டெல்லி செங்கோட்டை அருகில் நவம்பர் மாதம் 10 ஆம் தேதி மாலை 6:52 மணியளவில், செங்கோட்டை மெட்ரோ நிலையத்திற்கு அருகாமையில் வெடித்ததில் 13 பேர் பலியாகினர் மற்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறித்து ஆராய
தேசிய புலனாய்வு அமைபபான NIA 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவைக் அமைத்துள்ளது. வெடிப்பு நிகழ்ந்தது, நெரிசலான பகுதியில் முழுவதும் உடல்கள் சிதறிக் கார்களும் சேதமடைந்தன. அதில்
ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (ஐஜி), இரண்டு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி), மூன்று போலீஸ் சூப்பிரண்டுகள் (எஸ்பி) மற்றும் நான்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் (டிஎஸ்பி) ஆகியோர் என்ஐஏ குழுவில் ஒரு பகுதியாக இருப்பார்கள், இது ஏஜென்சியின் டைரக்டர் ஜெனரலான விஜய் சாகரே ஐபிஎஸ் தலைமையில் உள்ளது. தாக்குதல் நடத்தியவர்களையும் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளையும் அடையாளம் காண, குழு விரிவான விசாரணையை மேற்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மறுஆய்வுக்குப் பிறகு, மத்திய அரசு நிறுவனங்களுக்கு பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தினார், நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அன்று இந்த வழக்கு முறையாக NIA வுக்கு மாற்றப்பட்டது. புலனாய்வுப் பணியகத்தின் (ஐபி) தலைவர்களுக்கும் என்ஐஏவுக்கும் இடையிலான உயர்மட்டக் கூட்டம் விசாரணையை ஒருங்கிணைக்க நடத்தப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் விசாரணையின் ஒரு பகுதியாக, ஜெய்ஷ் தொகுதி தொடர்பான அனைத்து வழக்கு டைரிகளையும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை, டெல்லி காவல்துறை மற்றும் ஹரியானா காவல்துறையிடமிருந்து NIA அதன் செயல்பாட்டு அமைப்பு மற்றும் நிதி ஆதரவை மதிப்பிடும். டெல்லி முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை புலனாய்வு அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன. விசாரணை
அலுலுவலர்கள் சமூக ஊடகத் தளங்களைக் கண்காணித்து வருகின்றனர் மற்றும் கார்குண்டுவெடிப்பு தளத்திலும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளிலிருந்தும் மொபைல் ஃபோன் தரவை பகுப்பாய்வு செய்து சந்தேகத்திற்குரிய சந்தேக நபர்களையும் அவர்களின் தொடர்பு நெட்வொர்க்குகளையும் கண்டுபிடிக்கின்றனர். தீவிரவாத சதிச்செயல் குற்றவாளிகளான அந்த 5 டாக்டர்கள் குறித்து:-
செங்கோட்டை கார் குண்டுவெடிப்புக்கு, பெண் உட்பட ஐந்து டாக்டர்கள் மூளையாகச் செயல்பட்டுள்ளனர். டாக்டர்கள், சேவையில் கடவுளுக்கு நிகராகக் கருதப்படுபவர்கள். மக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய இவர்கள் இந்த ஐந்து நபர்கள் உயிரை பறிக்கும் கொடூரர்களாக மாறியுள்ளனர். அவர்களின் விபரங்கள்:
டாக்டர் முஸாமில் கனி ஃபுல் வாமாவைச் சேர்ந்த முஸாமில் கனி, பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்து வந் தவரைக் கைது செய்த பரிதாபாதின் தவுஜ் காவல்துறை, பரி என்ற பகுதியில் அவர் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து, 350 கிலோ அமோனியம் நைட்ரேட், பேட்டரிகள், துப்பாக்கி உள்ளிட்டவற்றைப் பறிமுதல்செய்தனர்.
அடுத்ததாக
டாக்டர் ஷாஹீன் சையத் உத்திரப் பிரதேசம் லட்சுமணபுரி, எனும் லக்னோவைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சையத், டாக்டர் முஸாமில் கனியின் தோழி, முஸாமில் கைதானதை அறிந்த ஷாஹீன், வீட்டிலிருந்த ஆயுதங்களை குப்பைத் தொட்டியில் வீசி எதுவுமே தெரியாதது போல வீசி இருந்தார்,. பயங்கரவாதக் கும்ப லுக்கு அப்பாவிப் பெண்களை ஆசைகூறி சேர்க்கும் வேலையிலும் ஈடுபட்டு வந்தவரைக் காவல்துறை கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஆதில் அகமது ராதர்: ஜம்மு - காஷ்மீரின் குல்காமைச் சேர்ந்தரை உத்திரப் பிரதேசத்தின் சஹாரன்பூரில் கைது செய்யப்பட்டார். இவரும் டாக்டர்கள் முஸாமில், உமர் ஆகி யோருடன், அல் பலாஹ் பல்கலையில் பணிபுரிந்தார். வெடிபொருட்கள், ஆயுதங் களை வாங்குவதில் தீவிரவாதிகளின் முக்கியப் புள்ளியாக இருந்தார்.
டாக்டர் உமர் நபி: புல்வாமா வைச் சேர்ந்த உமர் நபியும் அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராகப் பணியாற்றினார். டாக்டர்கள் முஸாமில், அடில் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளி. செங்கோட்டையில் வெடித்துச் சிதறிய காரை, இவர் ஒட்டியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அடுத்ததாக
டாக்டர் அகமது மொஹியுதீன் சையத்: சீனாவில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்ற தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், குஜராத் பயங்கரவாதத் -தடுப்புப் பிரிவினரால் நவம்பர் மாதம்., 8 ஆம் தேதியில் கைது செய்யப்பட்டார். ராஜேந்திர நகரில், 'ஷவர்மா' உணவகத்தை நடத்தி வந்தவர், சமூக ஊடகங்கள் மூலம் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக் கூறப்படுகிறது.








கருத்துகள்