முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனித்து 120 இடங்களில் வெல்லும் தாவெக அதிர்ச்சி ஆய்வு முடிவுகள் ஆட்சியும் காட்சியும் மாறும்

திருமதி வி. கே.சசிகலா நடராஜன் வருகை பாஜகவில் அண்ணாமலை பொறுப்பு தற்காலிக ஓய்வு, 




நவெக விஜய் காங்கிரஸ் கூட்டணி இணைப்பு என தமிழ்நாடு அரசியல் களம் கலை கட்டுகிறதுகாங்கிரஸ் கட்சிக்கு திமுக தரும் 30 தொகுதியா அல்லது தவெக தரும் 78 தொகுதியா என்பது நாளை தெரியும் இந்த நிலையில் தனிக்கட்சி  தான் துவங்க ஆயத்தமாகிறார் அண்ணாமலை என்ற யூகம் வருகிறது முரண்டு பிடிக்கும் பாஜகவின் முன்னாள் தலைவர் தனது தந்தையைக் காரணம் காட்டி தற்போது அரசியல் செய்ய வேண்டிய நிலை ஏன் வந்தது பாஜக தொண்டர்கள் சோர்வடைந்த நிலையில் சரணடையும் பாஜக தலைமை 





டெல்லி தலைமை தன்னை பழிவாங்கி எடப்பாடி கே. பழனிசாமி கூறியதால் மாற்றிய தலைமை மீதான கடுப்பில் தான் தேர்தல் பணிகளில் இருந்து முன்னால் நிர்வாகியான அண்ணாமலை திடீரென விலகி இருப்பதாக தேசியக் கட்சியின் நிர்வாகிகள் முனுமுனுக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே தனிக் கட்சி தொடங்குவார் எனப் பேசப்பட்டு வந்தாலும், தற்போதை சூழலில் அந்தத் திட்டத்தை தள்ளி வைத்திருப்பதாகவும் அவரின் வார் ரூம் ஆதரவாளர்கள் தரப்பு கூறுகின்றனர்.

தேசிய கட்சியான பாஜகவின் தமிழ்நாடு பொறுப்புக்கு வந்த பின், தனது இஷ்டப்படி நிர்வாகிகளை ஆட்டி வைத்தவர் முன்னாள்  நிர்வாகியான அண்ணாமலை ஆனால் தொண்டர்கள் அவரை நம்பினர் விரும்பினர் பாஜக தமிழ்நாட்டில் அரும்பியது என்பதே உண்மை நிலை . கட்சியில் தன்னைத் தாண்டி வளர்ந்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தவருக்கு கடிவாளம் போட சீனியர்கள் பலரும் முயன்றனர். ஆனால் டெல்லி தேசிய தலைமை ஆதரவு இருந்ததால், முன்னால் நிர்வாகியான அண்ணாமலை பேச்சிற்கு யாரும் மறுபேச்சு பேச முடியாமலிருந்தனர். ஆடிட்டர் குருமூர்த்தி செய்த அரசியல் இதுவரை குழப்பம் நிறைந்த அரசியல் தான் அது வெற்றி பெறாது அது ஒரு மடத்தின் ஆதரவோடு சில ஆதரவாளர்களை திரட்டி பல அரசியல் பிரமுகர்களை நசுக்கி செய்த காழ்ப்புணர்ச்சி அரசியல்

ஆனால் கூட்டணிக்கு வரும் எதற்கும் துணிவான எடப்பாடி கே. பழனிசாமி போட்ட கண்டிஷனால் டெல்லி தலைமைக்கு வேறு வழி தெரியவில்லை. இதனால் உடனடியாக பாஜக நிர்வாகியான அண்ணாமலையை தூக்கி விட்டு, தென் மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை பதவிக்குக் கொண்டு வந்தது. அன்றைய தினமே கூட்டணியும் உறுதியான பின், அண்ணாமலைக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டனர்.

அண்மையில் வெளியான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் கூட முன்னால் நிர்வாகியான அண்ணாமலையின் பெயரோ, அவரின் ஆதரவாளர்கள் பெயரோ இடம்பெறவில்லை. அதேபோல் என்டிஏ பொதுக்கூட்டத்தில் அவருக்கான உரிய மரியாதையும் அளிக்கப்படவில்லை. இதனிடையே கோயமுத்தூர் கொங்கு மண்டலத்தை மையமாக வைத்து புதிய கட்சியைத் தொடங்கப் போவதாகவும் சில தகவல் வெளியாகியது.

 பாஜக முன்னால் நிர்வாகியான அண்ணாமலை பெயரில் ரசிகர் மன்றம் கூட தொடங்கப்பட்டன. இதனால் அவர் புதிய கட்சி தொடங்கலாமா என்று ஆலோசித்ததாக விவரம் அறிந்தவர்கள் பேசத் தொடங்கினர். இப்படியான சூழலில் தான் டெல்லியின் சாணக்கியர் உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பின் பெயரில் 2 முறை டெல்லிக்கு சென்றார் அண்ணா மலை. அதன்பின் சில கூட்டணித் தலைவர்களை மட்டும் சந்தித்திருந்தார்.

ஆனால் கூட்டணி இறுதியான நேரத்தில் கூட அண்ணாமலை அந்த இடத்தில் இருக்கவில்லை. சென்னையில் கூட்டணி இறுதியான போது, அவர் கோயம்பத்தூர் பகுதி யில் முகாமிட்டிருந்தார். இந்த நிலையில் தேர்தல் நெருங்கிட்ட சூழலில் அவர் வசம் 6 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. அந்த 6 தொகுதிகளையும் தேர்தலுக்கு தயார்ப்படுத்தவும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதில் விருகம்பாக்கம், மதுரை தெற்கு, காரைக்குடி, சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் திடீரென அவர் பணி பதவி இறக்கம் காரணமாக யூடர்ன் போட்டுள்ளார். தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தமிழ்நாடு தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது தந்தையின் உடல்நலன் காரணமாக பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகுவதாகக் கூறி நயினார் எடப்பாடி உள்ளிட்ட பலரையும் வாயை அடைத்திருக்கிறார்.











ஏற்கனவே தமிழ்நாடு நிர்வாகிகளை ஆலோசனைக்கு டெல்லி அழைத்த போது, திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகக் கூறி ஜாகா வாங்கினார். அன்றைய நாளில் மட்டும் 11 திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது தந்தை உடல்நலன் காரணமாக அரசியல் பணிகளிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்கிறார். இது தேசியக் கட்சியான பாஜக வட்டாரங்களில் சில முனுமுனுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் தலைவர் பதவியில் இருந்து இறக்கிய போதே அவருக்கு டெல்லி தலைமை சில உறுதிகளை கொடுத்திருக்கிறது. ஆனால் இதுவரை அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என்று புலம்பி இருக்கிறார். இதன் காரணமாக டெல்லி பாஜக தலைமை மீது அவர் தரப்பு கடுப்பில் இருப்பதாக தி நகர் பகுதி பாஜக கட்சிக்காரர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.




அதுமட்டுமல்லாமல் என்னதான் டெல்லி தலைமை மீது அதிருப்தியில் இருந்தாலும், அண்ணாமலை வெழியேறி புதிய கட்சி தொடங்கும் திட்டத்தை பற்றி எந்த பரிசீலனையும் செய்யவில்லை என்று அவரின் வார் ரூம் நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால் தேர்தல் நேரத்தில் அவர் பணிகளில் இருந்து விலகி இருப்பது பின்னடைவாகும் என்றும் அவரின் ஆதரவாளர்கள் பேசத் தொடங்கி இருக்கின்றன்ர். இதனால் டெல்லி தலைமை விரைவில் அண்ணாமலையுடன் பேச்சுவார்த்தை நடத்கும் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது.அண்ணாமலை விலகியது.. முழுக்க முழுக்க பாஜக திட்டம்!! என காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு  நெருக்கபான மற்றும் தற்போது திமுக ஆதரவாளராக உள்ள முன்னால் தலைமைச் செயலாளர் உறவினர் ஆன நடிகர் எஸ்.வி. சேகர் சொல்லும் தகவலை புறக்கணித்து விட முடியாது காரணம் அவர்வீட்டில் கெடடுப்போன பாலை மாற்றிக் கொடுத்த எடப்பாடி கே. பழனிசாமி நன்கு அறிவார்.

தமிழ்நாடு தேர்தல் பொறுப்பிலிருந்து அண்ணாமலையாக விலகவில்லை, அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி. சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.














இதுகுறித்து எஸ்.வி.சேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தேர்தல் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகவில்லை. அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.

அண்ணாமலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டால் ஒரு தொகுதியிலும் பாஜக வெற்றி பெறாது என்பது நயினார் நாகேந்திரனுக்கும் எடப்பாடி கே.பழனிசாமிக்கும் தெரியும். அதனால் இவரை பொறுப்பாளராக அறிவித்த 6 தொகுதிகளிலும் நிச்சயம் பாஜக வெல்லாது என்பது தெரியும்.

மேலும் தனது தலைமையில் தமிழ்நாடு பாஜக நிறைய இடங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெயிக்கவில்லை என்கிற போது வேறு தலைவரான நயினார் நாகேந்திரன் தலைமையிலான பாஜக வென்றுவிட கூடாது என்ற எண்ணம் கொண்டவர் அண்ணாமலை.

கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தன்னைத் தவிர வேறு யாரும் வெல்லவே கூடாது என்ற எண்ணத்துடன் தேர்தல் பணியாற்றினார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெல்லாததற்கு காரணம் அண்ணாமலை தான். இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்தார். (இது அவர் மீதான வெறுப்பு கரணமாக பதிவு) என நாம் எடுத்துக் கொள்ள முடியும்.


தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026 ஏப்ரல் மாதம் நடத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் ஜரூராக பணியாற்றி வருகிற நிலையில் தமிழ்நாடு பாஜக சார்பில் பேரவைத் தொகுதிகளுக்கு தொடர் சுற்றுப்பயணம் செல்ல உள்ள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் அண்ணாமலைக்கு சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டிருந்தார்.


இந்த நிலையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் பார்த்துக் கொள்ள வேண்டியது தலையாய கடமையாகும். இதனால் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.மாநில தலைவர் இல்லை, எந்த ஒரு அதிகாரமும் இல்லை,

 ஆனால் ஒரே ஒரு பேட்டியின் மூலம் இன்று தமிழ்நாடு முழுவதும் அவர் மட்டும்தான் தலைப்பு செய்திமாக 

தமிழ்நாட்டின் எதிர்காலம் யாருக்கு என்று தெரியும்,  

 தன்மானம் என்பது அரசியல்வாதிகளுக்கு இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் மத்தியில்,

 தன்மானமிக்க ஒருவன் இருந்தால் அனைவருக்கும் அது கசக்கத்தான் செய்யும்,

 காலமும், நேரமும் அனைவருக்கும் சொந்தமானது இல்லை,டெல்லி அதிகார மையம் எடுத்த ரகசிய சர்வே படியே அரசிமல் சதுரங்கக் காய்கள் நகர்கிறது . நடிகர் விஜய்யின் தவெகவுக்கு 120 தொகுதிகள் உறுதியாக கிடைக்கும் என்ற உளவுத்துறை தகவல் காரணமாக.. அதிர்ச்சியில் பாஜக வட்டாரம். திமுக ஜெயிக்காது என்ற ஒரே திருப்தி தான் தற்போது அமித்ஷாவுக்கு.. திமுகவை தோற்கடிக்க அமித்ஷா திட்டம் போட்டார்.. ஆனால் அவர் வேலையை நடிகர் விஜய் தவெக மூலம் பார்த்துவிட்டார், இனிமேல் தமிழ்நாட்டில் கூட்டணி என்ற பருப்பு வேகாது என்பது தெளிவாகிறதா?


தமிழ்நாடு அரசியலில் இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தை டெல்லி மேலிடம் நடத்திய ரகசிய சர்வே முடிவுகள் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுவாகத் தேர்தல் நெருங்கும் வேளையில் உளவுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் டெல்லி அதிகார மையம் தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை கண்டறிவது வழக்கம். அந்த வகையில், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 120 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுவது அரசியல் வட்டாரத்தை ஊழல் ஆட்சியாளர்களை அதிர வைத்துள்ளது. இந்த தகவல் கசிந்த உடனே பாஜகவின் டெல்லி தலைமை மற்றும் தமிழ்நாடு நிர்வாகிகள் மத்தியில் ஒருவித பதற்றமும், அதே சமயம் கணிக்க முடியாத மௌனமும் நிலவி வருகிறது.

பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்திக் கொள்ள பல வியூகங்களை வகுத்து வந்தது. குறிப்பாக திமுகவின் வாக்கு வங்கியை சிதைப்பதன் மூலம் தங்களது செல்வாக்கை உயர்த்தலாம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கணக்குப் போட்டிருந்தனர். ஆனால், இந்த சர்வே முடிவுகள் பாஜகவின் கணக்குகளை தலைகீழாக மாற்றியுள்ளன. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, நடுநிலை வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு பெருமளவில் தவெக பக்கம் சாய்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாஜகவின் வளர்ச்சி வேகம் தடைபட்டுள்ளதோடு, அக்கட்சி எதிர்பார்த்த இரட்டை இலக்க இடங்கள் என்பது தற்போதைய சூழலில் கேள்விக்குறியாக மாறியுள்ளது பாஜக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மறுபுறம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இந்த செய்தியில் ஒரு சிறிய திருப்தி இருப்பதாகவே கூறப்படுகிறது. அது என்னவென்றால், வரும் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதுதான். திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதில் அமித்ஷா மிகவும் உறுதியாக இருந்தார். அதற்காக பல்வேறு அரசியல் காய்களை அவர் நகர்த்தி வந்த நிலையில், இப்போது ரகசிய சர்வே முடிவுகள் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்று சுட்டிக்காட்டுவது அவருக்கு ஓரளவுக்கு நிம்மதியைத் தந்துள்ளது. இருப்பினும், அந்த வெற்றியை பாஜக கூட்டணி அறுவடை செய்யாமல் நடிகர் விஜய் தட்டி செல்வது என்பது பாஜகவின் நீண்ட காலத் திட்டங்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாகவே பார்க்கப்படுகிறது.

உண்மையில், திமுகவை தோற்கடிக்க அமித்ஷா என்னென்ன திட்டங்களை வைத்திருந்தாரோ, அந்த வேலைகளை விஜய் மிக எளிதாக செய்து முடித்துவிட்டாரா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் ஒரு வலுவான மாற்று சக்தியிடம் செல்வது ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அமைச்சர் அமித்ஷா வகுத்த வியூகங்களை விட, நடகர் விஜய்யின் நேரடித் தொடர்பு மற்றும் அவரது மக்கள் செல்வாக்கு களத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் தவெகவின் எழுச்சி அசுர வேகத்தில் இருப்பதாக இந்த சர்வே முடிவுகள் கோடிட்டு காட்டுகின்றன.

தமிழ்நாட்டில் இனிமேல் ‘கூட்டணிப் பருப்பு வேகாது’ என்ற எதார்த்தமான உண்மையை இந்த ரகசிய சர்வே உணர்த்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். வழக்கமாக அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைத்து சில இடங்களை பெற்று வந்த தேசிய கட்சிகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணி. நடிகர் விஜய் கட்சி தவெக தனித்து போட்டியிட்டு 120 இடங்களை நெருங்குவார் என்றால், அது தமிழ்நாடு அரசியலில் பல ஆண்டுகளாக நிலவி வந்த இருமுனை போட்டியை உடைத்து எறியும். மக்கள் இப்போது பெரிய கட்சிகளின் கூட்டணிக் கணக்குகளை விட, ஒரு புதிய மாற்றத்தையே விரும்புகிறார்கள் என்பது இந்த ரகசிய ஆய்வின் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது.

இறுதியாக, இந்த சர்வே முடிவுகள் ஒருபுறம் உற்சாகத்தையும் மறுபுறம் பாஜகவுக்கு கலக்கத்தையும் கொடுத்திருந்தாலும், தேர்தல் களம் என்பது எப்போதும் மாற்றங்களுக்கு உட்பட்டது. ஆனால் டெல்லி வரை சென்றுள்ள இந்த ‘விஜய் மேஜிக்’ பற்றிய தகவல், தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கப் போவதை உறுதிப்படுத்துகிறது. திமுகவை வீழ்த்த அமித்ஷா போட்ட திட்டத்தை விட, விஜய்யின் வருகை அதிக விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வரும் மாதங்களில் கூட்டணிகள் மாறலாம், புதிய வியூகங்கள் வகுக்கப்படலாம், ஆனால் 120 தொகுதிகள் என்ற அந்த ரகசிய இலக்கம் தமிழ்நாடு அரசியலின் தற்போதைய ஹாட் டாபிக் என்பதில் மாற்றமில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...