இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு,
வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் 18.01.2026 வரை நடைபெறும் எனவும்,
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27.12.2025 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 28.12.2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 03.01.2026 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 04.01.2026 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம்-6 ஐ உறுதிமொழிப் படிவத்துடன் (Declaration Form) சமர்ப்பித்து தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொரு வாக்காளரும், முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபனை தெரிவிக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பெயரை நீக்கம் செய்யக் கோரவோ படிவம்-7 ன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முகவரி மாற்றம் செய்யத் தேவையான சிறப்பு முகாம்கள் சீராக நடைபெறவும், இச்செயல் திட்டம் பயனுள்ளதாக அமல்படுத்தப்படவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என மாநித தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும்அரசு செயலாளர்.அர்ச்சனா பட்நாயக் தெரிவிதுள்ளார்.



கருத்துகள்