முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்

ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமனம்

முப்படைகளின் தலைமைத் தளபதியாக, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்தப் பதவியில் பொறுப்பேற்கும் நாள் முதல் மறு உத்தரவு வரும் வரை, மத்திய ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் செயல்படுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முப்படைகளின் தற்போதைய தலைமைத் தளபதியான ஜெனரல் அனில் சவுகான், மே 30, 2026 அன்று ஓய்வு பெறுகிறார்.

லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, செப்டம்பர் 1, 2025 முதல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ராணுவ ஆலோசகராகப் பொறுப்பு வகிக்கிறார். முன்னதாக, ஜூலை 1, 2024 முதல் ஜூலை 31, 2025 வரை, ராணுவப் படைத் துணைத் தலைவராகவும், மார்ச் 2023 முதல் ஜூன் 2024 வரை, மத்திய படைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

இந்த மூத்த ராணுவ அதிகாரி, தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றில் படித்து பட்டம் பெற்றுள்ளார். டிசம்பர் 14, 1985 அன்று 'கார்வால் ரைபிள்ஸ்' படைப்பிரிவின் 8-வது படைப் பிரிவில், அவர் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். பிராக்னெல்லில் (இங்கிலாந்து) அமைந்துள்ள கூட்டுப் படைகளின் படைப் பிரிவின் பணியாளர் கல்லூரி மற்றும் புது தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். லண்டன் கிங்ஸ் கல்லூரியில் கலைத்துறையில் முதுகலைப் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில், பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளில் எம்.ஃபில் பட்டமும் பெற்றுள்ளார்.

40 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி அனுபவம் கொண்ட, லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, பல்வேறு வகையான போர்க்களச் சூழல்களிலும், மாறுபட்ட நிலப்பரப்புகளிலும் பணியாற்றியுள்ளார்; மேலும் பல்வேறு படைப் பிரிவுகள், பணியாளர் மற்றும் பயிற்சி சார்ந்த பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். அசாமில் நடைபெற்ற 'ஆபரேஷன் ரைனோ' நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் '16 கார்வால் ரைபிள்ஸ்' படைப்பிரிவையும்; ஜம்மு காஷ்மீரில் '168-வது காலாட்படைப் பிரிவையும்', சவாலான செயல்பாட்டுச் சூழல் கொண்ட மத்தியப் பிரிவில் '17-வது மலைப்படைப் பிரிவையும்' அவர் வழிநடத்தியுள்ளார். இந்திய ராணுவத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள முதன்மையான தாக்குதல் படைப்பிரிவான '2-வது கார்ப்ஸ்' பிரிவை வழிநடத்திய பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, 'பரம விசிஷ்ட சேவா பதக்கம்', 'அதி விசிஷ்ட சேவா பதக்கம்', 'சேனா பதக்கம்' மற்றும் 'விசிஷ்ட சேவா பதக்கம்' ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணியை (ஓய்வு.) மே 9, 2026 முதல் பாதுகாப்புப் பணியாளர்களின் புதிய தலைமை அதிகாரியாக (சிடிஎஸ்) நியமித்தது, மே 30, 2026 முதல் அமலுக்கு வந்தது. ஜெனரல் அனில் சௌஹானுக்குப் பிறகு இந்தியாவின் 3வது சிடிஎஸ் ஆக பதவியேற்றார். பதவிக்காலம்: ஜெனரல் அனில் சௌஹானின் பதவிக்காலம் முடிந்ததும், 30 மே 2026 முதல் CDS ஆகப் பொறுப்பேற்பார். பின்னணி: தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் (NSCS) ராணுவ ஆலோசகராக 1 செப்டம்பர் 2025 முதல் பணியாற்றுகிறார், அவர் முன்பு ராணுவ உயர்நிலைக் குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். 14 டிசம்பர் 1985 அன்று கர்வால் ரைபிள்ஸ், அவர் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டு வந்தார். அஸ்ஸாமில் 16 கர்வால் ரைபிள்ஸ், ஜே&கே 168 காலாட்படை படை, 17 மலைப் பிரிவு மற்றும் 2 கார்ப்ஸ். நிபுணத்துவம் மற்றும் கவனம்: செயல்பாட்டு இயக்கவியல் பற்றிய ஆழமான புரிதலுக்கு அறியப்பட்ட அவர், குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில், அவர் நாடகத்துறையை வழிநடத்தும் முயற்சியில் விரிவான அனுபவம் பெற்றவர். PVSM, AVSM, SM, மற்றும் VSM ஆகியவற்றைப் பெற்றவர். 31 ஜூலை 2025 அன்று இராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட அதிகாரியின் செயலில் சேவைக்குத் திரும்பியதைக் குறிக்கிறது.இந்தியாவின் முப்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மகிழ்ச்சி! நல்வாழ்த்துகள்!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...