கோயம்பத்தூர் மாவட்டம் ஏழாம் படைவீடான மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்,
சென்னை உயர்நீதிமன்றம் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டி, அப்பகுதியில் 500 மீட்டர் சுற்றளவில் பெரிய கட்டுமானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே நிலைதான் திண்டுக்கல் மாவட்டம் சாணார் பட்டி வட்டாரம் கோணப்பட்டி மலையில் ஜோதி முருகன் கோயிலில் இருந்து அகற்றப்பட்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் தான் உள்ளன என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
இது போன்ற வழக்குகளில், "அரசு புறம்போக்கு நிலத்தில் முருகனும் வேண்டாம், சிலுவையும் வேண்டாம்" என்பது போன்ற கருத்துகள், அனுமதி பெறாமல் வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பான சட்ட ரீதியான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. உரிய அனுமதி பெறாமல் கட்டப்படும் புதிய வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்கக் கூடாது என்ற விதிமுறை இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. கோணப்பட்டி மலை முருகன் சிலை மீண்டும் வைப்பது குறித்த விவகாரத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சிலைகள் அகற்றம் தொடர்பாகக் தமிழ்நாட்டில் மட்டுமே நிலவும் சட்டப் போராட்டங்களின் ஒரு பகுதியாகும். மீண்டும் முருகன் சிலையை நிறுவி வழிபாடு செய்து கொள்ள, தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஒருங்கிணைந்த ஹிந்து சக்திக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கலாம்.
திண்டுக்கல், மாவட்டம் சிறுமலை அருகில் அதன் வடகிழக்குப் பகுதி சாணார்பட்டி ஒன்றியம், கோணப்பட்டி மலையில் பல ஆண்டுகளாக சுயமாகத் தோன்றிய முருகப்பெருமானை வைத்து கிராம மக்கள் பல தலைமுறை வழிபாடு செய்து வந்தனர்.
இந்த நிலையில் முருகப்பெருமான் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது.
உடனே பொங்கி எழுந்த வருவாய்த்துறையினர் கடந்த மாதம் முருகன் சிலையை அகற்றி திமுக அரசின் தங்களது கடமை உணர்ச்சியை வெளிப்படுத்தினர். அரசியல் தூண்டுதல் காரணமாக
ஜெனிபர் என்ற கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ஹிந்து முன்னணிப் பொறுப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கோணப்பட்டி மற்றும் ஐஞ்சுபுளிப்பட்டி பகுதியில் கன்னடம் பேசும் இந்து ஒக்கலீக கௌடர்கள், கிருஸ்தவ மக்கள் வசிக்கும் நிலையில் நிலையில் இந்து முன்னணி சென்னை உயர் நீதி நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தது.
வழக்கறிஞர் இந்தூ முன்னணியின் சட்டப் போராட்டத்தால் பறிமுதல் செய்யப்பட்ட முருகன் திருமேனியை கமிட்டியிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் முருகன் சிலையை நிறுவி வழிபாடு செய்து கொள்ள உத்தரவு பிறப்பித்தும் உயர் நீதிமன்றம் தற்போது ஆணையிட்டது.தமிழ்நாட்டில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில்தான் உள்ளது. இதுவே தவறான நிலை இதை உறுவாக்கியது யார், இந்த நிலங்களை சமஸ்தானங்கள் செட்டில்மென்டுக்கு முன எப்படி இருந்தது என்பது இங்கு கவனிக்க வேண்டியது அவசியம்.
கோவில்களை அரசு புறம்போக்கு என வகைப்படுத்தியது யார் சுதந்திரம் அடைவதற்கு முன் அவ்வாறு இருந்ததா என்பதே இங்கு எழு வினா ஊழல் அரசாங்கம் தான் தங்களது வசதிக்காக இந்த நிலைப்பாடு எடுத்த நிலையை காண்கிறோம்.
அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட கோணப்பட்டி மலைக்குன்றில் உள்ள அய்யனார் கோயிலில் முருகன் சிலையை நிறுவலாம் ;என செந்தில் குமார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு அனுமதி வழங்கி உத்தரவு.

.jpg)
.jpg)


கருத்துகள்