12 திமுகவின் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டை அண்ணாமலை திரும்பப் பெறவில்லை, டி. ஆர் பாது மட்டுமே அவதூறு வழக்கை வாபஸ் வாங்கியுள்ளார்
அவதூறு வழக்கை சாட்சிகளுக்கான நிலையில் திமுகவின் டீ ஆர் பாலு திரும்பப் பெறுகிறார். ஆக. ஊழல் உண்மை.
என்பதே இதில் கருத்து வீ த லீடர் அமைப்பு அண்ணாமலை மீதான வழக்கை திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு திரும்பப் பெற்றார்.
திமுகவின் தற்போதய தலைவரும் முன்னாள் முதல்வருமான மு. க.ஸ்டாலின், அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி, நடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டிஆர்.பாலு உள்ளிட்ட 12 நபர்களின் சொத்துப் பட்டியலை டிஎம்கே ஃபைல்ஸ் என்ற பெயரில், 2023 ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் பாஜக தலைவரும் வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவருமான அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இதில் டி.ஆர் பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்த நிலையில் திமுக பொருளாளரும், நடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தார்.அதில் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள், தன்னுடைய பெயருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி 100 கோடி ரூபாய் கேட்ட மான நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் சென்னை பெருநகர சைதாப்பேட்டை 17 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன் குறுக்கு விசாரணை நடந்ததில் டி.ஆர்.பாலுவை அண்ணாமலையும் நேரில் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை மூலம் கேள்விகளைக் கேட்டு பதிவு செய்திருந்தனர்.
கடந்த 26ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, டி.ஆர். பாலுவிடம், அண்ணாமலை குறுக்கு விசாரணை நடத்தினார்.
இதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, டி.ஆர்.பாலு சார்பில், அண்ணாமலை மீது தொடரப்பட்ட மான நஷ்ட வழக்கை திரும்ப பெறுவதாகக் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. தமிழ்நாடு அரசியலில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் போது, உண்மையைத் துரத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை ஆயுதமாக்கும் பழக்கம் திமுகவுக்கு இப்போது புதிதல்ல. 2023-ஆம் ஆண்டில் அண்ணாமலை வெளியிட்ட 'DMK Files' மூலம் திமுக தலைவர்களின் சொத்து விவரங்கள், குடும்ப நிறுவனங்கள் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் முன் வைக்கப்பட்டதில் டி.ஆர். பாலு உள்ளிட்டோருக்கு எதிரான கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து பாலு தொடுத்த அவதூறு வழக்கு, நீண்ட நாட்களாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குறுக்கு விசாரணையில் அண்ணாமலை பாலுவை நேருக்கு நேர் எதிர்கொண்டார்; கப்பல் வாங்கிய விவகாரம், சொத்து மூலங்கள் உள்ளிட்ட கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில், இன்று டி.ஆர். பாலு அந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இது ஒரு பக்கம் பாலுவின் தார்மீகத் தோல்வியை மட்டுமே காட்டுகிறது. DMK Files-ல் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நீதிமன்றத்தில் பதில் சொல்ல முடியாமல், வழக்கை திரும்பப் பெற வேண்டிய நிலைக்கு திமுகவின் தலைவர்களில் ஒருவரான டி. ஆர்.பாலு தள்ளப்பட்டிருக்கிறார். இது வி த லீடர் தலைவர் அண்ணாமலையின் துணிச்சலான அணுகுமுறைக்கு கிடைத்த ஒரு வெற்றி எனக் கூறலாம். குறுக்கு விசாரணையில் பாலு தரப்பில் இருந்து அண்ணாமலையின் குடும்பத்தினர் மீதான கருத்துகள் எழுந்த போது, அண்ணாமலை தனி அவதூறு வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். அந்த உறுதியுடன் போராடியிருந்தால், ஊழல் குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்த முடியும்.
ஆனால், வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அண்ணாமலை 'சமாதானம்' என்று ஏற்றுக்கொண்டாலும் அவர் கூறிய ஊழல் முடிந்தது விடவில்லை நிலைப்பாடு ஏமாற்றமாக வில்லை ஒரு பக்கம் DMK-வின் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளார் ஊழல் சமரசத்திற்கு அவர் தயாராகி அவர் கருத்தை மறுக்வில்லை இது அவரது அரசியல் பயணத்தில் உறுதியை வெளிப்படுத்துகிறது. ஊழல் எதிர்ப்பு என்பது தேர்தல் பிரச்சாரத்திற்கான கருவி மட்டுமல்ல; அதை நீதிமன்றம் வரை தொடர்ந்து, பொதுமக்களுக்கு உண்மையை எட்டச் செய்ய வேண்டிய போராட்டம். சமாதானம் என்ற பெயரில் பின்வாங்குவதில்லை DMK-வுக்கு மீண்டும் மூச்சு விட வாய்ப்பு அளிப்பதாக அமையக் கூடாது என்பதே பலரது கருத்து.
அண்ணாமலை ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. அவரிடம் எதிர்பார்க்கப்படுவது, சட்டத்தின் முழு வலிமையையும் பயன்படுத்தி ஊழலுக்கு எதிரான போரைத் தொடர்வது தான். வழக்கு வாபஸ் என்பது டி. ஆர். பாலு மற்றும் திமுகவின் தோல்வி; ஆனால் அதை 'சமாதானம்' என்று கொண்டாட ஏதுமில்லை, நடவடிக்கை வரலாம் அரசியல் உருவகத்திற்கு பொருந்தாது. உண்மையான மாற்றத்தை விரும்புபவர்கள், இத்தகைய சமரசங்களுக்கு அப்பாற்பட்டு, தொடர்ச்சியான நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றனர். DMK Files-ஐ வெளியிட்ட துணிவு இருந்தால், அதன் விளைவுகளை முழுமையாக எதிர்கொள்ளும் உறுதியும் தேவை. இல்லையெனில், இது வெறும் அரசியல் நாடகமாக மட்டுமே முடியும். தமிழ்நாட்டு மக்கள் இன்னும் உண்மையான கணக்கு வழக்கை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மொத்தத்தில் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. T.R. பாலு மீதும் அந்த 12 நபர்கள் மீதும் அரசு ஊழல் தடுப்புத் துறையே வழக்குத் தொடரலாம், காரணம் வலுவான ஆதாரங்கள் உள்ளது.





கருத்துகள்