சத்ரு சம்ஹார யாகம் செய்து சாமி தரிசனம் செய்தார் தவெக தலைவர் நடிகர் விஜய் சத்ரு சம்ஹார ஹோமத்தை ஜென்ம நட்சத்திர திதிகளில் செய்வது சிறப்பு.
முருகன் வழிபாட்டிற்குரிய வைகாசி விசாகம், கார்த்திகை மாதம், கந்த சஷ்டி விரத தினங்களில் செய்வது சிறப்பான பலன், மேலும் முருகன் கோயிலில் இந்த ஹோமத்தை செய்வது பலன்களை விரைவாகத் தர வல்லதாகும். யாக வேள்வி குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களைத் துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களைத் தருகிறது. ஹோமத்திற்காக 6 வகையான பூக்கள், பழங்கள், திரவியங்கள் மற்றும் நைவேத்திய பிரசாதங்களை வழங்க வேண்டும்.
சத்ரு சம்ஹார ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாகத் தரப்படுவதை பூஜையறையில் வைத்து தினமும் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் தோஷங்களைப் போக்குகிறது.
சத்ரு சம்ஹார ஹோமத்தின் பிரதான நோக்கமாக இருப்பது நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை அறவே ஒழிப்பதோடு, பின் வரும் காலங்களில் எத்தகைய எதிரிகளும் ஏற்படாமல் தடுக்க வல்லதாகிறது. மேலும் அத்தகைய எதிரிகளால் நமக்கு தீய மாந்திரிக கலையின் மூலம் செய்யப்பட்ட செய்வினை, மாந்திரீக ஏவல் போன்றவற்றின் எதிர்மறை ஆற்றல்களை அழித்துக் காக்கிறது. துஷ்ட சக்திகள் எப்போதும் நுழையாமல் தடுக்கிறது காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படாமல் கெட்டது அனைத்திலும் சிறப்பான வெற்றியை பெருமாறு செய்ய வல்ல ஒரு ஹோமம் இந்த சத்ரு சம்ஹார ஹோமம்..கைக்கு அருகே வெற்றி. பல்வேறு கணிப்புகளுக்கு மத்தியில் 60 லிருந்து 140 தொகுதிகளுக்குக் குறைவில்லாமல் தவெக ஆட்சியைப் பிடிக்குமென ஒருபக்கம் புகழ்பெற்ற ஜோதிடர்கள் மற்றும் தேர்தல் சர்வே நிபுணர்கள் தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு சொல்லப்படுவதால், தற்போது விஜய்க்கும் மக்கள் மீதான அந்த நம்பிக்கை அபரிமிதமாக வளர்ந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் குறிப்பாக திமுக என்ன மாயாஜாலம் செய்யும் என்பதை அவரது அலுவலகம் சார்ந்த ஜான் ஆரோக்கியசாமியும் அரசியல் தேர்தல் பிரிவு ஆதவ் அர்ஜுனாவும் நடிகர் விஜய்யிடம் வலியுறுத்தியிருப்பதால் வாக்கு எண்ணிக்கை நடக்கும் 63 மையங்களிலும் கவனம் தேவை என்பதை தவெகவின் மாவட்ட செயலாளர்களிடம் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் நடிகர் விஜய்.
மா.செ.க்களிடம் பேசும் விஜய், வெற்றி நமது கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. நல்ல தீர்ப்பை மக்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள். தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் தேர்தல் மேலாண்மைப் பிரிவுச் செயலாளர் ஆதவ் அரஜுனாவும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , மற்றும் நடிகர் விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட சிலருடன் நேற்று முன்தினம் பேசிக்கொண்டிருந்த நடிகர் விஜய், உங்களிடமிருந்து மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் எனக்கு வரும் தகவல்களும் நமக்கு பாசிட்டிவ் தகவல் தான்
அதற்கு ஜான் மற்றும் ஆதவ் இருவரும், இந்த தேர்தலில் வீசியிருப்பது விஜய்யிசம். தமிழக மக்கள் ஒரு முடிவு எடுத்தால் அது ஒரே மாதிரி இருக்கும். சென்னையில் உள்ள ஒருவர் நினைக்கும் அதே விசயத்தை கன்னியாகுமரியில் இருக்கும் கடைகோடி சாமானியனும் நினைப்பான். அதனால் தான், தமிழ்நாடு எப்போதும் ஒரே மாதிரி அலை வீசும். இந்தத் தேர்தலில் வீசியிருப்பது விஜய் அலை. இதனை விஜய்யிசம் என்றுதான் எல்லோரும் சொல்லி வருகிறார்கள்.
ஆட்சி நம் வசம் வந்துவிடும். தவெக ஆட்சி அமைந்து விட்டால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு தவெக தான். 1967- ஆம் ஆண்டில் காங்கிரசிடமிருந்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பிறகு திராவிடக் கட்சிகள் தான் ஆட்சி செய்தன. திமுகவிடம் இழந்த ஆட்சி அதிகாரத்தை இப்போது வரை காங்கிரசால் மீட்க முடியவில்லை. அதேபோல தவெகவிடம் ஆட்சியை இழக்கும் திமுக, இனி எப்போதும் மீட்க முடியாது என அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில்தான், பிரபல ஜோதிடரிடம் ஆலோசித்தார் விஜய். அப்போது, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் வெற்றி இருக்கிறது. அதை முழுமையாக உங்கள் வசமாக்க திருச்செந்தூர் முருகனுக்கு வழிபாடு நடத்தி வாருங்கள் என யோசனையின் படியே வழிபாடு நடத்தியிருக்கிறார் நடிகர் விஜய்.ஃபிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல், அளித்த பேட்டியில் நடிகர் விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து கணிப்புகளை வெளியிட்டார்.
கடந்த காலக் கணிப்புகளை நினைவுகூர்ந்தவர், 2021-ஆம் ஆண்டில் திமுக மு. க.ஸ்டாலின் முதல்வராவார் என்றும், எடப்பாடி கே.பழனிசாமி ஜெயிக்க மாட்டார் என்றும் தான் முன்கூட்டியே வீடியோ வெளியிட்டதாகக் குறிப்பிட்டார். அதேபோல், 2016-ஆம் ஆண்டில் ஜெயலலிதா குறித்துத் தான் சொன்ன கணிப்புகளும் பலித்ததாகத் தெரிவித்தார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், இந்த முறை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் மீண்டும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
விஜய்யின் ஜாதகப்படி நான் சொல்கிறேன், இந்தத் தேர்தல் ஆட்டத்தில் அவர் நிச்சயமாக வென்று விடுவார். நடிகர் விஜய்தான் அடுத்த முதல்வர், அவரே ஆளும் கட்சியாக வருவார். இது எனது தனிப்பட்ட விருப்பமல்ல, ஜோதிடக் கணிதத்தின் படி நான் சொல்கிறேன். இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் போன்ற மாமன்னர்கள் ஜோதிடத்தை பின்பற்றியே செயல்பட்டனர். அந்த வரிசையில் எனது கணிப்பின்படி நடிகர் விஜய் வெற்றி பெறுவது உறுதி. நடிகர் விஜய்க்கு இருக்கும் ஆதரவு குறித்து பேசியவர், தலைவர் விஜய்க்கான ஆதரவு சுனாமி போல உள்ளது. சுனாமி வருவதைக் கூடக் கணித்து விடலாம், ஆனால் நடிகர் விஜய்க்கு இருக்கும் ஆதரவின் அளவைக் கணிக்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் ஆதரவு சுனாமி போலத் திரண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும்போது இது அனைவருக்கும் புரியும் என்றார்.தமிழ்நாட்டில் அதிமுக துவங்கிய போது எம்ஜிஆரை மலையாளி எனவும், செல்வி ஜெ.ஜெயலலிதா வந்தபோது கன்னடத்துக்காரி என்ற கூட்டம் தான் தற்போது தமிழ் நடிகர் விஜய் வந்த போது தற்குறி என்கிறது. த்ராவிடர் கழகம் எனும் திகவை ஈ. வே. ராமசாமியின் உதவியாளராக வந்த திமுக துவங்கி உடைத்து சி.என்.அண்ணாதுரை, மற்றும் ஈ. வே. ராமசாமி அண்ணன் வெ.கிருஷ்ணசாமி மகன் ஈ.வெ கி சம்பத் ஆகியோருடன் இணைந்த அனைவரையும் கண்ணீர் துளிகள் என்றார் ஈ வெ ராமசாமி.
படிக்காத கு.காமராஜை படித்த சீனிவாசன் விருதுநகரில் வென்றார் என்றார் சி. என்.அண்ணாதுரை.
உச்ச நடிகன் பயந்து ஒதுங்கிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகச் சொன்னபோது மத அரசியல் என்றார்கள். அவர் உடனே ஆன்மீக அரசியல் என்றார். ஆனால் அவர் செய்த சில பழைய தவறு காரணமாக பின்வாங்க வேண்டியநிலை அது வெளிவராத ரகசியம்.
தற்போது நடிகர் விஜய் ய் கட்சியினரை தற்குறிகள் என்கிறார்கள்.
இது தமிழர்களை இழிவபடுத்தும் அதே தொடர் செயல். தான் இது ஊழல் வாதிகள் செய்யும் வாடிக்கை நிலை.






.jpg)

கருத்துகள்