ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமனம்
முப்படைகளின் தலைமைத் தளபதியாக, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்தப் பதவியில் பொறுப்பேற்கும் நாள் முதல் மறு உத்தரவு வரும் வரை, மத்திய ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முப்படைகளின் தற்போதைய தலைமைத் தளபதியான ஜெனரல் அனில் சவுகான், மே 30, 2026 அன்று ஓய்வு பெறுகிறார்.
லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, செப்டம்பர் 1, 2025 முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ராணுவ ஆலோசகராகப் பொறுப்பு வகிக்கிறார். முன்னதாக, ஜூலை 1, 2024 முதல் ஜூலை 31, 2025 வரை, ராணுவப் படைத் துணைத் தலைவராகவும், மார்ச் 2023 முதல் ஜூன் 2024 வரை, மத்திய படைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
இந்த மூத்த ராணுவ அதிகாரி, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றில் படித்து பட்டம் பெற்றுள்ளார். டிசம்பர் 14, 1985 அன்று 'கார்வால் ரைபிள்ஸ்' படைப்பிரிவின் 8-வது படைப் பிரிவில், அவர் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். பிராக்னெல்லில் (இங்கிலாந்து) அமைந்துள்ள கூட்டுப் படைகளின் படைப் பிரிவின் பணியாளர் கல்லூரி மற்றும் புது தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கலைத்துறையில் முதுகலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில், பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளில் எம்.ஃபில் பட்டமும் பெற்றுள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி அனுபவம் கொண்ட, லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, பல்வேறு வகையான போர்க்களச் சூழல்களிலும், மாறுபட்ட நிலப்பரப்புகளிலும் பணியாற்றியுள்ளார்; மேலும் பல்வேறு படைப் பிரிவுகள், பணியாளர் மற்றும் பயிற்சி சார்ந்த பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். அசாமில் நடைபெற்ற 'ஆபரேஷன் ரைனோ' நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் '16 கார்வால் ரைபிள்ஸ்' படைப்பிரிவையும்; ஜம்மு காஷ்மீரில் '168-வது காலாட்படைப் பிரிவையும்', சவாலான செயல்பாட்டுச் சூழல் கொண்ட மத்தியப் பிரிவில் '17-வது மலைப்படைப் பிரிவையும்' அவர் வழிநடத்தியுள்ளார். இந்திய ராணுவத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள முதன்மையான தாக்குதல் படைப்பிரிவான '2-வது கார்ப்ஸ்' பிரிவை வழிநடத்திய பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, 'பரம விசிஷ்ட சேவா பதக்கம்', 'அதி விசிஷ்ட சேவா பதக்கம்', 'சேனா பதக்கம்' மற்றும் 'விசிஷ்ட சேவா பதக்கம்' ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணியை (ஓய்வு.) மே 9, 2026 முதல் பாதுகாப்புப் பணியாளர்களின் புதிய தலைமை அதிகாரியாக (சிடிஎஸ்) நியமித்தது, மே 30, 2026 முதல் அமலுக்கு வந்தது. ஜெனரல் அனில் சௌஹானுக்குப் பிறகு இந்தியாவின் 3வது சிடிஎஸ் ஆக பதவியேற்றார். பதவிக்காலம்: ஜெனரல் அனில் சௌஹானின் பதவிக்காலம் முடிந்ததும், 30 மே 2026 முதல் CDS ஆகப் பொறுப்பேற்பார். பின்னணி: தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் (NSCS) ராணுவ ஆலோசகராக 1 செப்டம்பர் 2025 முதல் பணியாற்றுகிறார், அவர் முன்பு ராணுவ உயர்நிலைக் குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 14 டிசம்பர் 1985 அன்று கர்வால் ரைபிள்ஸ், அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டு வந்தார். அஸ்ஸாமில் 16 கர்வால் ரைபிள்ஸ், ஜே&கே 168 காலாட்படை படை, 17 மலைப் பிரிவு மற்றும் 2 கார்ப்ஸ். நிபுணத்துவம் மற்றும் கவனம்: செயல்பாட்டு இயக்கவியல் பற்றிய ஆழமான புரிதலுக்கு அறியப்பட்ட அவர், குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில், அவர் நாடகத்துறையை வழிநடத்தும் முயற்சியில் விரிவான அனுபவம் பெற்றவர். PVSM, AVSM, SM, மற்றும் VSM ஆகியவற்றைப் பெற்றவர். 31 ஜூலை 2025 அன்று இராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட அதிகாரியின் செயலில் சேவைக்குத் திரும்பியதைக் குறிக்கிறது.இந்தியாவின் முப்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மகிழ்ச்சி! நல்வாழ்த்துகள்!!

கருத்துகள்