முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போலி ஆருடம் கூறும் காலி காமுகனுக்கு பாலியல் வழக்கில் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை

போலி ஆருடம் கூறும் காலி காமுகனுக்கு பாலியல் வழக்கில் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை.



சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் ஆருடம் பரிகாரம் என்ற பெயரில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ராமகிருஷ்ணனுக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூபாய் 2 லட்சம் அபராதமும் விதித்து போக்சோ வழக்கில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது  இத்தகைய பாலியல் குற்றங்களுக்கு போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்நில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு மூலம் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட குற்றவாளிக்கு, இப்போது விசாரணை முடிவில் தண்டனை உத்தரவு விரைவு நீதிமன்றம் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்த 





போலி ஆருடம் பார்த்த ராமகிருஷ்ணன் எனும் குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை சிவகங்கை நீதிமன்றம்  தீர்ப்பு






 சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போலி ஆருடம் பாரத்தவருக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட விரைவு நீதிமன்றம்  தீர்ப்பளித்தது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் மானகிரி இராமகி ருஷ்ணன் (வயது 52). ஜோதிடர். இவரிடம் கடந்த 2021ஆம் ஆண்டு, ஒரு பெண் தன் னுடைய 18 வயது மற்றும் 14 வயதுடைய மகள்களுடன் ஜோதிடம் பார்க்க வந்துள்ளார். இருவரும் சரியாக படிக்கவில்லை என பெண் கூறியுள்ளார். இதனையடுத்து இருவ ருக்கும், பரிகார பூஜை செய்ய வேண்டும் என ஜோதிடர் கூறியுள்ளார். இதை நம்பிய அந்த பெண், மகள்களுடன் ஜோதிடர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை ஒரு அறையில் தனியாக இருக்கும்படி கூறிவிட்டு, இரண்டு சிறுமிகளையும் மற்றொரு அறைக்கு அழைத்துச் சென்று ஆருடம் பார்ப்பவர் பலாத்காரம் செய்துள்ளார்

இந்த தகவலை யாரிட மும் தெரிவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு தெரி வித்தால் தாயும், தந்தையும் இறந்து விடுவார்கள் என்றும் கூறியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமிகள் இருவரும், இது குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர். இரண்டு சிறுமிகளுக் கும் அடிக்கடி உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. ஆண்டுக்கணக்கில் உடல்நலப் பாதிப்பு தொடர்ந்ததால், இருவரையும் மருத்துவமனையில் பலாத்காரம் செய்ததை சேர்த்து பரிசோதனை செய்துள்ளனர். அதில் பால்வினை நோயால் சிறுமிகள் பாதிக்கப்பட் டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமிகளிடம் விசாரித்த போது, ஜோதிடரிம் அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்,  போலி ஆருடம் கூறும் நபர் ராமகிருஷ்ணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கின் விசாரணை, சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன், குற்றம் சாட்டப் பட்ட போலி ஆருடம் கூறும்  குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை, ரூபாய் .2 லட்சம் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட 2 சிறுமி களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசுக்கும் உத்தரவிட்டார். சிவகங்கையில் போக்சோ நீதிமன்றத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் முதல் முறையாக அதிகபட்ச தண்டனையாக ஒரு குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2023-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில், 23.02.2026 ல் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

குற்றவாளிக்கு நான்கு குற்றச்சாட்டுகளில் தலா 50 ஆண்டுகள் வீதம் மொத்தம் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் .2,00,000 அபராதம் விதிக்கப்பட்ட வழக்கில் திறம்பட குற்றப் புலன் விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆத்மநாதனுக்கு சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சிவ பிரசாத், இ.கா.ப., பாராட்டுதா தெரிவித்துள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...