முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோனப்பட்டி பறிமுதல் செய்யப்பட்ட முருகன் திருமேனியை கமிட்டியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 கோயம்பத்தூர் மாவட்டம் ஏழாம் படைவீடான மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,


சென்னை உயர்நீதிமன்றம் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டி, அப்பகுதியில் 500 மீட்டர் சுற்றளவில் பெரிய கட்டுமானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே நிலைதான் திண்டுக்கல் மாவட்டம் சாணார் பட்டி வட்டாரம் கோணப்பட்டி மலையில் ஜோதி முருகன் கோயிலில் இருந்து அகற்றப்பட்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் தான் உள்ளன என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.

இது போன்ற வழக்குகளில், "அரசு புறம்போக்கு நிலத்தில் முருகனும் வேண்டாம், சிலுவையும் வேண்டாம்" என்பது போன்ற கருத்துகள், அனுமதி பெறாமல் வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பான சட்ட ரீதியான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. உரிய அனுமதி பெறாமல் கட்டப்படும் புதிய வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்கக் கூடாது என்ற விதிமுறை இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. கோணப்பட்டி மலை முருகன் சிலை மீண்டும் வைப்பது குறித்த விவகாரத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சிலைகள் அகற்றம் தொடர்பாகக் தமிழ்நாட்டில் மட்டுமே நிலவும் சட்டப் போராட்டங்களின் ஒரு பகுதியாகும். மீண்டும் முருகன் சிலையை நிறுவி வழிபாடு செய்து கொள்ள, தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 


ஒருங்கிணைந்த ஹிந்து சக்திக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கலாம்.

திண்டுக்கல், மாவட்டம் சிறுமலை அருகில் அதன் வடகிழக்குப் பகுதி சாணார்பட்டி ஒன்றியம், கோணப்பட்டி மலையில் பல ஆண்டுகளாக சுயமாகத் தோன்றிய முருகப்பெருமானை வைத்து கிராம மக்கள் பல தலைமுறை வழிபாடு செய்து வந்தனர். 

இந்த நிலையில் முருகப்பெருமான் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது. 

உடனே பொங்கி எழுந்த வருவாய்த்துறையினர் கடந்த மாதம் முருகன் சிலையை அகற்றி திமுக அரசின் தங்களது கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தினர்.  அரசியல் தூண்டுதல் காரணமாக 

ஜெனிபர் என்ற கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ஹிந்து முன்னணிப் பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்த கோணப்பட்டி மற்றும் ஐஞ்சுபுளிப்பட்டி  பகுதியில் கன்னடம் பேசும் இந்து ஒக்கலீக கௌடர்கள், கிருஸ்தவ மக்கள் வசிக்கும் நிலையில்  நிலையில் இந்து முன்னணி சென்னை உயர் நீதி நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தது. 

வழக்கறிஞர் இந்தூ முன்னணியின் சட்டப் போராட்டத்தால் பறிமுதல் செய்யப்பட்ட முருகன் திருமேனியை  கமிட்டியிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் முருகன் சிலையை நிறுவி வழிபாடு செய்து கொள்ள உத்தரவு பிறப்பித்தும் உயர் நீதிமன்றம் தற்போது ஆணையிட்டது.தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில்தான் உள்ளது. இதுவே தவறான நிலை இதை உறுவாக்கியது யார், இந்த நிலங்களை சமஸ்தானங்கள் செட்டில்மென்டுக்கு முன எப்படி இருந்தது என்பது இங்கு கவனிக்க வேண்டியது அவசியம்.

கோவில்களை அரசு புறம்போக்கு என வகைப்படுத்தியது யார்  சுதந்திரம் அடைவதற்கு முன் அவ்வாறு இருந்ததா என்பதே இங்கு எழு வினா ஊழல் அரசாங்கம் தான் தங்களது வசதிக்காக இந்த நிலைப்பாடு எடுத்த நிலையை காண்கிறோம்.

அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட கோணப்பட்டி மலைக்குன்றில் உள்ள அய்யனார் கோயிலில்  முருகன் சிலையை நிறுவலாம் ;என செந்தில் குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு அனுமதி வழங்கி உத்தரவு."மாவட்ட ஆட்சியர் தாசில்தார், காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு, தமிழ்நாடு கோவில்கள் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையின் சட்டம் குறித்து எந்த விதமான சட்டத் தெளிவுமில்லை' என, அதிருப்தி தெரிவித்த மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை கிளை, திண்டுக்கல் மாவட்டம் கோணப்பட்டி மலையில், அரசு தரப்பில் அகற்றப்பட்ட ஜோதி முருகன் சிலையை, மீண்டும் நிறுவ உத்தரவிட்டது. கோவில் நடவடிக்கைகளில் தலையிட வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்களுக்கு உரிமை இல்லை. அவர்கள் கிராம மக்களின் அனுமதியின்றி சிலையை தன்னிச்சையாக எடுத்துச் செல்ல முடியாது. இந்திய 

அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கிய மத சுதந்திரம், அவரவர் கலாசாரம் மற்றும் சமூகத்திற்கேற்ப செயல்படுவதற்கான உரிமையை உறுதி செய்துள்ளது. சிலையை மீண்டும் நிறுவ திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி தாலுகா தாசில்தார், மற்றும் காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். என்ற மனுவை உயர்நீதிமன்ற

நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆஜரானார்.

அதில் தரப்பட்ட 

நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு:

அனுமதியின்றி முருகன் சிலையை நிறுவியதாக அரசு தரப்பில் தெரிவித்தது. இவ்வழக்கு நிலுவையில் இருந்த போது, சிலையை மீண்டும் நிறுவ அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அதைப் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ஜனவரி மாதம் 29 ஆம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தார். காவல்துறை தரப்பில், 'மனுதாரர் உள்ளிட்ட சிலரின் இச்செயலானது சட்டம் -ஒழுங்கு பிரச்னையை உருவாக்கக்கூடும்' என, தெரிவிக்கப்பட்டது.

அக்குன்றானது அரசு புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தப்பட்ட சர்வே எண்ணில் அமைந்துள்ளது. அதன் மீது ஒரு வேல் நிறுவப்பட்டுள்ளது. அது கிராம மக்களால் வழிபடப்படுகிறது. இவ்விபரம் . வருவாய்த்துறை ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலை வழிபடுவதற்கு எவ்விதமான தடையும் இல்லை என, அரசு தரப்பில் ஒப்புக்கொண்டுள்ளனர். இவ்விஷயமே, அவ்வேலைக் கொண்ட ஒரு கோவில் அங்குள்ளது என்பதை நிரூபிக்க போதுமானது.

வேல்' என்பது முருகனுக்குரியது என்பது நன்கு அறியப்பட்ட உண்மை. வருவாய்த்துறை ஆவணங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, அச்சிறு குன்றின் மீது ஒரு வேல், ஏற்கனவே இருக்கும் நிலையில், அதனுடன் சேர்த்து முருகன் சிலையை பிரதிஷ்டை செய்வது தவறல்ல. சிலையை நிறுவுவது ஆட்சேபனைக்குரியது என, அரசு தரப்பில் *முன்வைக்கும் வாதத்திற்கு அடிப்படை ஆதாரமில்லை. வேல், தொன்றுதொட்டு அங்கு இருந்து வருவதால், அப்பகுதியானது வேலுடன் கூடிய ஒரு பழமையான முருகன் கோவில் என்றே கருதப்பட வேண்டும். 'அங்கு ஒரு பழமையான கோவில் இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் மனுதாரரால் சமர்ப்பிக்கவில்லை' என, அரசு தரப்பு முன்வைத்த கருத்து முற்றிலும் தவறு. அது வருவாய்த்துறை ஆவணங்களுக்கு முரணானது.

வேலுடன் சேர்த்து முருகனின் சிலையை அங்கு நிறுவுவது, அரசியலமைப்பு பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத சுதந்திரத்திற்கு உட்பட்டது. கோவில் மற்றும் அதற்குச் சொந்தமான நிலங்களை பாதுகாக்கும் பொருட்டு, கோவிலின் மூலவர் பெயரிலேயே கோவில்களுக்கு பட்டா வழங்க வேண்டிய தருணம் இது.

'அங்கு கரடுமுரடான பாதை உள்ளது. முறையான பாதை, பாதுகாப்பு இல்லாததால் சிலையை நிறுவ அனுமதி வழங்க முடியாது' என, அரசு தரப்பு வேறு காரணம் கூறியது. இவ்வாதம் விசித்திரமானது; அது ஏற்க முடியாதது.

பழநி கோவிலில் முன்பு கரடுமுரடான பாதை இருந்தது. பின், மலையில் ஏறுவதற்காக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. சிலையை நிறுவுவதில் கிராம மக்களுக்கு விருப்பமில்லை என்பதற்கு, அரசு தரப்பில் ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்கவில்லை. முருகனுக்கு பூஜைகள் அல்லது அங்கு திருவிழாக்களை நடத்துவதால் மட்டும் சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படாது. கோவிலின் பக்தர் என்ற முறையில் மனுதாரர் வழக்கு தாக்கல் செய்ய, நிவாரணம் கோர உரிமையுடையவர்.

மனுதாரர் ஒரு தனிநபர்; அறங்காவலர் அல்ல. அறநிலையத்துறையின் கீழ் பதிவு செய்யவில்லை என்ற அரசு தரப்பின் வாதங்கள் அறநிலையத்துறை சட்டத்தின் விதிகளுக்கு முரணானவை. 

மாவட்ட ஆட்சித் தலைவர் , தாசில்தார், காவல்துறையினர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், ஹிந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் குறித்து எவ்விதமான தெளிவும் இல்லை என்பதைத் தான் இது வெளிப்படுத்துகின்றன.  ஆட்சியர் ஜனவரி ., 29 ஆம் தேதியில் பிறப்பித்த உத்தரவில், சிலையை நிறுவ அனுமதி வழங்க மறுத்துள்ளார். அது ரத்து செய்யப்படுகிறது. சிலையை மனுதாரர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அவர்கள் சிலையை குறிப்பிட்ட இடத்தில் நிறுவ வேண்டும். அவர்களும், பிற பக்தர்களும் இணைந்து திருவிழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...