ரௌடி நாகேந்திரன் சாகவில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அரசு தப்ப வைத்ததென
நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் குற்றச்சாட்டு.சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இறந்து போன கைதியான ரௌடி நாகேந்திரன் உயிரோடிருப்பதாக நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தரப்பு வாதத்தில் தகவல்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப் பட்ட, ரௌடி நாகேந்திரன் மரணமடையவில்லை, அவரை தமிழ்நாடு அரசு தப்ப வைத்ததாக கொலயான ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தரப்பில் சென்னை மாவடட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற் றச்சாட்டு முன் வைக்கப் பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு அவர் வீட்டின் அருகிலாவெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட் டார்.
இந்த வழக்கில் ரௌடி நாகேந்திரன், அவனது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 குறறவாளிகள் எனக் கைது செய்யப்பட்டனர். உடல்நிலை பாதிப்பு எனக் காரணம் கூறி நாகேந்திரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சமீபத்தில் மரணம் அடைந்ததாகத் கூறப்பட்ட நிலையில்
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.'
அதேவேளையில் மனுதா ரர்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து கொலையான ஆம்ஸ்ட் ராங்கின் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்திருந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த்து.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்ட போதும், வழக்கு கோப் புகளை மாநிலக் காவல்துறை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவில்லை ஓராண்டுகளாக மனு தாரர்கள் சிறையில் இருந்து வருகிறார்கள். எனவே, மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என வாதாடினார்.
கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தரப் பில் ஆஜரான பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான வழக்குரைஞர் ஆனந்தன், இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்பதால் தான் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட் டுள்ளது. இதுபோன்ற சூழலில் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள்' என வாதிட்டார்.
மேலும், 'இந்த வழக்கில் குற் றம் சாட்டப்பட்ட ரௌடி நாகேந்தி ரன் சமீபத்தில் மரணம் அடைந்ததாகக் கூறுவதில் உண்மை இல்லை. அவர், உண் மையிலேயே இறக்கவில்லை. தமிழ்நாடு அரசு அவரை தப்ப வைத்து விட்டது' என பரப ரப்புக் குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.
ஜாமீன் மனுக்கள் மீதான வாதங்கள் நிறைவடைந்த நிலையில் 10- ஆம் தேதி நாளை இந்த மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார். மற்ற ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையும் அதே தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் நடந்த இந்த விசாரணையின் போது தெரிவித்த தகவல்கள் குறித்து வழக்குரைஞர் ஆனந்தன் கூறும்போது, ‘ரௌடி நாகேந்திரன் சிறையிலிருக்கும் போதே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிவிடுவேன் என மிரட் டினார்.
அவ்வாறு அவர், அப்ரூவ ராக மாறினால் இந்தக் கொலை வழக்கில் முக்கிய அரசியல் புள்ளிகள் சிக்குவார்கள். அதனால், ஒரு நாடகத்தை அரங்கேற்றி ரௌடி நாகேந்திரனை வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கும் வகையில் அவரை தப்பிக்க விடுவதென்றும், இதற்காக அவர் இறந்து விட்டாரென அறிவிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது.
அந்த அடிப்படையில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டு முக்கிய அரசியல் பிரமுகர்கள் இந்தக் கொலை வழக்கில் சிக்குவது தடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ரௌடி நாகேந்திரனும் உயிரோடு தப்பவிடப்பட்டுள்ளார். இறந்து போன வேறொரு நபரின் முகத்தை நாகேந்திரனின் முகத்தைப் போன்று 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து ரௌடி நாகேந்திரன் இறந்து போனதாக உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரௌடி
நாகேந்திரனின் குடும்பத் தினரிடம் ஒப்படைக்கப்பட்ட உடலின் முகத்தைப் பார்த் தாலே இது தெரியும். நாகேந்திரனை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதன் மூலம் இந்த நாடகம் உறுதி செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.ஸ்டான்லி மருத்துவமனையில் 9 ஆம் தேதி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின், அவரது உடல் மூத்த மகனான அஸ்வத்தாமனிடம், மறுநாள் காலை ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சென்னை, வியாசர்பாடியில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதிச்சடங்கில் அசம்பாவிதங்களைத் தடுக்க, 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், இறுதி சடங்கிற்காக வைக்கப்பட்டி ருந்த நாகேந்திரனின் உடல் முன், அவரது இளைய மகன் அஜித்ராஜ் - ஷகினா ஜோடி, மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அப்போதே பலருக்கும் லேசாக சந்தேகம் இருந்த நிலைமை ஆனால் கூறப்பட்ட காரணம் 2023 ஆம் ஆண்டில் நிச்சயிக்கப்பட்ட திருமணம், பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்த நிலையில், நேற்று பிரேதம் முன் நடந்தது. ரௌடி நாகேந்திரனின் இறுதிச் சடங்கிற்காக, அஜித்ராஜ் 9ஆம் தேதி சிறையில் இருந்து பரோலில் வந்தது குறிப்பிடத்தக்கது. மாலை 4:00 மணியளவில், நாகேந்திரனின் உடல் வியாசர்பாடி, முல்லை நகர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கருத்து பலரையம் குழப்பமடையச் செய்கிறது. "உலகில் மிகப் பெரிய சக்தி நெருப்பு. தூண்டப்படாதவரை அது மரத்துள் வாழ்கிறது. சீண்டப்பட்டால் மரமே உணவாகிறது."
இது விதுர நீதி மனிதர்கள் சிலரும் இப்படித்தான்.









கருத்துகள்