக்கள் வாழும் பகுதி 

பிலால் ஓட்டலில் பிரியாணி வாங்கியது, நாயர் கடையில் டீ வாங்கியது, வடநாட்டு பானி பூரி கடையில் சுண்டல் வாங்கியது, பாய் கடையில் பாயா வாங்கியது எல்லாம் ஒரு புகார் ?  தகுதி இல்லாத வதந்தி

இது அப்பட்டமான அவதூறு மட்டுமல்ல வெளிப்படையான மிரட்டலும் கூட. 

மேலும், தமிழ்நாட்டின் பத்திரிகை ஊடகத் தரம் எந்த அளவுக்கு இது போன்ற நபர்கள் மூலம் மட்டரகமாக மாறிவிட்டது என்பதற்கான சமூக வலைத்தளங்களில் கூட செய்தி நிறுவனமாக மாறகிறது மற்றுமொரு சான்று. 

காவல் துறை உள்ளிட்ட பல துறயினரில் ஒரு சிலர் தவறு செய்தால் அதைக் கண்டித்து எழுதும் பத்திரிகை ஊடகவியலாளர்கள் பத்திரிகை ஊடகம் தவிர சமூக வலைதளங்களில் எழுதும் நிலை குற்றம் என உணரவில்லை இவர்கள் மீது ஒக்கியம் துரைப்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் பிரபு துறை அனுமதி பெற்று இவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும்  என்பதே பலருது கருத்து.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...