முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

பாரத் இன்னோவேட்ஸ் 2026 நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

பிரதமர் திரு நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மேக்ரோனும் இன்று (14.06.2026) நைஸ் நகரில் உள்ள பலே டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் அரங்கில் 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிகழ்வை கூட்டாகத் தொடங்கி வைத்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வானது, இந்திய ஆழ்தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், உலகளாவிய புத்தாக்க நிதியங்கள், தடம் பதித்த முதலீட்டாளர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கிறது. இது, உலக முக்கியத்துவம் வாய்ந்த 13 முக்கிய தொழில்நுட்பத் தூண்களின் கீழ், 120 முன்னோடி புத்தொழில் நிறுவனங்களையும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு நிறுவனங்களையும் முன்வைத்து, இந்தியாவின் முதன்மையான ஆழ்தொழில்நுட்பத்தை உலக அரங்கில் காட்சிப்படுத்துகிறது. இந்நிகழ்வில் உலகம் முழுவதிலுமிருந்து 350-க்கும் அதிகமான முன்னணி முதலீட்டாளர்களும் துணிகர மூலதன நிறுவனங்களும் பங்கேற்கின்றனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் திரு மேக்ரோனும் நிகழ்ச்சியில் உரையாற்றினர். அதிபர் மேக்ரோன் நிகழ்வுக்கு வருகை தந்தமைக்குப் பிரதமர் நன்றி தெரிவித்ததோடு, உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இந்தியாவும் பிரான்சும் உறுதியான நிலையில் கூட்டாகச் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். இச்சூழலில், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு போன்ற இந்திய-பிரான்ஸ் முன்முயற்சிகளையும், செயற்கை நுண்ணறிவு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மை, பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகிய முன்முயற்சிகளையும் அவர் எடுத்துரைத்தார். தற்போது நடைபெற்றுவரும் இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டைக் குறிப்பிட்ட பிரதமர், உலக நன்மைக்காக உழைப்பதில் இரு நாடுகளும் கொண்டுள்ள பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் 'பாரத் இன்னோவேட்ஸ்' மற்றொரு மைல்கல் என்று கூறினார். இந்தியாவில் நடைபெறும் புத்தொழில் புரட்சியை அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் கிராமப்புற மேம்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் ஆற்றலையும், நிலையான வாழ்விற்கான மேம்பட்ட உற்பத்தியையும், தூய்மையான வளர்ச்சிக்கான பசுமை ஹைட்ரஜன், மின்கலத் தொழில்நுட்பங்கள், மின்சார வாகனப் போக்குவரத்தையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.



டிஜிட்டல் யுகத்தில் நடைபெற்று வரும் தொழில்நுட்பப் புரட்சி, மனிதகுலத்திற்குப் புதிய வாய்ப்புகளை அளிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில், பாரத் இன்னோவேட்ஸ் நிகழ்விற்கு வந்துள்ள கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோரை, நம்பகமான, அனைவரையும் உள்ளடக்கிய, மனித குலத்தை மையமாகக் கொண்ட தொழில்நுட்பங்களை உருவாக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். புத்தொழில் நிறுவனங்கள் அவற்றின் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டும் மதிப்பிடப்படாமல், அதே அளவிற்கு அவை மனிதகுலத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தின் அடிப்படையிலும் மதிப்பிடப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதுவே பாரத் இன்னோவேட்ஸின் மையச் செய்தி என்று குறிப்பிட்ட அவர், உலகளாவிய புத்தாக்கத்தின் அடுத்த அத்தியாயத்தை இணைந்து உருவாக்க இந்தியாவுடன் கைகோர்க்குமாறு அங்கிருந்தவர்களை அழைத்தார். குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள், உயிரித் தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, சுகாதாரம், மருத்துவத் தொழில்நுட்பம், தூய்மையான எரிசக்தி, பிற முன்னணித் துறைகளைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனத்தினருடனும் கண்டுபிடிப்பாளர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார். தலைவர்கள் கண்காட்சியைப் பார்வையிட்டதோடு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள், உயிரித் தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, சுகாதாரம், மருத்துவத் தொழில்நுட்பம், மேம்பட்ட பொருட்கள், தூய்மையான எரிசக்தி, பிற முன்னணித் துறைகளைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனத்தினருடனும் கண்டுபிடிப்பாளர்களுடனும் கலந்துரையாடினர்.

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்தியாவை ஒரு உலகளாவிய புத்தாக்க மையமாக மாற்றுவதிலும், உலகளாவிய தொழில்நுட்பத் துறைக்குப் பங்களிப்பதில் இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்திலும் மத்திய அரசின் உறுதியான அர்ப்பணிப்பை 'பாரத் இன்னோவேட்ஸ்' எடுத்துக் காட்டுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...