முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராகுல் கையால் விசில் சப்தம் நாளை வரும் கூட்டணியில் மாற்றம்

இராகுல் கையால் விசில் சப்தம் நாளை வரும் கூட்டணியில் மாற்றம். தவெகவுடன் கூட்டணி என காங்கிரஸ் எடுத்த சர்வேயால் சத்திய மூர்த்தி பவனில் பிரியாணி பரிமாறி விருந்து.!

தவெகவுடன் கூட்டணிக்கு வரவுள்ளது எனும் தகவல், தவெக தலைவர் நடிகர் விஜய் ஆதரவு காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்குத் தெரிய வந்ததும், அவர்கள் வரவேற்பு நிலையிலிருக்கின்றனர். ஆனால் ப. சிதம்பரம் மற்றும் அவர் சார்ந்த செல்லம் என்ற பெருந்தகை ஆதரவாளர்கள் 12 பேர் திமுக தரப்பு ஆதரவாக மாறிய நிலையில் புதிய கட்சி துவங்கும் நிலைக்கு அவர்கள் மாற உள்ளதாகத் தகவல் வருகிறது 


 ‘‘பொது மேடையில், ஆட்சியில் பங்கு தர முடியாது' என பகிரங்கமாக திமுக முதல்வர் மு. க ஸ்டாலின் அறிவித்ததை, ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னை  முதல்வர் மு. க. ஸ்டாலின் அவமதித்து விட்டதாகவே கருதுகிறார். ஏற்கனவே, காங்கிரசுக்கு சாதகமான 125 தொகுதிகளின் பட்டியலை வார் ரூம் நிர்வாகிகள் தயாரித்து வைத்திருந்தனர். அதிலிருந்து 70 தொகுதிகளைத் தேர்வு செய்து தருமாறு வார் ரூம் நிர்வாகிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தவெக தலைவர் நடிகர் விஜய் சந்திப்பு நடக்கும்.



அந்தத் தொகுதிகளின் பட் டியலை தவெகவிடம் வழங்கி, கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சு நடத்தும் பொறுப்பு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி சென்னை வருகிறார் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் வேணுகோபால். தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயர் மாற்றத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி நடத்தும் பேரணியில் பங்கேற்கிறார். அப்போது, தவெக தலைவர் நடிகர் விஜயை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது’’ எனத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு பிரியாணி விருந்து தவெகவுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளது என்ற தகவல், தவெக தலைவர் விஜய் ஆதரவு காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுக்குத் தெரிய வந்ததும், அவர்கள்  மகிழ்ச்சியைப் பகிர்ந்தனர். நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் வழக்கத்திற்கு மாறாக பிரபல அசைவ உணவகத்திலிந்து ஆட்டிறைச்சிப் பிரியாணி வரவழைத்து,  விருந்து நடத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் நடக்கும் பேரணியை, வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு உரிய பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் திமுகவில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய 25 தொகுதிகளை முறையே  கூடுதலாக  கீழ் கண்டவாறு ஒதுக்க முடிவு  செய்துள்ளதாம் அந்தக் கூட்டணி 








கூடுதலாக தலா 2 கம்யூனிஸ்ட். கட்சிகள், ப.சிதம்பரம்  ஆதரவு காங்கிரஸ் பேரவை 8, கமலஹாசன் மையம் 6, மீதி 3 திமுகவுக்கு  என முடிவு செய்ததாகவும் தகவல் வருகிறது .

காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேச்சும்,  வீச்சும், தாக்கமும். மதுரை பொதுக்கூட்டம் முடித்த அமைச்சர் இராஜ கண்ணப்பன் நிகழ்ச்சிகள் அடுத்தநாளுக்கானது ரத்து செய்து முதல்வர் மு. க.ஸ்டாலின் திடீர் அழைப்பு வரவே  அரசியல் நிலை சூடானது

தி.மு.க. தலைமையின் திடீர் அவசர அழைப்பை ஏற்று, திருநெல்வேலியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தை ரத்து செய்துவிட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் அவசரமாகச் சென்னை புறப்பட்டார்.

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட தச்சநல்லூர் பகுதியில் இன்று மாலை தி.மு.க. சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் இந்தத் தொடர் கூட்டங்களில் பங்கேற்பதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று மதியம் வரை திருநெல்வேலியில் தங்கி இருந்தார். எனினும், தலைமையின் அழைப்பு வந்தவுடன் பொதுக்கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திலிருந்து அவர் அவசரமாகச் சென்னைக்குப் புறப்பட்டார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் கடந்த சில நாட்களாகப் பொதுக்கூட்டங்களில் பேசி வரும் கருத்துகள் கூட்டணிக் கட்சிகளிடையே, குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி குறித்து அவர் தெரிவித்த விமர்சனங்கள் சர்ச்சையாக வெடித்தன. குறிப்பாக, தி.மு.க.வுடன் காங்கிரஸ் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன; அதை முதல்வர் பார்த்துக் கொள்வார். கூடவே இருந்து கொண்டு காங்கிரசார் உயிரை வாங்குகின்றனர் என்று, காங்கிரஸ் கட்சி குறித்து கிண்டலும் கேலியுமாக தொடர்ந்து விமர்சித்து வந்தார். இது திமுக காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த நெருக்கடி என்பதே அரசியல் பார்வை 




மேலும், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. 170 இடங்களுக்கு மேல் போட்டியிடுமென்றும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த தொகுதிகளையே அக்கட்சி மீண்டும் கேட்பதாகவும் அவர் பேசியதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது 'எக்ஸ்' வலைதளப் பக்கத்தில் இந்தச் செய்தியை மேற்கோள் காட்டி தனது அதிருப்தியைப் பதிவு செய்திருந்தார்.










தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் பேசியது அல்லது பேச வைக்கப்பட்டது தலைமைக்கு தீர்வையோ அல்லது நெருக்கடியையோ ஏற்படுத்தியுள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்க்க அறிவுறுத்துவதற்காகவும், விளக்கம் கேட்பதற்காகவும் அவர் சென்னைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது அமைச்சரின் திருநெல்வேலி நிகழ்ச்சிகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவர் அமைச்சர் பதவியில் தொடர்வரா இல்லை நிலமை மாறி அவர் மீண்டும் மக்கள் தமிழ் தேசம் கட்சியைத் துவங்கி வேறு கட்சியில் கூட்டணி வைப்பாரா என்பது இனித் தான் தெரியும். மேலும்,மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டதக்கது.ஆனால்,அது மற்றுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு மூடநம்பிக்கை.கடந்த 3 ஆண்டுகளில்,தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநில அரசுகளில், 4 மட்டுமே வெற்றி பெற்றன;5 தோல்வியடைந்தன-பிரவீன் சக்கரவர்த்தி!!!

காங்கிரஸ் திமுக கூட்டணிலிருந்து வெளியேற ஆயத்தமாகி வருகிறது!  காங்கிரஸ் பேரவைத் தலைவராகப் போகும் ப சிதம்பரத்துடைய கருத்தை இலக்கிய நடராஜன் பிரதிபலிக்கிறார் அவ்வளவு தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...