மதுரை மாவட்ட கிராம உதவியாளரிடம் ரூபாய்.67.25 கோடி சொத்து
வருமானத்திற்கு மீறியது என ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு
மதுரை மாவட்டம் கிராம உதவியாளர் (தலையாரி) பணி தனது வருமானத்தை மீறி ரூபாய்.67.25 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் செக் கானுாரணியைச் சேர்ந்தவர் பாண்டி வயது 58. திருமங்கலம் தாலுகா கே.புளியங்குளததில் கிராம உதவியாளராகப் பணியில் உள்ளார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு
புகார் வந்தது.குறித்து விசாரித்த குழுவினர், ஆவணங்களின் அடிப்படையில் ரூபாய்.67.25 கோடிக்கு சொத்து சேர்த்ததை உறுதி செய்த நிலையில் வழக்குப்பதிவு செய்தனர்.
அதில், 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா ஏ.கொக்குளத்தில் பாண்டி, கிராம உதவியாளராகப் பணிபுரிந்தார். மாதச்சம்பளத்தை தாண்டி அவரது பெயரிலும், அவர் மனைவி ராணி, மற்றும் மகன்கள் பெயர்களிலும் சொத்து
சேர்த்துள்ளார். இவரது மூத்த மகன்
பிரபாகர், தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி மாளவிகா. உடல்நலக் குறைவால் பிரபாகர் இறந்ததை தொடர்ந்து, இரண்டாவது மகன் பிரகாஷூற்கு மாளவிகாவை திருமணம் செய்து வைத்தனர்.
இரு மகன்களின் பெயரிலும் சொத்து கள் இருக்கின்றன. இதன் அடிப்படையில் பாண்டி வருமானத்திற்கு மீறி இந்நிலையில் மாளவிகா குடும்பப் பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டார். பிரகாஷூம் கடந்தாண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதியில் மொத்தம் ரூபாய்.67 கோடியே 25 லட்சத்து 634 மதிப்புள்ள சொத்து சேர்த்துள்ளார். எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறுகையில், "இச்சொத்துகள் பெரும் மனைவி தரப்பில் இருந்து தரப்பட்டதாக பாண்டி கூறுகிறார். சொத்துக்கள் கைமாறிப் போகாமல் இருக்கவே மகனுக்கு செய்து வைத்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.




















கருத்துகள்