மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் படி தோல்வியடைந்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி
தவறான காரணங்களைச் சொல்லி நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என அடம் பிடித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் தான் அவர் மீது பாயும்!.எதையும் மதிக்கத் தெரியாத அகம்பாவங்களுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை மேற்கு வங்காளத்தில் மே மாதம் 9-ஆம் தேதியில் பதவியேற்பு விழா முதல்வர் சுவேந்து அதிகாரிக்கு ஆளுனர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணமும், இரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறர், சுவேந்து அதிகாரி மற்றும் அக்னிமித்ரா பால் பெயர்கள் பரிசீலனையில் இறுதியில்
மேற்கு வங்க மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பா.ஜ.க.வின் வெற்றி நாயகன் என்று அழைக்கப்படும் சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளார்.
இதன் மூலம், தன் அரசியல் குருவான மம்தா பானர்ஜியின் இடத்தை தட்டிப் பறித்த சுவேந்து அதிகாரி. மேற்கு வங்காள தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பாஜகவின் சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம், கொல்கத்தாவில் நாளை வெள்ளிக் கிழமை மே மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சுவேந்து அதிகாரி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாஜக வின் மாநிலத் தலைவர் சாமிக் பட்டாச்சார்யா, சுவேந்து அதிகாரியின் பெயரை முன்மொழிய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதை முறைப்படி அறிவிக்கிறார். தொடர்ந்து, சுவேந்து அதிகாரி, சாமிக் பட்டாச்சார்யா மற்றும் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சுனில் பன்சல் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளனர்.
புதிய அரசு பதவியேற்கும் விழா சனிக்கிழமை மே மாதம் 9 ஆம் தேதி நடைபெறும் என சாமிக் பட்டாச்சார்யா உறுதிப்படுத்தினார். நோபல் பரிசு பெற்ற வங்கத்தின் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான ‘ரவீந்திர ஜெயந்தி’ அன்று இப்பதவியேற்பு விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.மேற்கு வங்கத்தில் முதல் முறையாக அமையவுள்ள பா.ஜ.க. ஆட்சியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்த பிரம்மாண்ட விழாவில் பங்கேற்க உள்ளனர்.
மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் என்பவர் மண்ணின் மைந்தராகவும், வங்காள மொழியில் பயின்றவராகவும் இருக்க வேண்டும் என்று அமித் ஷா ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். அந்த தகுதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்பவராக சுவேந்து அதிகாரி திகழ்கிறார். இதனிடையே முதல்வர் பதவிக்கான பந்தயத்தில் அசன்சோல் தெற்குத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.வின் அக்னிமித்ரா பாலின் பெயரும் பலமாக பேசப்படுகிறது.
பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர் பேசுகையில், “முதல்வர் பதவிக்கான பட்டியலில் சுவேந்து அதிகாரியின் பெயர் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில், மாநிலத் தலைவர் சாமிக் பட்டாச்சார்யா மற்றும் மாநிலத் துணைத் தலைவர் அக்னி மித்ரா பால் ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன” என்றார்.
அசன் சோல் தெற்குத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸின் தபஸ் பானர்ஜியை 40,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அக்னிமித்ரா பால் அபார வெற்றி பெற்றுள்ளார்.






கருத்துகள்