முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கே.சி.திருமாறனுக்கு திருப்புத்தூர் மக்கள் வெற்றி தேடித் தந்தால் இரயில்வே திட்டம் வரும் பாஜக முன்னால் தலைவர் கே.அண்ணாமலை தகவல்

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் K.அண்ணாமலை  தேர்தல் பரப்புரை பயணத் திட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் சார்பில்,


அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் முன்னாள் மாநிலத் தலைவர்  கே அண்ணாமலை மேற்கொள்ளவிருக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை விவரங்கள் குறித்து தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில தேர்தல் பணிக்குழு அமைப்பாளர் BJP  பொன். ராதாகிருஷ்ணன் சார்பாக அறிக்கை அதன்படி .சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் NDA கூட்டணி சார்பில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் கே.சி.திருமாறனை திருப்பத்தூர் பேரூந்து நிலையம் அருகில் ஆதரித்து பாஜக தமிழக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்,



கே. சி.திருமாறன் வெற்றி பெற்று அநத விழாவுக்கு இரயில்வே அமைச்சரை அஸ்வின் வைஸ்ணவை வரவழைத்து ரயில்வே திட்டம் பெறறுத் தருவதாக வாக்குறுதி அளித்து, 20 ஆண்டு காலமாக மக்களை நம்பாமல் பணத்தை மட்டுமே நம்பி வெற்றி பெற்று வந்த அமைச்சர் கரு.பெரிய கருப்பன் இந்த முறை கே. சி.திருமாறனிடம் தோல்வியடைவார் எனவும் அவர் செய்த மற்றும் செய்து வரும் ஊழலைப் பட்டியலிட்டார், அதில் என்டிஏ கூட்டணிக் கட்சிகள் 12 ன் திரளான மக்களுடன் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் வேடபாளர் வேல் வழங்கினார்.தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு, வளர்ச்சியடைந்த தமிழகம் தேவை என்ற கொள்கையோடு 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் பணியாற்றி வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் KC திருமாறனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை 

"திருப்பத்தூர் தொகுதியில் 2006 ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் தொகுதியின் வளர்ச்சிக்காக எதுவும் செய்ய வக்கற்ற ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கிறார் கே.ஆர்.பெரியகருப்பன் இப்பகுதியில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க திமுக அரசும் அமைச்சர் பெரியகருப்பனும் என்ன செய்தார்கள்? 
எனினும், நமது மத்திய பாஜக அரசு சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினார்கள். ஆனால், அதையும் தடுத்து பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவிடாமல் செய்துள்ளனர். அதற்கு காரணம், கே.ஆர்.பெரியகருப்பனின் மனைவி பெயரில் கிரிஷ் ஆக்வா எனும் தண்ணீர் கம்பெனி வைத்திருப்பது தான். தனது குடும்பத்தின் நிறுவனம் வளரவேண்டும் என்பதற்காக, பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க, மத்திய அரசின் ஜல் சக்தி சார்ந்த அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் திட்டத்தை முடக்கியுள்ளனர். இப்படி சுயநலமிக்க மோசமான திமுக கும்பலிடமிருந்து திருப்பத்தூர் தொகுதியை நாம் பாதுகாக்க வேண்டும்.
இந்தியாவிலேயே இரயில்வே பாதை இல்லாத ஒரே சட்டமன்றத் தொகுதி திருப்புத்தூர் தான். இத்தனை ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருக்கும் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் அதற்காக ஒருமுறையாவது கோரிக்கை வைத்திருக்கிறாரா? ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறாரா? நான் திருப்பத்தூர் மக்களுக்கு உறுதியளிக்கிறேன். நமது வெற்றி வேட்பாளர்  கே.சி. திருமாறன் ஜி வெற்றி பெற்ற பிறகு, அந்த வெற்றி விழாவில் நமது மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே நேரடியாக வருவார். திருப்பத்தூர் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வளர்ச்சியடைந்த திருப்பத்தூர் தொகுதி உருவாகும்.
அதை நடத்திக்காட்ட வேண்டும் என்றால், திருப்பத்தூர் மக்கள் அனைவரும் ஒருசேர நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் KC திருமாறனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! திருப்பத்தூர் தொகுதிக்கு வளர்ச்சி கிடைக்கட்டும்!" எனப் பேசினார்.

அதேபோல காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியனுக்கு ஆதரவாகவும்,


வாக்குகள் சேகரித்தார், உடன் கூட்டணிக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர், அதேபோல் இராஜபாளையம் தொகுதியின் வேட்பாளர் ஜெ.பிரசில்லா பாண்டியனுக்கு வாக்கு சேகரித்தார், மேலும் 

சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழ்நாடு பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரச்சாரத்திற்கு          இன்று முதல் இரண்டு நாள் பயணமாக பாஜக தேசியத் தலைவர் தமிழ்நாடு வந்தார்.

இந்தப் பயணத்தின் போது, இராமநாதபுரம் மற்றும் அறந்தாங்கியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் உரையாற்றவும். மேலும் சாத்தூர், மதுரை தெற்கு மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள சாலை வழி சநந்திப்புக் காட்சிகளிலும் பங்கேற்கிறார் அவர் உலங்கு வானூர்தி மூலம் சாத்தூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் வந்து இறங்கினார்!   தேசிய பாஜகவின் தலைவர் நிதின் நபீன் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து வந்துள்ள மேலிடத் தேர்தல் பொறுப்பாளரும் தேசிய  செய்தித் தொடர்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நரசிம்மராவ் மற்றும் முன்னாள் ஆந்திராவின் அமைச்சர் பெத்தரெட்டி ஆகியோரும் இணைந்து  மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் தேர்தல் வெற்றிக்காகச் சாத்தூர் எங்கும் சாலைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள்.நிகழ்வில்  மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் மற்றும் அணைத்து பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் பிள்ளை பாஜக தேசிய தலைவர்  நிதின் நபினை வரவேற்றார்கள்.

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,

சாத்தூர் தொகுதி மக்களின் அபாரமான ஆதரவு, உற்சாக வரவேற்பு மற்றும் அன்பான ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது. மக்களின் ஆதரவு தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது உள்ள நம்பிக்கையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இந்த அன்பும் நம்பிக்கையும் எங்களை நெகிழ வைத்ததுடன், மக்களுக்கு சேவை செய்யும் எங்கள் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.





சாத்தூர் மக்களே, உங்கள் நம்பிக்கையே எங்கள் பலம் என இன்றைய சாலை வழி நெடுக நடந்த பிரச்சாரம்  பெருந்திரளான மக்கள் கூட்டம், திமுக மற்றும் காங்கிரஸின் மோசமான ஆட்சிக்கு எதிரான மக்களின் தெளிவான தீர்ப்பாகும். மக்களின் இந்த மாபெரும் உற்சாகம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையையும், இங்கு ஒரு 'இரட்டை எஞ்சின்' அரசாங்கம் அமைய வேண்டும் எனும் அவர்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கிறது. என வேட்பாளர் தெரிவித்தார்.கே.அண்ணாமலையின் அடுத்த 9 நாட்களுக்கான தேர்தல் பரப்புரைப் பயணத் திட்டம் கீழே உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) ஒரே "நட்சத்திரப் பேச்சாளராக" அவர் உருவெடுத்துள்ளார்.

அவர் அடுத்த 9 நாட்களில் 43 பேரணிகளில் பங்கேற்க உள்ளார். ஏற்கனவே கடந்த 4 நாட்களில் மட்டும் 21 பேரணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 64 பேரணிகள் மூலம், பாஜக போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளையும் பிரச்சாரம் செய்வதுடன், சுமார் 30  வேட்பாளர்களுக்காகவும் அவர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்னும் ஏராளமான வேட்பாளர்கள் அவரைத் தங்கள் தொகுதிகளுக்கு வருமாறு அழைக்கின்றனர், ஆனால் நேரமின்மை காரணமாக அவரால் அனைவரையும் சந்திக்க இயலவில்லை.

அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அலைமோதுகின்றனர். சந்தேகத்திற்கு இடமின்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்று மிகவும் பிரபலமான மற்றும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு தலைவராக அண்ணாமலை திகழ்கிறார்! என்பது தெரிகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...