முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பதநீர் அல்லது கள் இறக்கியதாக பனைஏறிய தொழிலாளி மீது சீறுடை இல்லாத காவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு

பதநீர் அல்லது கள் இறக்கியதாக பனைஏறிய தொழிலாளி மீது சீறுடை இல்லாத காவலர் நடத்திய துப்பாக்கிச் சூடு.


ஆலங்குளம் உதவி ஆய்வாளர் உட்பட 3 நபர்கள் மீது வழக்கு.  குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையைச் சேர்ந்த 3 நபர்கள் குறித்து முதல் தகவல் அறிக்கை: 

அதில் கண்டுள்ள படி 07.04.2026-ம் தேதி 23.30 மணிக்கு ஆலங்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் K.சுபாஷ் சந்திர போஸ் நிலைய பொறுப்பிலிருந்த போது தென்காசி மாவட்டம், ஆலங்குளம் (தாலுகா), மருதம்புத்தூர், S.பிரதிபா வயது 17 என்பவர் காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகார் மனுவை பெற்று புகார்மனுவின் தன்மைக்கேற்ப சட்டப்பிரிவுகள் 197/2026 U/s 296(b), 109(1), 351(3) BNS & 4 of TNPHW ACT -"ன். படி பதிவு செய்தார் அதன் விபரம். புகார் மனு அனுப்புநர்: எஸ். பிரதீபா மருதம்புத்தூர், ஆலங்குளம் (தாலுகா), தென்காசி மாவட்டம். பெறுநர் உயர்திரு காவல் ஆய்வாளர், ஆலங்குளம் காவல் நிலையம், ஆலங்குளம். ஐயா, இன்று 7-04-2026 மதியம் சுமார் 12.45 மணியளவில், மூன்று நபர்கள் எனது




சித்தப்பா மணிகண்டன் என்பவரை, எங்கள் தோட்டத்திற்கு அழைத்து வந்து எங்களது பனைமரத்தில் ஏறச் சொல்லி வற்புறுத்தினார்கள். அங்கு நின்ற நானும் எனது தந்தை மற்றும் தம்பியும் என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்றோம். அந்த நேரம் பனையின் உச்சியிலிருந்த எனது சித்தப்பாவை "ஏலே சாணாத் தே×××மவனே" கலயத்தில் ஒன்னுமே இல்லையா லேய் என்று அந்த மூன்று நபர்கள் கேட்டனர். அப்போது அந்த இடத்திற்கு விவரம் தெரிந்து வந்த எனது தாத்தா பெருமாள் சேட் என்பவர் அய்யா கெட்ட வார்த்தை பேசாதீர்கள் என வேண்டினார். ஆனால் அவர்கள் எங்கள் தாத்தாவையும் வயதில் பெரியவர் என்ற மரியாதை கூட இல்லாமல் "ஏலே கிழட்டு தே××× மவனே" என தகாத வார்த்தை கூறி ஆபாசமாகப் பேசியதோடு மட்டுமல்லாமல் ஒழங்காக ஓடிப் போய்விடு இல்லை என்றால் உன்னையும் பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டினார்கள். உடனே நான் எங்கள் தாத்தாவை கெட்ட வார்த்தை பேசாதீர்கள் என்று கூறினேன். ஆனால்



அவர்கள்குழந்தை என்றும் பார்க்காமல் "ஏளா தே××× மவளே" என்று தகாத வார்த்தைகளால் பேசி எங்களை ஓடிப் போய்விடு என்றார்கள். இதை பார்த்த எனது தம்பியையும் "ஏலே பு×× மவனே" குடும்பத்தோடு உங்கள் அனைவரையும் உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டியதோடு மட்டுமல்லாமல் கீழே கிடந்த கம்பை எடுத்து அடிக்க முற்பட்டபோது மரத்திலிருந்து இறங்கி வந்த எனது சித்தப்பா மணிகண்டன் அதைத் தடுத்து எதற்காக அசிங்கமாக குழந்தைகளைப் பேசுகிறீர்கள் என்று கேட்டார். உடனே அவர்கள் கையிலிருந்த கம்பை கொண்டு எனது சித்தப்பாவையும் எங்களையும் அடிக்க முற்பட்டபோது எனது சித்தப்பாவும் அவர்களும் உருண்டு வரப்பிலிருந்து கீழே விழுந்த போது அவர்கள் வைத்திருந்த கம்பே அவரது தலையில் காயத்தை ஏற்படுத்தியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த நபர்கள் "ஏலே தே××× மக்களா" உங்களைக் கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறிக்கொண்டு கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்து முதல் முறை எனது சித்தப்பாவைச் சுட்டார். இரண்டாவது முறை சுடும் போது அந்தக் குண்டு என்னை நோக்கி சுட்டார். நான் விலகி விட்டதால் அந்தக் குண்டு எனது காலருகில் சென்று கீழே விழுந்தது. ஒருவேளை நான் விலகாவிட்டால் அந்தக் குண்டு எனது உடம்பை துழைத்து எனது உயிருக்கு ஆபத்தாய் போய் இருந்திருக்கும். பின்னர் நான் பயந்து

கூச்சலிட்டு சுடாதீர்கள், சுடாதீர்கள் எனக் கூறினேன். ஆனால் அந்த நபர்கள் கொலை வெறித் தாக்குதலுடன் மீண்டும் இரண்டு முறை எனது சித்தப்பாவின் காலில் சுட்டனர். இப்போது எனது சித்தப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் அவர்கள் எங்களை அந்த இடத்திலிருந்து அப்புறபடுத்திவிட்டு எனது தாத்தாவை மட்டும் அந்த இடத்தில் நிறுத்தி வைத்து அவர்களது காலில் விழ வைத்து அசிங்கப்படுத்தியதோடு நில்லாமல் அவர்கள் கூறியபடி பேச வைத்து வீடியோ பதிவை எடுத்துகொண்டு, குண்டடிபட்ட எனது சித்தப்பாவை 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களே அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். பின்னர் தான் தெரிந்தது வந்த நபர்கள் மூவரும் காவல்துறையைச் சார்ந்தவர்கள் என்று. இவர்களின் நடவடிக்கையினால் நான் மனதளவில் மிகப்பெரிய அளவில் அழுத்தம் ஏற்பட்டு பயத்தில் உறைந்து போனேன். ஆகையால் மேற்படி எதிரிகளின் செய்கையால் எனக்கும் எனது குடும்பத்தார்க்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு அவதியுற்று வருகிறோம். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் எங்களுக்கும் எங்களது குடும்பத்தினருக்கும் துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தல் ஏற்படுத்தி, அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த மற்றும் கொலை முயற்சி செய்த மேற்படி நபர்களின் மீது உரிய சட்ட பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு (s/d) பிரதீபா இடம் : ஆலங்குளம் தேதி : 07/04/2026  என்ற புகார் மனுவில் மேலும் Sir, Received the Petition and Registered a case in Alanguiam PS Cr.No 197/2026 U/s 296(b), 109(1), 351(3) BNS & 4 of TNPHW ACT on 07.04.2026 at 23.30 hrs (s/d) K.Subash Chandra Bose SI இதன் அசல் முதல் தகவல் அறிக்கையுடன், வாதியின் புகார் மனுவை இணைத்து கனம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆலங்குளம் அவர்களுக்கு அனுப்பியும், மற்ற நகல்களை சம்மந்தபட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும், ஒரு நகலை விசாரணைக்கு ஆலங்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ஆடிவேல் அவர்களுக்கு வழங்கியதாக உள்ளது. இதில் நடந்த உண்மை என்ன என உற்று நோக்க வேண்டும். இதில் மற்றொரு தரப்பு கூறுவது மண்டையை உடைத்திருக்கிறார்கள், உதவி ஆய்வாளர்

நேர்மையான நடவடிக்கைக்கு தங்கப் பதக்கம் வாங்கித் தந்தவர்,

சட்டப்படி இவர் செய்தது தவறா இல்லையா? யூனிபார்ம் இல்லாமல் சென்றாரா?

இவர் ஜாதி மதம் பார்க்காமல் குற்றம் யார் செய்தாலும் நடவடிக்கை எடுப்பவர் எனவும் இந்த விவகாரத்தில் ஜாதி புகுந்து விட்டதாகவும்,  நேர்மையானவர்கள் முக்கியமில்லை எனவும்

உண்மையிலேயே இவர் மீது குற்றம் சுமத்துபவர்கள் தான் ஜாதி வெறியர்கள், எனவும்,

இசக்கி ராஜா ஆதரவாளர்கள் கருத்தாக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...