பயணிக்கும் ரயில் நிறுத்தத்தில் பயணி ஏறாவிட்டால் இனி பயணச்சீட்டு இரத்தாகும் இந்திய ரயில்வே துறையில் புதிய விதிமுறை அமலுக்கு வந்தது
குறிப்பிட்டுள்ள ரயில்வே நிறுத்த போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிவில் ஏறத் தவறினால் அவரது இருக்கை உடனடியாக காவியாக இருப்பதாக அறி விக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ஒதுக்கப்படும் முறை ரயில்வேயில் அமலுக்கு வந்துள்ளது.
ரயில் பயணிகளின் வசதிக்காகயும், காலியாக உள்ள இருக்கைகளை உடனுக்குடன் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கவும் இந்திய ரயில்வே உத்தரவு வந்துள்ளது. அதன்படி முன்பதிவு செய்த பயணி தனது பபயணச் சீட்டில் குறிப்பிட்டுள்ள நிலையத்தில் ரயிலில் ஏறத் தவறினால், அந்தப் பயணச்சீட்டு தானாகவே ரத்து செய்யப்பட்டு, இருக்கை வேறு ஒருவருக்கு ஒருக்கப்படும்.
முந்தைய விதிமு றைகளின்படி, ஒரு பயணி வராத பட்சத்தில் அடுத்த இரண்டு ரயில் நிளையங்கள் அல்லது ஒரு மணிநேரம் வரை டிக்கெட் பரிசோதகர் காத்திருக்க வேண்டியதிருந்தது ஆனால், தற்போது அனைத்து இரயில்களி லும் ஹேண்ட் ஹெல்டு டெர்மினல் எனப்படும் கையடக்கக் கணினி கருவிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பயணிக்க உள்ள பயணி வரவில்லை என்பதை டிடிஇ உடனடியாக சிஸ்டத்தில் பதிவேற்றுவார். இதனால் இருக்கை அடுத்த சில நிமிடங்களிலேயே காத்திருப்போர் பட்டியவில உள்ளவருக்கு ஆன் லைன் டோக்கன் மூலம் வழங்கப்படடுவிடும், பயணி வராத காரணத்தால் இருக்கை ரத்து செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட நபரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசி எண்ணிற்கு இது குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும் ரயிலில் ஏறாத பயணிக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பயணிகள் ஒருவேளை தாங்கள் முன்பதிவு செய்த ஸ்டேஷனுக்குப் பதிலாக வேறு ஸ்டே னில் ஏற விரும்பினால், ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பே ஆன்லைன் மயமாகவோ அல்லது கவுண்ட்டரிலேயோ தங்களது போர்டிங் பாயிண்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறையினால் இனி ரயில்களில் காலியாக இருக்கும் இருக்கைகள் தகுதியுள்ள பயணிகளுக்கு வெளிப்படையான முறை உடனடியாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்ப டுகிறது. முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளுக்கான போர்டிங் ரயில் நிலையம் மாற்றம். 1வது சார்ட்டிங்கிற்குப் பிறகு மற்றும் 2வது சார்ட்டிங் தயாரிக்கும் வரை போர்டிங் பாயின்ட்களை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை சரிபார்க்க இந்திய இரயில்வே வாரியம் CRIS ஐக் கோரியுள்ளது.
இது செயல்படுத்தப்பட்டால், சார்ட்டிங் நிலையங்கள் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட்டுகளின் போர்டிங் ரயில் நிலையத்தை மாற்றலாம். வந்தே பாரத் போன்ற ரயில்களுக்கு 15 நிமிடங்கள் ஆகலாம்.



கருத்துகள்