அமலாக்கத்துறையின் தலைமை இயக்குநர் இராகுல் நவீன் இன்று சென்னை வருகை தந்தார்.டில்லியிலிருந்து 3 நாள் பயணமாக வந்த இராகுல் நவீன்,
நிலுவையிலுள்ள நகராத வழக்குகள் குறித்து ஆய்வு செய்கிறார். மேலும், தற்போது நீதிமன்றங்களில் தமிழ்நாடு தொடர்பான தேக்கமான வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை உயர் அலுவலர்களுடனும் மத்திய அரசு வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அமலாக்கத்துறை இயக்குநரின் தமிழ்நாடு வருகை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.மேலும், தற்போது நீதிமன்றங்களில் உள்ள தமிழ்நாடு தொடர்பான ஊழல் பண மோசடி உள்ளிட்ட வழக்குகளின் நிலை குறித்தும் அமலாக்கத்துறை அலுவலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், நிலுவையில் இருக்கும் வழக்குகளின் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தியிருப்பது ஊழல் வாதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு ஊழல் செய்து லஞ்சம் பெற்ற வழக்கு விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் வழக்குப்பதிவு செய்யக் கோரிக்கை வைத்த அமலாக்கத் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிபி-க்கு பலமுறை கடிதம்அனுப்பப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. அந்த வழக்கில், அமைச்சர் கே.என்.நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ED, தகுதியான அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட ப. சிதம்பரம் மீது வழக்குத் தொடர அனுமதி உத்தரவை, தஐஎன்எக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் விவகாரத்தில் பணமோசடி செய்த குற்றம் தொடர்பாக அப்போதைய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், எல்.டி. சிறப்பு நீதிமன்றம் மூலம் விவகாரம் வருகிறதுசென்னை மண்டலம் உள்ளிட்ட அமலாக்கத்துறை விசாரணையில் (PMLA) பணமோசடி வழக்குகள் அதிகம் நிலுலையிலுள்ளது, பல அந்நிய செலாவணி மோசடி வழக்குகளும் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையிலுள்ளது. கௌஹாதியில் நடந்த அமலாக்கத்துறை அகில இந்திய ஆலோசனைக் கூட்டத்தில், 2 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடித்திட வேண்டுமென உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சென்னை அமலாக்கத்துறையின் அவசரக் கூட்டம் அமைச்சர்களுக்கு போடும் கிடுகிப்பிடி நடவடிக்கை எனப் பார்க்கப்படுகிறது,
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அமலாக்கத்துறை தமிழ்நாடு அரசியல் களத்தில் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக அமலாக்கத்துறை நடத்த உள்ள அவசரக் கூட்டம் , அரசியல் களத்தில் பரபரப்பை உறுவாக்கி வைத்துள்ளது.
அமலாக்கத்துறை, தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேரு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு காவல்துறைக்குக் கடிதம் எழுதிய விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து வழக்குப் பதிவுசெய்யவும், நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் வழக்கும் நிலுவையில் உள்ள நிலையில் அமலாக்கத்துறையின் இயக்குநரான இராகுல் நவீன், தமிழ்நடு வருகை திடீரென முடிவானதாகக் கூறப்படுகிறது. இந்தப் பயணம் குறித்து அமலாக்கத்துறை வட்டாரத்தில், ``ஏற்கெனவே அமலாக்கத்துறையில் தமிழ்நாடு அமைச்சர்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது கே.என்.நேரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அமலாக்கத்துறையின் விசாரணையில் பணமோசடி வழக்குகள் அதிக அளவில் நிலுலையில் உள்ளன. அதேபோல், அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் பல, 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன.
இந்த அடிப்படையில்தான் சென்னையில் மூன்று நாள்கள் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக் கூட்டத்தினை இராகுல் நவீன் நடத்த உள்ளார். இதில் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்க உள்ளார்கள்.
ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் சிலரின் வழக்குகள் பல ஆண்டுகளாக அமலாக்கத்துறையின் விசாரணை என்கிற பெயரில் கிடப்பில் கிடக்கின்றன. அந்த வழக்குகளின் விவரங்களை இப்போது அமலாக்கத்துறையின் இயக்குநர் கேட்பார்” என்கிறார்கள்.
சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழ்நாட்டை தி.மு.க-விடமிருந்து மீட்போம்” என்று முழங்கியிருந்தார். இதற்கு ஏற்றார்போல மத்திய அரசின் ஏஜென்சிகளும் தி.மு.க அமைச்சர்களுக்கு எதிராகப் பிடியை இறுக்கத் துவங்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், அமலாக்கத்துறை இயக்குநர் வருவதும், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மண்டல அமலாக்க அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனை நடத்த இருப்பதையும் வெறும் அலுவல் பயணமாக மட்டும் பார்க்க முடியாது.
“தேர்தலுக்கு முன்பாக அமைச்சர்களுக்கு அவர்கள் செய்த ஊழல் அடிப்படையில் அமலாக்கத்துறை நெருக்கடி கொடுத்து தேர்தல் பணிகளை முடக்கும் நிலை வரலாம் என்கிறார்கள் தி.மு.க-வினர்.காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதில் சட்டவிரோதப் பணம் சிக்கியதாகவும் ED கூறுகிறது. ஏஜென்சி பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இனி, நீதிமன்றம் தான் இந்த விஷயத்தில் முடிவு செய்யும்.




.jpeg)













கருத்துகள்