முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடதுசாரி கம்யூனிஸ சித்தாந்தம் சிவப்பாகவே எரிகிறது, மூட்டிய தோழர் நல்லகண்ணு காலமானார்,

இடதுசாரி கம்யூனிஸ சித்தாந்தம் சிவப்பாகவே எரிகிறது, மூட்டிய தோழர் இரா.நல்லகண்ணு காலமானார்,     


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, பழைய திருநெல்வேலி மாவட்டம் தற்போது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இராமசாமி-கருப்பாயி தம்பதியினருக்கு 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று, 10 குழந்தைகள்  உள்ள விவசாயக் குடும்பத்தில்  4 சகோதரர்கள், 5 சகோதரிகள் கொண்ட பெரிய விவசாயக் குடும்பம், இவர் 3-வது குழந்தையாகப் பிறந்தார். 1958- ஆம் ஆண்டில் ரஞ்சிதம் மனைவியானார் இரண்டு பெண் குழந்தைகள் உண்டு, மனைவி ஆசிரியர் பணியின் மூலம் குடும்பத்தைக் கவனிக்க  

திருநெல்வேலி மாவட்ட கமிட்டி உறுப்பினர் அன்னாசாமியின் மகள்தான் இவர் மனைவி 

 ஆர். நல்லகண்ணு முழு நேர கட்சிப் பணிகளில் ஈடுபட்டதால், மனைவி ரஞ்சிதம் தனது ஆசிரியர் பணி வருமானத்தில் குடும்பம் பார்க்க 

1948-ல் கம்யூனிஸட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த போது சிறை சென்றார், தனது வாழ்நாள் முழுவதையும் மக்களின் போராட்டங்களுக்காக அர்ப்பணித்த அந்த சிகப்பு சூரியன் தற்போது அஸாதமனமானது, 101 வயதில் 



இவருடைய 80 ஆவது பிறந்த நாளில் 1 கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்தார்  தமிழ்நாடு அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்தார்.


ஜாதிய அக்கிரமங்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து தன் வாழ்க்கையைச் சிறைக்கொட்டடிகளிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர்.மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு 1944-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட்டு கட்சியில் உறுப்பினராக இணைந்தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் கம்யூனிஸ்ட்டு கட்சியின் இதழான ஜனசக்தியில் பணியாற்றிய போது ஶ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் நெல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அறிந்து ஜனசக்தியில் அந்த மோசடியை  எழுதினார். மாவட்ட ஆட்சித் தலைவர் நெல் மூட்டைகளை மீட்க நடவடிக்கை எடுத்தார்.


இதன் பின்னர் நல்லகண்ணு நகர வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி நாங்குனேரி வட்டத்தில் விவசாயதத் தொழிலாளர்களை இணைத்து போராட்ட பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். அம்பாசமுத்திரம், சிவகிரி, புளியங்குடி, தென்காசி, நாங்குனேரி பகுதிகளில் திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் ஜீயர் மடங்களுக்குச் சொந்தமான நிலங்களில் வேலை செய்த விவசாயக் கூலி மக்களை ஒன்று திரட்டி நில உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டார். மடங்களின் அதிகாரத்தை மட்டுப்படுத்த வழி வகுத்தது.




ஆர்.நல்லகண்ணு 1948- ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட்டு கட்சி தடைசெய்யப்பட்ட பின் தலைமறைவாக வாழத் தொடங்கினார்.  டிசம்பர் மாதம் 1949- ஆம் ஆண்டில்  கைது செய்யப்பட்டு திருநெல்வேலி சதி வழக்கில் இணைக்கப்பட்டார். நாங்குனேரி சிறையில் ஓராண்டு இருந்த பின்னர் 1950-ஆம் ஆணடில்  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை கொக்கிரக்குளம் சிறையிலடைக்கப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவராக நீண்ட காலம் பயணித்தவர், தோழர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்ட நாள் 1925 டிசம்பர் 26ஆம் தேதி.தோழர் நல்லகண்ணு பிறந்ததும் அதே நாளில் தான் என்பது மிக நெகிழ்ச்சியான தகவல். கடந்த கால கமயூனிஸ்ட் கட்சியின் இறுதி அத்தியாயமாக வரலாற்றில இருக்கிறார்.






இவர் சமகாலத்தில் வாழந்த தோழர்களான கம்யூனிஸ்ட் தலைவர்கள் உமாநாத், மன்னை அம்பிகாபதி, மதுரை சங்கரய்யா, கூத்தகுடி சண்முகம் போன்ற தலைவர்கள் அனைவரும் 100 வயதுக்கு முன்பே காலமாயினர் ஆனால் 101 வயது மூத்த தோழருக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் ஒரே வயது 





அங்கே ஏழாண்டு காலச் சிறை வாசத்திற்குப் பின் 1956-ஆம் ஆணடில்  விடுதலை செய்யப்பட்டார். சிறைக் காலத்தில் அரசியல் கைதிகளுக்கு பி வகுப்பு சிறையை ஒதுக்க வேண்டும் என 12 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். விடுதலையானவுடன் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் முதல்வர் கு.காமராஜரைச் சந்தித்து பிற கட்சித் தோழர்களையும் விடுதலை செய்யக் கேட்டு கொண்டார். அது சட்ட விதிகளுக்கு முரணானது என மறுக்கப்பட்டது. இரா.நல்லகண்ணுவின் முயற்சியின் காரணமாக அரசியல் கைதிகளுக்கு பி வகுப்பு சிறை கிடைத்தது.




மக்கள் போராட்டத்தில்  ஆர்.நல்லகண்ணு 1966-ஆம் ஆண்டு  அம்பாசமுத்திரம் பகுதியிலுள்ள கடனா நதியில் அணை கட்டித் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகளை ஒன்றிணைத்து 11 நாட்கள் நடந்த உண்ணாவிரதப்  போராட்டத்தின் முடிவில் நல்லகண்ணுவின் கோரிக்கை ஏற்கப்பட்டு அன்றைய முதல்வர் பக்தவத்சலம் தலைமையில் கடனா நதியில் அணை கட்டப்பட்டது.





1967-ஆம் ஆண்டு நொச்சிகுளத்தில் விவசாயிகள் பயிரிட்டு வந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து ஆர்.நல்லகண்ணுவின் தலைமையில் போராட்டம் நடைபெற்றதை ஒடுக்குவதற்காக காவல் துறை துப்பாக்கி சூட்டினை நடத்தியதைக் கண்டித்து பன்னிரெண்டு நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இறுதியில் விவசாயிகள் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட்டது .

தோழர் ஆர்.நல்லகண்ணு 2010-ஆம் ஆண்டில் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளைக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாமே வாதாடினார். அதன் காரணமாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்தது.நாங்கள் பார்த்த ஐயா  

தோழர் இரா.நல்ல கண்ணு அவர் தீமைக்கு எதிரான கண், அவர் தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான கண், தாமிரபரணி மணல் காத்த கண், இனி எப்போது வரும் 

தமிழகத்திற்கு கிடைத்த நேர்மை கொண்ட நல்ல கண் போல வருமா? என பலருக்கும் அவரை இழந்த சோகம்! 

கண்களில் கண்ணீர் தான்,  ஓயுமோ, நேர்மை நீதி தலை சாயுமோ, சுதந்திரப் போராட்ட வீரரான தோழருக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் வீரவணக்கம்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...