அஇஅதிமுக கூட்டணியில்
பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளைத் தவிர்த்து, தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) - 5, ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி- 2, , ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் -2, பச்சமுத்து உடையார் எனும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி - 2, கே.சி.திருமாறன் ஜியின் தேசிய பார்வடு பிளாக் -1, மற்றும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் -1, என மேலும் சில சிறிய கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 37 முதல் 40 தொகுதிகளில் தாமரையில் களம் இறங்குகின்றனர் இன்று அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு முதற்கட்டமாக 23 வேட்பாளர்களை முதலில் அறிவித்தார் எடப்பாடி கே. பழனிசாமி, எடப்பாடியில்:- எடப்பாடி K. பழனிசாமி, வேப்பனஹள்ளியில்: கே.பி.முனுசாமி, திண்டுக்கல்:- திண்டுக்கல் C. சீனிவாசன், நத்தம் :- நத்தம் இரா. விசுவநாதன், தொண்டாமுத்தூர்:- S.P. வேலுமணி, குமாரபாளையம்:- பி.தங்கமணி, இராயபுரம்:- D. ஜெயக்குமார், மைலம்:-C.Ve. சண்முகம், மதுரை மேற்கு:-செல்லூர் K. ராஜூ, பாலக்கோடு:-K.P. அன்பழகன், நன்னிலம்:-R. காமராஜ், வேதாரண்யம்:-O.S. மணியன், விராலிமலை,:-டாக்டர் C. விஜயபாஸ்கர், கோவில்பட்டி:-கடம்பூர் C. ராஜூ, திருமங்கலம்:-R.B. உதயகுமார், சிவகாசி:-K.T. ராஜேந்திரபாலாஜி, மதுரவாயல்:-பா.பென்ஜமின், கலசபாக்கம்:-அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திருப்பரங்குன்றம்:-V.V.ராஜன் செல்லப்பா, பவானி:-K.C. கருப்பணன்,ஜோலார்பேட்டை:-K.C. வீரமணி, கரூர்:M.R. விஜயபாஸ்கர், அரியலூர்:-தாமரை S. ராஜேந்திரன், ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்,
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளாக மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவிநாசி,திருப்பூர் தெற்கு கோயமுத்தூர் வடக்கு, கந்தர்வகோட்டை,திருப்புத்தூர்(சிவகங்கை) ,மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர்,நாகர்கோவில்,விளவங்கோடு,ஆவடி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர்,மானாமதுரை, அறந்தாங்கி,குளச்சல், பத்மநாபபுரம், இராமநாதபுரம், புதுக்கோட்டை, இராதாபுரம், இராசிபுரம். ஆகும் இதில் 14 மாநில அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக நேரடியாகப் போட்டியில்லை.
கூட்டணிக் கடசிகள் தான் போட்டி என்ற நிலை பாமக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு மூவர் இதில் கீழ் வேளூர் - வடிவேல் இராவணன்- பொதுச்செயலாளர், செஞ்சி - அ.கணேஷ் குமார், அம்பத்தூர் - கே.என். சேகர் போட்டி அடுத்ததாக அமமுக போட்டியிடும் தொகுதிகளாக பெரியகுளம், மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஓட்டப்பிடாரம் , திருச்சிராப்பள்ளி மேற்கு, சைதாப்பேட்டை, பூந்தமல்லி, மடத்துக்குளமாகும், பாமக போட்டியிடும் தொகுதிகளில் சேலம் மேற்கு, தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்தரமேரூர்,ஜெயங்கொண்டம், செஞ்சி, ரிஷிவந்தியம், கீழ்வேளூர், பெரம்பூர், காட்டுமன்னார்கோவில், அம்பத்தூர், விருதாச்சலம்,சேலம் வடக்கு, போளூர், ஆகும் புரட்சிபாரதம் பூவை மூய்த்தி போட்டியிடும் கே.வி.குப்பம், ஆகும் அவிநாசி தொகுதியில் பாஜக போட்டி
அவிநாசி 1984 ஆம் ஆண்டு முதல் அதிமுக வசமுள்ள தனித் தொகுதி 1996 ஆம் ஆண்டில் மட்டும் திமுக வெற்றி
முன்னாள் சபாநாயகர் தனபால் கடந்த 2 தேர்தல்களிலும் 60,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்யாசத்தில் திமுகவை வென்றார்
தற்போது பாஜகவின் இணை அமைச்சர் எல் முருகன் இங்கு போட்டி இட வாய்ப்பு, காலமான வெங்கடேஷ் பண்ணையார் மனைவி ராதிகா செல்வியை அதிமுக ஜெ.ஜெயலலிதாவிற்கு எதிராக தேர்தலில் பயன்படுத்திய திமுகவின் மு.கருணாநிதியைப் போல இல்லாமல்
காலமான ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்க்கொடியை வெற்றி பெற வைக்க நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும் என அக் கட்சியினர் மத்தியில் கோரிக்கை வைக்கும் நிலையில் அதிமுக வேடபாளராக அவர் சென்னை திருவிக நகரில் களம் காண்கிறார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ்(மூ)கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதில் த.மா.காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.கவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்தார்.
த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளின் களம் காணும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் செல்வாக்கு அந்த மாதிரி. ஈரோடு மேற்கில் அமைச்சர் முத்துச்சாமி, இராணிப்பேட்டையில அமைச்சர் காந்தி, ஒட்டன் சத்திரம் அமைச்சர் சக்கரபாணி, கும்பகோணத்தில் சாக்கோட்டை அன்பழகன், கிள்ளியூர் சட்டமன்றக் காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார், இந்த 5 பேரை எதிர்த்துத் தான் களம் காணவேண்டிய கட்டாயம் த.மா.க.வுக்கு உள்ளது.
அ.தி.மு.க. தேர்தல் வரலாற்றில் ஒரு முறை கூட வெற்றி பெறாத கிள்ளியூர் 5 தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு வெற்றியைத் தராத ஒட்டன் சத்திரம்.10 வருடங்களாக தி.மு.க.வின் கொடி பறக்கும் ராணிப்பேட்டை. 30 வருடங்களாக திமுக வசமான கும்பகோணம். எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் என 3 முதலமைச்சர்களின் அமைச்சரவையில் பங்கேற்ற அமைச்சர் முத்துச்சாமி களம் காணும் ஈரோடு மேற்கு. என தொகுதிகளைத் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சிக்கு அ.தி.மு.க. வழங்கியுள்ளது.
பா.ஜ.க மேலிடமோ, இதுவரை மக்களைச் சந்திக்காமல் , சத்தமில்லாமல் மேல்சபைக்கு சென்று வந்த ஜி.கே வாசனுக்கு, இந்த 5 தொகுதிகளையும் கொடுத்து தாமரை சின்னம் வழங்கி பரீட்சையில் இறக்கி விட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனர் தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனார் அணியில், இந்த நிலையில் ஒரு நடிகர் விஜயகாந்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக ரசிகர்கள் உண்டு. அது பிரேமலதா பக்கம் உள்ளதோ இல்லையோ அவர் நம்பும் அவர் சார்ந்த சமூகம்
பாமகவை வட மாவட்டங்களில் நடிகர் விஜயகாந்த் செல்லாக் காசாக்கியதில் தேமுதிக பெரும் பாங்காற்றியது.
வன்னியர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு விஜயகாந்தைப் பிடிக்கும்.
அதையும் விட வட மாவட்டங்களில் தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகள் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் அதிகம்.இந்தப் புரிதல் இல்லாமல் அரசியல் பேசுவது மடமை.
திமுகவின் நகர்வு வாக்குகள் அடிப்படையில். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் வட மாவட்டங்களில் திமுக கடும் தோல்வியைத் தழுவியது. இதுவே உண்மை, பாமக கோட்டையை உடைத்துத் தான் நடிகர் விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவரனார்
விசிக கடசிக்கு போன முறையும் இதே ரெண்டு பொதுத் தொகுதிகள் கொடுத்துத்தான் போட்டியிட்டார்கள். இது ஒன்றும் சமூக நீதி இல்லை, திருமா கட்சியில் இருக்கும் திமுக ஆதரவாளர்கள் அணி நிர்வாகிகளான ஷா நவாஸ் ஹூசைன் மற்றும் எஸ்.எஸ் பாலாஜி ஆகியோர் பட்டியல் சமூகம் இல்லை அவர்கள் தனித் தொகுதிகளில் நிற்க முடியாது. ஆகவே அவர்கள் பங்கு ஆறில் இரண்டு பொதுத் தொகுதி
ஏன் - திமுக சமூக நீதி காக்கும் இயக்கம் ஆனால் கொங்கு கட்சிக்கு தனி தொகுதி கொடுக்கலாமே? அட அவுங்களுக்கு குடுக்குற பொது தொகுதி ல கவுண்டர் அல்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைக்கலாமே? இது கூட வேண்டாம் . இஸ்லாமியர்கள் கட்சிகளுக்கு கொடுக்கும் தொகுதிகளில் ஒரு தனித் தொகுதியையோ அல்லது இஸ்லாமியர் அல்லாத வேட்பாளர் ஒருவருக்கோ கொடுக்க வைத்து வெற்றி பெற வைத்து மத சார்பின்மையை நிலை நாட்டலாமே. என பலரும் பேசும் நிலையில் தான் ஜான் பாண்டியன் கட்சி இராஜபாளையம் பொதுத்தொகுதியில் போடடியிடுகிறது,
தொகுதிகளைக் கவனியுங்கள். பாசக தெளிவாக காய் நகர்த்தியது என்று மக்கள் பேசக் காரணம்.
பாஜக வளர்ச்சிக்கு உதவுகிறது அஇஅதிமுக. கடந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) கட்சி போட்டியிட்ட நிலையில், இந்த முறை தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளது.14 திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக நேரடியாக போட்டியில்லை
திமுக அமைச்சர்கள் 14 பேரை எதிர்த்து நேருக்கு நேராக போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கிய அதிமுக.
அமைச்சர்கள் எ.வ.வேலு (திருவண்ணாமலை), பெரியகருப்பன் (திருப்பத்தூர்), மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்), நாசர் (ஆவடி), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), மதிவேந்தன் (ராசிபுரம்) ஆகிய தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்தும்
கே.என்.நேரு (திருச்சிராப்பள்ளி மேற்கு), மன்னார்குடி (டி.ஆர்.பி.ராஜா), சைதாப்பேட்டை (மா.சுப்பிரமணியன்) ஆகியவற்றை அமமுகவுக்கு ஒதுக்கீடு செய்தும்.
சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்), ஈரோடு மேற்கு (முத்துசாமி), ராணிப்பேட்டை ஆர்.காந்தி ஆகியவற்றை தமாகாவுக்கு ஒதுக்கீடு செயதும்.
ராஜேந்திரன் (சேலம் வடக்கு) பாமகவுக்கும், எஸ்.எஸ். சிவசங்கர் (குன்னம்) IJK வுக்கு ஒதுக்கீடு செய்தும். என்டிஏ கூட்டணி தெர்தலைச் சந்திக்கிறது.



























கருத்துகள்