இளம் சிறார்களுக்கான மாவட்ட அளவில் லிட்டில் ஹார்ட் பள்ளியில் நடந்த சதுரங்கப் போட்டிகள்,
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, செக்காலைக்கோட்டை,
பெரியார் நகர் 9வது வீதியான பர்மா காலனியில் அமைந்துள்ள டாக்டர் G.சுவாதி கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தமிழ்நாடு கேட்டரிங் கல்லூரி மற்றும் லிட்டில் ஹார்ட் கிட்ஸ் பள்ளியில்
மாவட்ட அளவிலான ரேபிட் செஸ் போட்டி-2026 இளம் சிறார்களுக்கானது சாணக்யா செஸ் அகாடமியால் நடத்தப்படடது,
31 மார்ச் 2026 ஆம் தேதி செவ்வாய் கிழமை காலை 09:00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன், துவங்கி மதியம் 2.மணி வரை நடைபெற்றத நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக:- அதூலன், சாணக்யா அகாடமியின் அமைப்புச் செயலாளர், எஸ்.வி. முத்துக்குமார், துணைத் தலைவர், சிவகங்கை, செஸ் சங்கம், ஆர்.பாண்டியன், தமிழ்நாடு உள்ளாட்சி தளத்தணிக்கைத் துறை இணை இயக்குநர், எஸ்.கே.புலித்தேவன் பாண்டியன் , எடிட்டர், பப்ளிக் ஜஸ்டிஸ், எஸ். சிதம்பரம், தமிழ்நாடு அரசு பொதுத்துறையின் முன்னாள் துணைச் செயலாளர் , தி.ரெங்கநாதன், M.Sc (ஜியாலஜிஸட்) ஒருங்கிணைப்பாளர் - TNCHM,
பி. சுமதி குனசேகரன், செயலாளர் டாக்டர் G.சுவாதி கல்வி அறக்கட்டளை, எஸ்.டி.ஸ்டெல்லா ராணி, முதுநிலை ஆசிரியர் ,SMS மேல்நிலப்பள்ளி, டாக்டர்.எஸ். புவனேஸ்வரி, முதுநிலை ஆசிரியர், SMS மேல்நிலப்பள்ளி, எம்.சோலை ஆச்சி, அமைப்புச் செயலாளர், ஏ.பழனியப்பன், முதல்வர், தமிழ்நாடு கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி ஆசிரியர்கள், எஸ்.எம்.மதிவதனி, டி.ஆரோக்கியமேரி, எஸ்.கலையரசி, பி.பிரதீபா, ஏ.மைமூன் ரோஜா, ஆர்.அனிதா, ஆர்.விக்டர் செல்வம், பாலசுப்ரமணியன், பனியாளர் எஸ்.லலிதா, ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வில் 3 முதல் 9 வயது வரை உள்ள சிறு குழந்தைகள் பல்வேறு பள்ளிகளில் பயிலும் சிறார்கள் 100 க்கும் மேற்பட்டோர் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுடன் கலத்து கொண்டு போட்டியில் பங்குபெற்றனர்,
போடடிகளை, முதல் தளத்திலும் இரண்டாம் தளத்திலும்தலைமை நடுவர் .S அதூலன் IA- (சர்வதேச நடுவர்). துணை நடுவர்- எம்.எஸ். ஆர் பிரியா SNA (மூத்த தேசிய நடுவர்) மற்றும் வி.கயல் விழி. (எஸ்என்ஏ), இராணி ராஜஸிம்(SA), எஸ்.சாந்தினி,என்.பவானி, எம்.திவ்யா, வி.சிவசங்கரி, பி.சுபாஷினி. ஆகிய ஸெஸ் நடுவர்கள் கலந்து கொண்டு போட்டிகளை நடத்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை லிட்டில் ஹார்ட் சிறார் பள்ளி நிர்வாகம் சார்பில், எம்.சோலை ஆச்சி, விக்டர் செல்லம், கலையரசி, மைமூன் ரோஜா, உள்ளிட்டோர் செய்தனர்,
நிகழ்ச்சியில் இராஜா ரவிவர்மாவின் ஓவியக் காட்சிகளும் இடம் பெற்று பலரது பாராட்டுகளைப் பெற்றது. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள், மெடல்கள் வழங்கப்பட்டது கல்லூரி முதல்வர் ஏ. பழனியப்பன் நன்றி கூறினார், இதுவரை ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் போட்டிகள் எங்கும் நடக்கவில்லை மற்றும் பங்கேற்க வில்லை இங்கு தான் முதலமுறையாகக் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது. இந்தியாவில் நடக்கும் சதுரங்கப் போட்டி
AICF எனும் All India Chess Federation மூலம் தேசிய மற்றும் சர்வதேச தரவரிசைப் போட்டிகளினது Rating Tournaments நாடு முழுவதும் நடத்தப்படுவதில் .
பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் வீரர்களுக்கான சிறப்புப் போட்டிகள், சென்னை உள்ளிட்ட நகரங்களில் அடிக்கடி நடத்தப்படுகின்றன.
2026-ஆம் ஆண்டில், FIDE Candidates Tournament, Chess.com வழங்கும் பல்வேறு ஆன்லைன் போட்டிகளும், உள்ளூர் அளவில் பல போட்டிகளும் உண்டு பள்ளி மாணவ மணவியர்கள் மத்தியில்
சதுரங்கப் போட்டி தர்க்க ரீதியான சிந்தனையை மற்றும் பொறுமையை வளர்ப்பதோடு, சிறந்த அறிவுசார்ந்த சவாலையும் வழங்குகிறது,.ஒரு காலத்தில் சமஸ்தான மன்னர்களின் விளையாட்டு சதுரங்கம் (அ) செங்களம் (அ) வல்லாட்டம் (Chess) ஆகும் , இருவர் விளையாடும் பலகை விளையாட்டு தமிழில் ஆனைக்குப்பு எனப் பெயருண்டு. ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள், எட்டுக்கு எட்டு கட்டங்கள் என 64 கட்டஙகள் விளையாட்டில் பயன்பட. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் உண்டு விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த மொத்தமாக 64 கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது.
பொதுவாகக் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். செங்களம் அதிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அன்று. மதியூகமும், தந்திரமும் இவ்விளையாட்டுக்கு முக்கியமானது, தற்காலங்களில் இது பாடசாலைப் பாடத்திடடத்திலும் உள்ளது உலகம் முழுவதுமுள்ள பல மில்லியன் கணக்கான மக்களால் வீடுகளில், பூங்காக்களில், விளையாட்டுக் கழகங்களில், மற்றும் இணையத்தளத்தில், கணினியிலும் போட்டித் தொடர்களாகவும் விளையாடப்படுகிறது ஏழாம் நூற்றாண்டில் நம் பாரத மண்ணில் விளையாடிய சதுரங்கம் விளையாட்டிலிருந்தே வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. இங்கிருந்து மேற்கில் ஐரோப்பாவுக்கும், கிழக்கில் கொரியா வரை பல வேறுபாடுகளுடன் பரவியது. மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்கும் பரவியது. அங்கே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய விளையாட்டு, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியது. முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சோ X-இன் ஆதரவில், சதுரங்கம், பாக்கம்மொன், டைஸ் என்னும் விளையாட்டுக்கள் தொடர்பான நூலொன்று எழுதப்பட்டது. 11 ஆம் நூற்றாண்டில் செங்களம் இங்கிலாந்தை எட்டியது. அங்கே அது கூரியர் முதலிய வேறுபட்ட வடிவங்களாக உருவெடுத்தது.
15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சதுரங்கக் காய்களின் நகர்த்தல்களுக்கான வரைமுறைகள் இத்தாலியில் நடைமுறைக்கு வந்தது "போன்"கள் எனும் வீரர் முதல் நகர்த்தலின்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்பட்டது, "பிஷப்" திறந்த கட்டங்களின் மூலை விட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதியும் புதிதாக வந்தது. முன்னர் இவை மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே நகர முடியும் . ஆனால் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. மூலை விட்டம் வழியாக ஒருகட்டம் மட்டுமே நகரலாம் என "இராணி"க்கிருந்த தகுதி அதிகரித்து திறந்த கட்டங்களினூடாக எத்திசையிலும், எவ்வளவு தூரமும் நகரலாம் என அனுமதிக்கப்பட்டு "இராணி" மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது.
மேற்படி மாற்றங்கள் சதுரங்கத்தை கூடுதலாகப் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகுத்ததின் மூலம், பல ஈடுபாடுள்ள சதுரங்க ஆர்வலர்களை உருவாக்கியது. அக்காலம் தொட்டு ஐரோப்பாவில் செங்களம் அதிகம் மாற்றமில்லாது இன்று விளையாடப்படுவது சமநிலைக்கான நிபந்தனைகள் தவிர்ந்த ஏனைய, தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்ட .மனித மூளைக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட சதுரங்க விளையாட்டை இப்பொழுது, இயந்திரங்களும் விளையாடத் தொடங்கின. ஆரம்பகாலங்களில் வெறும் ஆர்வம் காரணமாகப் பயன்பட்டுவந்த ஒன்றாக இருந்த போதிலும், செங்களம் விளையாடும் கணினிகள் வளர்ந்து திறமையான மனிதர்களுக்கே சவால்விடக்கூடிய, அல்லது தோற்கடிக்கக்கூடிய அளவுக்குச் சக்தி மிக்கவையாகிவிட்டன.,





























கருத்துகள்