முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசியலென்பது தற்போது தொழில் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

முன்னர் மண்டைவெல்லம் விற்ற சிலுவம்பாளையம் பழனிசாமிக்கு வேலை போட்டுக் கொடுத்ததாக அமைச்சரின் தாக்கு!


காங்கிரஸ் கூட்டணியை பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொள்வார்  திமுக கூட்டணிக்கு கங்கிரஸ் கட்சி வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும், காங்கிரஸில் ஆளில்லை, நாம் இல்லாமல் காங்கிரஸ் கட்சி அரசியல் நடத்த முடியாது என திமுகவின் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசியது தான் தற்போது பேசுபொருளாகிறது மேலும், மண்டைவெல்லம் விற்ற எடப்பாடி (சிலுவம்பாளையம்) பழனிசாமிக்கு நான் தான் பொதுபணித்துறை அமைச்சராக இருந்த போது வேலை போட்டுக் கொடுத்தது  எனப் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

மதுரை ஆனையூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தலை குனியாது எனும் தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடந்ததில் தமிழ்நாடு வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ஆர்.எஎஸ்.இராஜகண்ணப்பன் மற்றும் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்த்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்

பொதுக் கூட்டத்தில் அமைச்சர் இராஜகண்ணப்பன் பேசுகையில்," மதுரை கிழக்குத் தொகுதி சிறப்பான அம்சமான தொகுதி. தென்மாவட்டத்தில் உள்ள 58 தொகுதிகளில் 53 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். நாம் தற்போது பலரைத் தோற்கடிக்க வேண்டும். இங்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவைத் தோற்கடிக்க வேண்டும்.



மத்திய அரசு நியாயமானதைச் சொன்னால் ஏற்போம். நியாயமற்றதைச் சொன்னால் ஏற்க மாட்டோம். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நமக்கு மோசமான அளவில் நிதி கொடுக்கிறார்கள். பீஹார் உத்தரபிரதேசத்திற்கு அதிக நிதியைக் கொடுக்கிறார்கள். அதிமுக என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு முடிந்து விட்டது. அங்கிருந்த தொண்டர்கள் எல்லோரும் இங்கு வந்துவிட்டார்கள். நிர்வாகிகள் சிலர் சீட்டுக்காக அங்குள்ளனர். நான் நிறைய தோல்விகளைச் சந்தித்துள்ளேன். அதற்காக எப்போதும் வருத்தப்படவில்லை. மிட்டா மிராசுகளை பண்ணையார்களை எதிர்த்து உருவானது தான் திமுக,




காங்கிரஸ் கூட்டணியை பற்றி முதல்வர் பேசிக்கொள்வார். வந்தால் வரட்டும். வராவிட்டால் போகட்டும். காங்கிரஸைப் பற்றி நான் குறை சொல்லவில்லை. காங்கிரஸில் ஆள் இல்லை. நாம் இல்லாமல் காங்கிரஸ் அரசியல் நடத்த முடியாது. அது முதல்வர் முடிவு எடுத்துக்கொள்ளட்டும். தவெக பெரிய கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இல்லை புதிதாக கட்சி தொடங்குவது பெரிய விஷயமில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. மதுரையில் மாநாடு நடைபெற்றது அங்கு யார் யார் வருகிறார் என்று வண்டியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான்கு பேர் தான் பெரிய ஆட்களாக இருந்தார்கள். மற்றவர்கள் 15 வயதுள்ள ஆட்கள் அதிகமாக இருந்தார்கள். எம்ஜிஆர் திமுகவில் இருந்து ஒரு சின்ன அரசியல் செய்தார். எம்ஜிஆர் 30 ஆண்டுகள் திமுகவில் இருந்ததால் தான் பக்குவப்பட்டார். நமது முதல்வர் 55 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவர். யார் பின்னால் எங்களைப் போன்றவர்கள் செல்ல வேண்டும் என உள்ளது. எனக்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏ ஆனவர். என்னைச் சந்திக்க ஜெயலலிதா அழைத்த போது சும்மா சென்று வா எனச்சொன்ன தலைவர் கருணாநிதி. என்னைப் பிள்ளை போல வளர்த்தவர் கருணாநிதி. (இவரை அடையாளப்படுத்தியவர் ஜெயலலிதா)

அரசியல் தலைவருக்கு இலக்கணமானவர் கருணாநிதி. நான் இளையான்குடியில் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற போது என்னை அதிமுக கட்சிக்கு மீண்டும் அழைத்தவர் ஜெயலலிதா. நான் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் போது 64ஆயிரம் பேருக்கு வேலை போட்டுக் கொடுத்தேன். இப்போது அப்படிப் போட முடியவில்லை. மந்திரி பதவி என்பது வரும் போகும். அதிமுகவில் இப்போது இருப்பவர்கள் தலைவர்கள் இல்லை. ஒருகாலத்தில் மண்டைவெல்லம் விற்றவர் எடப்பாடி பழனிசாமி. தொழில் நஷ்டமடைந்து என்னிடம் வந்தார். நான் எடப்பாடி பழனிசாமிக்கு வேலை போட்டுக் கொடுத்தவன். பாஜகவின்

அமித்ஷா எடப்பாடிக்கு எதிராக 

பின்பு செங்கோட்டையனை அழைத்து வந்தார். தற்போது அமித்ஷா பிடியில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். அங்கு தங்கமணி வேலுமணி வீரமணி எல்லாம் மணி மணி என உள்ளனர். நன்றாகச் சம்பாதித்து இன்று பெரிய கோடீஸ்வர மணிகளாக எடப்பாடி உள்ளார். வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படும் இயக்கம் திமுக அல்ல.

ஸ்டாலினை விட்டுவிட்டால் நமக்கு நல்லதல்ல. குறை ஒன்றும் இல்லை கோவிந்தா என்பது போல யாருக்கும் எந்தக்குறையும் இல்லை. அரசியல்வாதி என்பது தொழில் தான்" என்றார். ஆஹா இந்த நிலையில் ரூபாய்.6550 கோடிகளை இன்று காலை 1.31 கோடி பெண்மணிகளுக்கு கொடுத்து வாக்குகளை வேட்டையாடுகிறது. அவர் சொன்னதுபோல அரசியல் தொழிலில் முதலீடு செய்கிறது ஆரியர் எதிர்ப்பு திராவிட மாடல், பணம் கொடுப்பது தான் இங்கு தோல்வியை உறுதிப் படுத்துவதாகப் பேசப்படும்! எல்லாம் சரி திமுகவின் திருமங்கலம் சூத்திரம் என்பது அந்தக் கட்சிக்காரன் பணம்.

இது பழைய கதை  ஆனால் இப்போது வழங்க உள்ள பணம்

இது மக்களின் வரிப் பணம். அரசு வட்டிக்குக் கடன் வாங்கி, திமுக வாக்குகளை விலைக்கு வாங்குகிறது என்பதே பொதுவான பார்வை அதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்.

ஊழலே இது ஊரை அடித்து உலையில் போடுவதே ஊழல் ஆட்சி என்ற நிலை என மக்கள் பேசுவது அமைச்சருக்குப் புரிந்ததா எனத் தெரியவில்லை, இன்னும் பத்து நாளில் தேர்தல் அறிவிப்பு வந்து விடும் சட்டம் படித்து பல துறைகளில் அமைச்சராக இருந்தவர் அரசியலைத் தொழில் எனக் கூறுவது ஊழல் ஆதரவுப் பேச்சாகவே பார்க்கமுடிகிறது,                                          இதில் பொதுநீதி யாதெனில்:- கோடைகாலம் வந்தால் பணம் தரவேண்டுமென்பது யார் கருத்து,? அபபடியானால் குளிர்காலம், இலையுதிர்காலம், வசந்தகாலம், பனிக்காலம், என எல்லாக்காலமும் எவ்வளவு தருவீர்கள். ஆக இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் தான்.கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் காலமே வரவில்லையே ஏன் இப்போது தேர்தல் காலம்,  மக்களை ஊழல் வாதிகளாக மாற்ற ஊழல் காலம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...