முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பல்லோவில் ஜி.கே. மணியை விரட்டி விளாசிய மருத்துவர் ராமதாஸின் 3 வது மகள் கவிதா

ஜி.கே. மணியை விரட்டி விளாசிய மருத்துவர் ராமதாஸ் மூன்றாவது மகள் கவிதா ஜெய்கணேஷ்

மருத்துவமனையில் நடந்தது இது?

"எங்கள் குடும்பத்தைப் பிரித்த ஜிகே மணிக்கு மருத்துவமனையில் என்ன வேலை என கவிதா கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது."



சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச் சூழலில், அவரை நலம் விசாரிக்க வந்த அக்கட்சியின் ஜி.கே. மணியை, மருத்துவர் ராமதாஸின் மூன்றாவது மகள் கவிதா ஜெயகணேஷ் கடுமையாகச் சாடியதுடன் திட்டி திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. காலங்கடந்து நடந்த போதும் சரியாக நடந்துள்ளது.


பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு லேசான மயக்கம் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் உயர் மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டிருந்த வேளையில், ஜி.கே. மணியும் அங்கு வருகை தந்தார்.



ஜி.கே. மணியைக் கண்டதும் மருத்துவர் ராமதாஸின் மகள் கவிதா ஜெயகணேஷ் கோபத்தின் உச்சிக்கே சென்றார். அங்கிருந்தவர்கள் முன்னிலையிலேயே அவரை நோக்கி, "எங்கள் குடும்பத்தை பிரித்த படுபாவி நீ(ங்கள்)தானே , இப்போது எதற்காக இங்கே (வந்தாய்) வந்திருக்கிறீர்கள்?" என ஆவேசமாகவே கேள்வி எழுப்பினார். மேலும், "எங்கள் குடும்பத்தில் சூழ்ச்சி செய்து விரிசலை உண்டாக்கிவிட்டு, உ(ன்)ங்கள் மகனுக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் சீட்டு வாங்கித் தந்துவிட்(டாய்)டீர்கள். உ(னக்கு)ங்களுக்கு திமுகவிற்குப் போக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் தாராளமாகப் போகலாம் செல்லுங்கள், உங்களை யார் தடுத்தது? ஆனால், எதற்காக எங்கள் குடும்பத்தை குறிவைத்துச் சதி செய்தீர்கள்?" என அடுக்கடுக்கான புகார்களை நேரடியாக முன்வைத்தார். 


கவிதா ஜெகணேஷின் இந்தத் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போன ஜி.கே. மணி, எவ்விதமான பதிலும் சொல்ல முடியாமல் போய் திகைத்து நின்றார். "இதுவரை இந்த குடும்பத்திற்கு நீங்கள் செய்த துரோகம் போதாதா? இதற்கு மேல் செய்ய என்ன பாக்கி இருக்கிறது? இங்கேயும் ஏதேனும் சூழ்ச்சி செய்ய வந்தீர்களா? எனக்கு வரும் கோபத்திற்கு என்ன செய்வேன் என்றே தெரியாது, மரியாதையாக இங்கிருந்து சென்றுவிடுங்கள்" என கவிதா ஜெயகணேஷ் கொந்தளித்ததைக் கண்டு, அங்கிருந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களும் மணியை திட்டித் தீர்த்தனர்

இந்த எதிர்பாராத எதிர்ப்பால் செய்வதறியாது திகைத்த ஜி.கே. மணி, அங்கிருந்து உடனடியாக வெளியேறி அவரது காரில் ஏறிச் சென்றார். நல்ல நிலையில் இருந்த பாமகவின் செயல்பாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மணி வருகை என்பது மனோன்மணியத்து குடிலன், இராமாயணத்தில் கூனி, மஹாபாரதத்தில் சகுனி, சிலப்பதிகாரத்தில் திருட்டு வஞ்சிப்பத்தன் இறுதி நிலை போல ஆனது குடும்ப உறுப்பினர்களுக்கும், மூத்த நிர்வாகிக்கும் இடையே மருத்துவமனை வளாகத்தில் அரங்கேறிய இந்த மோதல் அடிதடியாக மாறவில்லை இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

-"திமுகவில் போய் சேருடா.. துரோகி!"  என்ற கோஷமும் அங்கு எதிரொலித்தது, 

தானும் தனது மகனும் வாழ வேண்டும் என்பதற்காக, பல்லாயிரக் கணக்கான தொண்டர்களின் தியாகத்தில் உருவான பாட்டாளி மக்கள் கட்சியை, திமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டு, 'உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்' ஜி.கே. மணியை... இன்று அப்பல்லோ மருத்துவமனையில் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகும் அளவுக்கு வெளுத்து வாங்கியுள்ளார் மருத்துவர் ச. ராமதாஸ்  வாரிசு!

ஒருபக்கம் தனது மகனை கட்சி மாற வைத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிற்கவைத்து விட்டு, மறு பக்கம் பாமகவுக்கு எதிராக மருத்துவர் ச. ராமதாஸை தள்ளாதவயதில் ஊர் ஊராகப் பிரச்சாரத்துக்கு இழுத்தடித்து குடும்பத்தை இரண்டாக உடைத்து பேராபத்தில் தள்ளும் இந்தத் துரோகியை - மருத்துவர் ராமதாஸ் வாரிசு 'சங்கை சங்கையாக திட்டிய போதும்' எதுவுமே நடக்காதது போன்று இருந்து  வெளியேறிய மணி விரைவில் மாற்றுக் கட்சியில் இணைவார்.

அந்த நாளும் விரைவில் வரும். என உண்மைத் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

கருத்துகள்