தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டிய இடங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள்,ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் வளாகங்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆகும்.
மேலும் தெருநாய்கள் உள்ளே நுழையாதவாறு இந்த இடங்களைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட வேண்டுமன உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட இடங்களில் கைப்பற்றப்படும் தெருநாய்களை மீண்டும் அதே இடத்தில் விடக்கூடாது எனவும்,
தற்போது நடைமுறையிலுள்ள விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு (ஏபிசி) விதிகளின்படி கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்காகப் பிடிக்கப்படும் நாய்களைப் பிடித்த இடத்திலே மீண்டும் விடவேண்டும்.
"நாங்கள் காரணமாகத்தான் தெருநாய்களைப் பிடித்த இடத்தில் விடக்கூடாது எனத் தெரிவித்துள்ளோம். ஏனென்றால் அதை அனுமதிப்பது இந்த வளாகங்களில் தெருநாய்களை அகற்ற வேண்டும் என்கிற நோக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையே நீர்த்துப் போகச் செய்துவிடும்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியூள்ளது.
இந்திய விலங்குகள் நல வாரியம், கல்வி நிலையங்கள் மற்றும் வளாகங்களில் தெருநாய்கள் மேலாண்மை மற்றும் தெருநாய்க் கடி தடுப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நான்கு வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் எனவும், இந்த நெறிமுறைகள் நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டுமெனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல நாடு முழுவதும் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளின் நிலை என்ன என்பது தொடர்பாகவும் எட்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவில் கடந்த மூன்றாண்டுகளாக ரேபிஸ் எனும் வெறிநாய் கடித் தொற்று மரணங்கள் அதிகரிக்கின்றன. 2024ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் அதிக ரேபிஸ் மரணங்கள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் அளித்த பதில் கூறுகிறது. அடுத்த நிலையில் கர்நாடகா (42) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (39) என்ற நிலையில் உள்ளன.
தேசிய அளவில் ரேபிஸ் மரணங்கள் (ஆண்டு வாரியாக)
2022 - ஆம் ஆண்டு 22
2023 -ஆம் ஆண்டு 121
2024 - ஆம் ஆண்டு 180 அதில் (தமிழ்நாட்டில் மட்டும் - 43) தமிழ்நாடு முழுவதும் புதிதாக 78 விலங்குகள் காப்பகங்கள் மற்றும் 138 ஏபிசி மையங்கள் அமைக்க அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"வளாகங்களில் உள்ள நாய்களை அப்புறப்படுத்தினால் அந்த இடத்தில் புதிய தெருநாய்கள் வந்துவிடும். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கெல்லாம் வேலிகள் அமைத்து முடிக்க நீண்ட காலமாகும். நாய்களை ஒரே நேரத்தில் பிடிப்பதற்கான மனித வளம் இருந்தாலும் ஊழல் தான் மிஞ்சும்
"நாய்களைப் பிடிப்பதை விடவும் அவற்றை அடைத்து வைப்பது தான் பெரிய சிக்கலாகும் "உச்ச நீதிமன்றம் முன்னர் ரேபிஸ் பாதிப்பு உள்ள நாய்களை அடைத்து வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. தற்போது அனைத்து நாய்களையும் அடைக்குமாறு கூறியுள்ளது.
இதற்கு மேலும் அதிகப்படியான காப்பகங்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கான நிதி ஆதாரமும் தற்போது அரசு செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் இதைச் செயல்படுத்துவது சாத்தியமற்றது. நீதிமன்றத்திடம் கூடுதல் அவகாசம் கேட்பதற்கான முடிவில் தான் பீட்டா உள்ளிட்ட நம் கலசாரத்திற்கு ஒத்துவராத அயல்நாட்டு ஊதா சிலுவைச் சங்கமான பீடடா உள்ளிட்ட அமைப்புகள் உள்ளது. தெரு நாய்களுக்கு சென்னை, மதுரை, கோயம்பத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாநகராட்சிகள் ராபி மற்றும் பல vaccination, கருத்தடை உட்பட, போட்டு வருகிறது என்கிறார்கள். அதில் ஊழல் உண்டு கழுத்துப் பட்டையும் கட்டி இருக்குது. Track பண்ண குறியீடு இருக்கும். ஒரு நாய்க்கு சராசரியாக நமது வரிப் பணத்தில் 5000 ரூபாய் வயை செலவு செய்து இப்போதைக்கு 20,000 நாய்களுக்கு மேல் இந்த ஊசி, பட்டை போடப்பட்ட தகவலும் வருகிறது. அதில் 10 நாய்கள் நிச்சயம் பலன் பெற்றிருக்கும் மீதம் உண்மையா என்பது பின்னர் தெரியும். இன்னும் 80,000 நாய்கள் இருக்கலாம்.
சரி கடித்து விட்டது பட்டை போட்ட நாய் ஒன்று. மருத்துவரிடம் சென்று anti rabbie ஊசி தேவையா என்று கேட்டால், "எதற்கும் safety போட்டு விடுங்கள்" என்று எல்லா ஆங்கில மருத்துவர்களும் கூறுகிறார்கள். அது 4000 ரூபாய் ஆகும்.
இதற்கெதற்கு ஒரு நாய்க்கு இவ்வளவு பெரிய செலவு. அப்புறம் சொத்து வரி, தண்ணீர் வரி,மின்சார வரி, நூலக வரி ஏற்றாமல் இதில் என்ன செய்ய முடியும்!! அறிவியல் முறைபடி culling and population maintain பண்ணுவது தான் சிறந்த முறை. முட்டாள்களை புறம் தள்ளவும். நாய்களுக்கு சோறு வைக்கும் யாரும் அதே நாய்க்கு ஊசி போட முன் வருவானா எனபது எழுவினா அல்லது பணம் கொடுப்பானா பாதிக்கப்பட்டுக் கடிபட்டவருக்கு? என்பதே. நாய்களுக்கு சேவை செய்வதாகக் கூறி அரசு பணத்தை மோசடி செய்யும் உயர் அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இங்கு அதிகம், மேலும் பத்து சதவீதம் உள்ள நபர்கள் தான் உண்மையாக வாங்கிய பணத்தை முறையாகப் பயன்படுத்தி சேவையைத் தொடர்கிறார்கள்.தெருநாய்கள் விவகாரத்தில் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள் எட்டு பேரும், மாநிலச் செயலாளர்கள் 26 பேரும், நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு.
"பிரமாணப் பத்திரம் ஏன் தாக்கல் செய்ய வில்லை?" என்பது முதல் கேள்வி.
தெருநாய்கள் அதிகம் இருக்கிற டெல்லி மீதுதான் கடுங்கோபம் காட்டியுள்ளனர் நீதியரசர்கள். இந்த நிலையில் எம்.எம். காலனியில் ஒரு வீட்டில் நிறைய நாய்களை வளர்க்கிறார்கள். அவைகள் கடித்து எதிர் வீட்டில் வசிக்கும் தாய்-மகள், காயத்தோடு மருத்துவ மனையில் சேர்ந்த நிலையில் முனிசிபாலிட்டி வலையில் இரண்டு மட்டுமே சிக்க, எஞ்சியவை வீட்டிலயே ஒளிந்து கொண்டனவாம். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து சென்னை எம்.எம். காலனி காவலநிலையத்தில் விசாரணை. வளர்த்த நபர் மீது நடவடிக்கை வரலாம்.






கருத்துகள்