முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு ஜனநாயகத்தை பணநாயகம் மூலம் வீழ்த்த நடந்த முயற்சியை முறியடித்த மக்கள்

தமிழ்நாடு 234 சட்ட மன்ற


ப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு தரவுகளின்படி சுமார் 85 சதவீதம் +வாக்குகள் பதிவாகியுள்ளன.வாக்காளர் மறு சீரமைப்பு 2026 SIR வந்த பின் 

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குச் சதவிகிதத்தில் அதிகம் எனத் தேர்தல் ஆணையம் கருத்து.


தமிழ்நாட்டில் முதல் முறையாக 85 சதவிகிதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாக SIR காரணம் இதற்கு முன்னர் அதிகபட்சம் 2011-ஆம் ஆண்டு சட்ட மன்றப் பேரவைத் தேர்தலில் 78 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.   தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் உற்சாகத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமென' பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக்கத்தில் நேற்று காலை பதிவிட்டார்.



காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 85 சதவீதம் +வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையத்தின் தரவுகள் தெரிவித்ன.

தமிழ்நாட்டில் மொத்தமாக 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். https://elections.tn.gov.in/, votervazhikatti.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக வாக்குச்சாவடி விவரம் அறிய புதிய வாக்காளர்களுக்கு உதவியாக இருந்தது.தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு நாளில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ஐ.ஏ.எஸ்., சிறப்பு பார்வையாளர் திரு.பிரதாப் சிங், மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்கு வருகை தந்து, வாக்குப்பதிவு நாள் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, தமிழகம் முழுவதும் சுமூகமான, சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான செயல்முறையை உறுதி செய்வதற்காக 24 மணிநேர கண்காணிப்புடன் செயல்பட்டனர். அமைதியாகத் தேர்தல் நடந்து முடிந்தது.தமிழ்நாடு வந்துள்ள மத்திய தேர்தல் பார்வையாளர்கள் அவ்வப்போது வந்து வாக்குப்பதிவைக் கண்காணித்தனர். 300 கம்பெனி துணை ராணுவத்தினர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவத்தினரும் பணியமர்த்தப்பட்டனர். அவர்களுடன் 83 ஆயிரத்து 875 தமிழ்நாடு காவலா படையினரும், 3 லட்சத்து 60 ஆயிரத்து 68 அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.மொத்தம் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகளில், 1 லட்சத்து 6 ஆயிரத்து 418 வாக்குப்பதிவு எந்திரங்களும், 75 ஆயிரத்து 64 கட்டுப்பாட்டு எந்திரங்களும் மற்றும் வாக்கை உறுதி செய்யும் 'விவிபாட்' எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. கூடுதலாக 20 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்களும், கட்டுப்பாட்டு எந்திரங்களும், 30 சதவீத விவிபாட் எந்திரங்களும் ரிசர்வில் வைக்கப்பட்டன.



சில இடங்களில் எந்திரங்களின் பழுதால் வாக்குப்பதிவு காலதாமதமாகத் துவங்கியது. தவிர சில இடங்களில் மட்டும் வன்முறை நடந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்துத் தொடங்கியது. சரியாக மாலை 6 மணிக்கு வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள மையங்களின் பிரதானக் கதவுகள் அடைக்கப்பட்டன. அந்த மையங்களுக்குள் ஏற்கனவே வந்திருந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் தரப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்தது.  இதனிடையே வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வெளியிட்டது. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் அங்கிருந்த வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. பின்னர் அவை உரிய பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.




கடந்த தேர்தல்களைவிட இந்தத் தேர்தலில் நடந்துள்ள வாக்குப்பதிவு மிக வித்தியாசமாகும். ஏனென்றால், தமிழ்நாடு தேர்தல் சரித்திரத்தில் சரியான வாக்காளர் பட்டியல் படி இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் பதிவானதை விட நேற்று பதிவான வாக்குகள் சதவீதம் அதிகம். இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291; அதில் வாக்களித்தோர்  4.81 கோடி. தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணி தற்போது துவங்கி உள்ளது. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்பட்ட படிவம் 17C-யில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையுடன், மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையின் விபரங்கள் ஒப்பீடு செய்து சரிபார்க்கப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.


சரிபார்ப்புப் பணி முடிந்த பின், தொகுதி வாரியாக வாக்குகளின் புள்ளி விவரங்கள் இன்று அல்லது நாளை வெளியாகும். இந்த முறை இளைஞர்களும் யுவதிகளும் பெண்களும் ஆர்வமுடன் வாக்களித்தனர், சிறு குழந்தைகள் இந்தத்தேர்தலில் அதீத ஆர்வம் காடடினர்.ஆனால் இந்தத் தேர்தலில் பணம் பிரதான விஷயம்  ஆனால் சாமானியன் பணத்தை பறிமுதல் செய்து அரசியல் வாதிகள் பணத்தை தாராளமாக மக்களிடம் ஊழல் காரணமாக கொண்டு சேர்த்த பறக்கும் படை என்ற பறக்காத படை தான் காரணம் சில இடங்களில் மட்டுமே அவர்கள் அரசியல் கட்சி பணத்தை பறித்து பெயர் எடுத்தனர் ஆனால் பல இடங்களில் நிலைமை வேறு.

கரூர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு அதிமுக சார்பில் ரூபாய் 3,000 கொடுக்கப்பட்டதாகத் தகவல் . இதற்கு பதிலடியாக திமுக தரப்பில் ஒரு ஓட்டுக்கு இரு மடங்காக ரூபாய் 6,000 கொடுக்கப்பட்டதாகவும் தகவல்.

இந்த நிலையில் அதிமுகவினர் 1 ஒரு ஓட்டுக்கு 4 கிராம் வெள்ளி காசு கொடுத்துள்ளதாகவும் தகவல் . 1 கிராம் வெள்ளியின் இன்றைய சந்தை மதிப்பு ரூபாய் 275. 4 கிராம் வெள்ளியின் இன்றைய மதிப்பு ரூபாய் 1,100..

இதற்கு போட்டியாக திமுகவினர் அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் ஒரு ஓட்டுக்கு அரை கிராம் தங்கக் காசு என வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் . 1 கிராம் தங்கத்தின் இன்றைய மதிப்பு ரூபாய் 14,250. அரை கிராம் தங்கத்தின் மதிப்பு ரூபாய் 7,125.. இதில் 

கரூர் தொகுதியில் அதிமுகவினர் இதுவரை ரொக்கம் ரூபாய் 3,000, ரூ.1,100 மதிப்பிலான வெள்ளி காசு கொடுத்துள்ளதாகவும் தகவல் . அதாவது கரூரில் ஒரு வாக்காளர்களுக்கு அதிமுக ரூபாய் 4,100 வீதம் சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு ரூபாய் .82 கோடி கொடுத்துள்ளதாகத் தகவல்.. இதை உளவுத்துறை நன்கு அறியும் இருந்த போதிலும் எல்லா இடத்திலும் ஊழல் மயம் 

திமுக தரப்பில் இதுவரை ரொக்கம் ரூபாய் 6,000 , ரூபாய் . 7,125 மதிப்பிலான அரை கிராம் தங்க காசு என 1 ஓட்டுக்கு ரூபாய் 13,725 கொடுத்துள்ளதாகத் தகவல் 

அதாவது சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு திமுக தரப்பில் ரூபாய் 274.5 கோடியும் கொடுக்கப்பட்டதாகத் தகவல்.

கரூர் தொகுதியில் மட்டும் சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு அதிமுகவும் திமுகவும் இதுவரை சுமார் ரூபாய் 356.5 கோடி பணத்தை வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக வரும் தகவல் வேதனை. இந்த ஊழல் ஒழிய வேண்டும் என்பதே மக்கள் எதிர் பார்ப்பு இதை நிலை தான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திமுக வினர் ஒரு வாக்குக்கு 1000 சில இடங்களில் அதிகம் கொடுத்துளளதாகவும் தகவல் ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் நேர்மையாக பணம் கொடுக்காமல் மக்களை நம்பி வாக்கு சேகரித்தார். இதில் பணம் வங்கிக் கொண்டு மாறி வாக்களித்த மக்கள் ஜனநாயகக் காவலர்கள். ஓட்டுப்போட இந்தியக் குடியுரிமை பற்று சிங்கப்பூரில் வசித்த  குடும்பம். வாக்களிக்க வந்து வாக்காளர் படடியலில் பெயர் இல்லாததால் SIR மூலம் நீக்கம் செய்ததை சரிபார்க்காமல் வந்தவர்கள் அதிர்ச்சி.

சென்னை பெரம்பூரில் ஒரு குடும்பத்தினர்

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தாலும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியே தீர வேண்டும் என ஆர்வத்தில், சிங்கப்பூரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நேற்று காலை சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்திலிருந்து நேராக வாக்குச்சாவடிக்குச் சென்ற அவர்களுக்கு, அங்கு காத்திருந்த அதிர்ச்சி அவர்கள் அனைவரையும் நிலைகுலையச் செய்தது. சர்க்கார் திரைப்படக் கடசி போல 

வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் அந்த 3 பேரின் பெயர்களும் விடுபட்டிருந்ததைக் கண்டு அவர்கள் மிகுந்த வேதனையடைந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, தாங்கள் முறையாக விண்ணப்பித்துப் பெயர்களைச் சேர்த்திருந்ததாகக் கூறிய அவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும், கடைசி நேரத்தில் தங்களது பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆகவே அவர்கள் தரப்பு வழக்கு போடவும் முயற்சி எனத் தகவல்.

சுமார் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து, பெரும் பொருட்செலவில் ஓட்டுப்போட வந்த தங்களுக்கு உரிய வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகத் துரோகம் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் தங்கள் வாக்குரிமை பறிபோய்விட்டதாக அந்த குடும்பத்தினர் அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட தூரம் பயணம் செய்து வந்தும் வாக்களிக்க முடியாமல் போன அந்தக் குடும்பத்தின் ஏமாற்றம், அங்கிருந்த மற்ற வாக்காளர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...