காவல்துறை விசாரணைக் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கில்
நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் சிபிஐ தகவல், காவலர்களுக்கு நீதிபதி கடுமையான கண்டனம்
காவல்துறை விசாரணை க் காவலில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட மரண வழக்கில் புதிய திருப்பமாக, நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் சிபிஐ தெரிவித்துள்ளது. அதைக்கேட்ட நீதிபதி, ஒன்றும் இல்லாத வழக்குக்காக ஒருவரை அடித்துக் கொலை செய்த காவலர்கள் விசாரணை முடியும் வரை சிறையிலிருக்கட்டும் என உத்தர விட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப் புவனம் அருகில் மடப்புரம் பத்ர காளியம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27-ஆம் தேதி மடப்புரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த திருமங்கலம் பகுதியில் வசிக்கும் நிகிதா என்பவரது காரை நிறுத்தி வைக்க ச் செய்ய கோவில் காவலாளி அஜித்குமாரிடம் கேட்டுள்ளார்.
அவரும் நிகிதாவின் காரை நிறுத்தி வைக்கச் செய்துள்ளார். பின்னர் அதற்கு பணம் கேட்டதாகவும் அப்போது நிகிதாவுக்கும் அஜித் குமாருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதில் ஆத்திரமடைந்து அஜிக்குமார் மீக காவல் துறையில் புகார் செய்த நிலையில் துணைக் கண்காணிப்பாளரின் தனிப்படைக் காவலர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், சங்கரமணிகண்டன், ராஜா, ராமச்சந்திரன் ஆகியோர்
தாக்கும் காணொளிக் காட்சி வெளியாகியது. அதையடுத்து திருப் புவனம் தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணி கண்டன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். சர்ச்சை பெரிதானதால், அஜித்குமாரை காவலர்கள் அடித்து கொலை செய்த மரணம் மற்றும் அவர் மீதான நகை திருட்டு வழக்குகளை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது.
அதன்பின் திருப்புவனம் காவல் நிலையம் முதல் மடப்புரம் கோயில் வரை உள்ள பாதைகளில் உள்ள சிசிடிவி காணொளிக் காட்சிகளை சிபிஐ உயர் அலுவலர்கள் ஆய்வு செய்தனர் அத்துடன்,
நிகிதா, காவல் ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோரையும் குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கில் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகி யோர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்
அப்போது நீதிபதி ஸ்ரீமதி, அஜித் குமார் மீதான நகை திருட்டுப் புகார் என்ன ஆனது? என்று கேள்வி எழுப் பினார். அதற்கு சிபிஐ தரப்பில், நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை. இதனால் அந்தப் புகார் முடித்து வைக்கப்பட்டது. இதுதொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய் யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதைக் கேட்ட நீதிபதி ஸ்ரீமதி, “நகை திருட்டு நடைபெறாமலேயே, நகை திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டு, ஒன்றுமில்லாத வழக்குக்காக ஒருவரை அடித்துக் கொலை செய் துள்ளனர். புகார் அளித்தவர் மீது நட வழக்கை எடுக்க வேண்டியதுதானே?
அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது” எனக் கூறப்பட்ட மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்கள் தனிப் படைக் காவலர்களில் பிரபு என்பவரைத் தவிர மற்றவர்கள் தான் அஜித்குமாரை தாக்கியதாக கூறியுள்ளனர். எனவே, பிரபுவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிபதி ஸ்ரீமதி, “யாராக இருந் தாலும் வழக்கு முடியும் வரை சிறை யில் இருக்கட்டும். நடந்ததைக் கேட்டு மனம் பதறுகிறது. ஏதுமில்லாத ஒன்றுக் காக ஒருவரை இப்படி தாக்கியுள்ளனர். இதில் தொடர்புடைய காவல் துறை யினருக்கு பாடம் புகட்டுவோம். விசா ரணை பிப்ரவரி மாதம்.17-ஆம் தேதிக்கு தள்ளிவைக் கப்படுகிறது” என்று உத்தரவிட்டார். இந்த நிலைமை சிபிஐ தாக்கல் செய்யும் அறிக்கை அடிப்படையில் நிகிதா கைதாவாரா என்பது இனி சிபிஐ நகர்வை வைத்து அறியலாம்.ஆட்சி அதிகார வர்க்கத்தோடு அந்தரங்கத் தொடர்பிருந்தால், எப்பேர்ப்பட்ட ஆட்டத்தையும் ஆடிவிட்டு, பாதுகாப்பாக க இருக்கலாம் போல என்பதை
இதற்கு நிகழ்காலத்தின் நிகரற்ற சாட்சியாக உள்ளவர், திண்டுக்கல் பேராசிரியை பணி செய்த திருமங்கலம் பகுதி நிகிதா!
பேராசிரியை என்று முன்னொட்டு சேர்த்து சொல்வதற்கே சற்றும் அருகதையற்ற ஒரு கல்வித் துறையின் களங்கமே - இவராவார்
மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜீத்குமாரை காவலர்கள் அடித்து படுகொலை செய்து உயிர் பறிக்கப்பட்ட சம்பவத்தில்,
‘’நகை திருட்டுப் போகவுமில்லை. அஜித்குமார் அதைத் திருடவும் இல்லை’’ என சி.பி.ஐ திட்டவட்டமாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
செய்யாத குற்றத்திற்கு சித்திரவதைகளை அரங்கேற்றி, ஒரு உயிர்பறிப்பு படுகொலை நடந்துள்ளது.
கோவிலுக்கு தொண்டுழியம் செய்து வந்த அந்த ஏழை வர்க்க இளைஞன், ‘’திருடனல்ல, யோக்கியமானவன்’’ என்பதைச் சொல்வதற்கே ஏழெட்டு மாத காலமும், அதற்கு ஒரு சிபிஐ விசாரணையும் தேவைப்படுகிறது.
’இந்த எளிய உண்மையைக் கண்டறியும் அருகதை தன் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறைக்கு இல்லை’ என தீர்மானகரமாக நம்பித் தான் தமிழ்நாடு முதல்வர் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தாரா..? என்பது இங்கு எழுவினா அல்லது உண்மையை உரத்துச் சொல்லும் உள் மனத் திடமின்றி, ஒதுங்கி வழிவிட்டாரா? ன்பது தான் தெரியவில்லை.
துள்ளத் துடிக்க அடிந்து துவம்சம் செய்து உயிரைப் பறித்த கொலை கார ஏவலுக்கு அடி பணிந்த -காவல் துறையில் சில கயவர்கள் சிறையில் இருக்க,
அதற்கு கட்டளையிட்ட மேலிடமும், அந்தக் கட்டளைக்கு காரணமான பொய்ப் புகார்தாரியான நிகிதாவும் எப்படி இங்கே நிம்மதியாக வலம் வர முடிகிறதோ…? தெரியவில்லை.
சிபிஐ கைது செம்து அவரை சிறையில் வைத்து பின் நீதிமன்றத்திற்கு தெரிவித்து மக்கள் மத்தியில் நற்பெயரை சிபிஐ தட்டிச் செல்லும் நம்புவோம்.
















கருத்துகள்