அ.ம.மு.க. சார்பாக 11 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு,
இதில் திருச்சிராப்பள்ளி மேற்குத் தொகுதி தவிர மற்ற தொகுதி வேட்பாளர்கள் அனைவரும் தகுதியான நபர்கள். பெரியகுளம் - கதிர்காமு, மன்னார்குடி காமராஜ், திருவையாறு - வழக்கறிஞர் வேலு கார்த்திகேயன், காரைக்குடி- தேர்போகி பாண்டி, திருப்பத்தூர்-ஞானசேகரன், நாங்குநேரி இசக்கி முத்து, ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜனும், சைதாப்பேட்டையில் செந்தமிழனும், பூந்தமல்லியில் - ஏழுமலையும், மடத்துக்குளம் - சண்முகவேலுவும் போட்டியிடுகின்றனர்.
புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி. சண்முகம் எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் ஜானகி அணியில் இருந்து பின் தனிக்கட்சி துவங்கியவர், தமிழ்நாட்டின் துளுவ வேளாளர் சமூகம் சேர்ந்தவர், இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி எனும் சிதம்பரம் பிள்ளை மகனாக 1966 ல் பிறந்தவர், தமிழில் 24 திரைப்படங்களை இயக்கியுள்ளார். தலைநகரம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்ப காலத்தில், மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்தவர்
முறை மாமன் என்ற நகைச்சுவைத் திரைப்படம் வாயிலாக இயக்குநராக அறிமுகமானார். இவருடைய பல படங்களில் கதாநாயகியின் பெயர் இந்து என்பதாகும். உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இவருடைய இயக்கத்தில் குறிப்பிடத்தக்கவையாக அமைந்தன. மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு போன்றவை இவர் இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படங்கள் சுந்தரவேல் சிதம்பரம் பிள்ளை என்பது முழுப்பெயர்கருத்துத் தெரிவித்த பா.ஜ.க-வின் மூத்த நிர்வாகிகள், "பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகளில், கோயம்பத்தூர் வடக்கு, மொடக்குறிச்சி, அவிநாசி, நாகர்கோவில் தொகுதிகள் மட்டுமே கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவை. இதர 23 தொகுதிகளும் தோல்வியுற்ற தொகுதிகள். அதையெல்லாம் பாஜகவிடம் கட்டிவிட்டது அ.தி.மு.க. அதில், பி.எல்.சந்தோஷ் மிகுந்த மனவருத்தமடைந்து பாஜக தலைமையகம் கமலாலயத்தின் ரெங்கராஜன் அரங்கில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடியதில், 'இதுதான் தொகுதிப்பங்கீடா... நமக்கு பலமான தொகுதிகளைக் கேட்டுப் பெற்றிருக்க வேண்டாமா, திருவாரூரில் தி.மு.க வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட நம்மிடம் வலுவான வேட்பாளர் இல்லை. அதற்குப் பதிலாக கும்பகோணத்தைப் பெற்றிருக்கலாமே? சென்னையிலும் கோயமுத்தூரிலும் நமது கட்சி வலுவாக இருக்கிறோம். அங்கேயெல்லாம் ஒரேயொரு தொகுதி தான் நமது கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் என்ன தொகுதிப் பங்கீடு பேசுனீர்கள்?' எனக் கொதித்துப் போய் பேசினார். அருகிலிருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரனால் பதில் பேச முடியவில்லை.
கூட்டத்தை முடித்துக்கொண்டு அறைக்கு வந்த பின்னரும் நயினார் நாகேந்திரன் மீது பி.எல்.சந்தோஷின் கோபம் குறையவில்லை. கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்களான அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டியை அழைத்து, 'கட்சியில் உழைத்தவர்களுக்கு சீட் இல்லையென்றால், நீங்களெல்லாம் என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்.' என கோபத்தைக் காட்டி விட்டார். அப்போது நயினார் நாகேந்திரன் அவருடைய அறைக்கு வரவும்,
அருகிலிருந்த அணிகளின் பிரிவு மாநில அமைப்பாளர் கே.டி.ராகவனிடமும் பொருளாளர் சேகரிடமும், 'பாஜக மாநிலத் தலைவருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். அவரைப் பார்ப்பதற்கு நிறைய பேர் காத்திருப்பார்கள். இங்கு நாமிருந்தால் அவருக்கு சிரமமாக இருக்கும். நாம் விமானநிலையத்துக்குச் சென்று பேசிக் கொண்டிருக்கலாம்' என கோபமாகக் கூறிவிட்டு, அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார் பி.எல்.சந்தோஷ்.சென்னையில் குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளாவது பெற வேண்டும் என்பது தான் திட்டம், கட்சியில் தீவிரமாக களப்பணியாற்றும் எஸ்.ஜி.சூரியாவுக்கு வேளச்சேரியையும் கே.டி.ராகவனுக்கு செங்கல்பட்டு தொகுதியையும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பது விருப்பம். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, பா.ஜ.க-வுக்குச் சாதகமான தொகுதிகளும் கிடைக்கவில்லை என்பது அவரை ஆத்திரப்படுத்தியது. இதனால், 'டெல்லியில் என்ன தகவல் கூறப்போகிறாரோ...' என நயினார் நாகேந்திரன் தரப்பினர் கவலையடைந்து போயிருக்கிறார்கள்" அதன் வெளிப்பாடே சுயமாக சாத்தூர் தொகுதியில் போட்டி என அறிவித்தது என்கின்றனர் பி.எல்.சந்தோஷின் கோபத்தைத் தொடர்ந்து, சில தொகுதிகளை மாற்றித் தரும்படி அ.தி.மு.க-விடம் கோரியிருக்கிறது பா.ஜ.க தலைமை.
அதில் கந்தர்வக்கோட்டைக்குப் பதிலாக ஆலங்குடியையும் தஞ்சாவூருக்குப் பதிலாக வேறொரு தொகுதியையும் கேட்டிருக்கிறார்கள். அதேபோல, சென்னையில் கூடுதலாக ஒரு தொகுதியை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளது பா.ஜ.க. ஜான்பாண்டியனுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜபாளையம் தொகுதியையும் மாற்றி வழங்கும்படி கே. டி.ராஜேந்திர பாலாஜியும் நெருக்கடி கொடுப்பதால், அதிமுக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்















கருத்துகள்