ஆருத்ரா கோலடு நிறுவனம் தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
ஆருத்ரா கோல்டு நிறுவன நிதி மோசடி தொடர்பாக நவம்பர் மாதம் 26 ஆம் தேதி காலை முதல் சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சென்னை முகப்பேர் பகுதியிலுள்ள நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் வீட்டிலும், ஐஸ் ஹவுஸ் பகுதியில் முக்கிய நிர்வாகியாக பணியாற்றிய நபரின் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆருத்ரா நிறுவனம் பல்வேறு வட்டி சலுகைகளை அறிவித்து 1,04,433 பேரிடமிருந்து ரூபாய்.2,438 கோடிகள் வைப்புத் தொகையாகப் பெற்று மோசடி செய்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு 40 தனி நபர்கள், நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறை விசாரணையில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் கணக்குகளில் சுமார் ரூபாய்.2 ஆயிரம் கோடி பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் ரூபாய்.10 லட்சத்துக்கு மேல் நடைபெற்ற 1,230 பரிவர்த்தனைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் பெரும்பாலான பரிவர்த்தனைகள், பொதுமக்களின் வைப்புத் தொகையைத் தனிப்பட்ட மற்றும் வர்த்தகம் அல்லாத நோக்கங்களுக்காக நிறுவனத்தின் பல வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் இதில் ஆருத்ரா நிறுவனத்தின் சில இயக்குநர்கள் பெயரளவிலானவர்கள் என்றும், மோசடியில் அவர்களுக்கு எந்தப் பங்குமில்லை என்றும் தெரியவந்ததையடுத்து நேற்று முன்தினம் சென்னை, காஞ்சிபுரம், மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 21 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய்.1.50 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள், ரூபாய்.22 லட்சம் பணம், மோசடி தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், சொத்துரிமை ஆவணங்கள், நிதிப் பட்டுவாடா மற்றும் பிற முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் அவரது மனைவி ஐக்கிய அரபு அமீரகத்தில் தலைமறைவாக இருப்பதாகத் தெரியவந்த நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
ரூபாய்.2,438 கோடி மோசடி வழக்கில் சிக்கிய ஆருத்ரா நிறுவ னம் தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள்.
சென்னை அமைந்தகரை மேத் தா நகரை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் "ஆருத்ரா கோல்டு டிரெடிங் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிறுவனம், தங்களிடம் ரூபாய்.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூபாய். 36 ஆயிரம் வட்டியாக மட்டுமே வழங்கப்படும் என கவர்ச்சியான விளம்பரம் செய்ததை நம்பி பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடாக பணத்தைக் சேமித்தார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வங்கி கணக்குகளில் இருந்த ரூபாய்.96 கோடி முடக்கப்பட்டுள்ளது. மேலும், ஆருத்ரா கோல்டு நிறுவனத்துக்கு சொந்தமான ரூபாய்.23.44 கோடி மதிப்புள்ள 127 சொத்துகளையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் முடக்கிவைத்தனர்.
அந்த நிறுவனம், 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேரிடம் முதலீட்டுத் தொகையாக ரூபாய்.2 ஆயிரத்து 438 கோடி பெற்று மோசடி செய்த தாகப் புகார் எழுந்தது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறை அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள் அவர்களில் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முறைகேடான பணப் பணபரிமாற்றத் தடை சட்டத்தின்( PMLA )கீழ் அமலாக்கத்துறையும் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் மீது வழக் குப்பதிவு செய்து விசாரித்தது.








கருத்துகள்