பழனி, சமயபுரம் உள்ளிட்ட பரம்பரை அல்லாத 214 கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனத்திற்கான அறிவிப்பு வெளியீடு
கோயில்களின் விவரம், இணையத்தில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு
பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான
தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறங்காவலர் நியமன அறிவிப்பு அறங்காவலர் நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) என்ற துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்கு பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் (Non-hereditary Trustees) விண்ணப்பங்கள் மூலம் முறையாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான தகுதிகள், நியமன முறைகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிகள் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.1. அறங்காவலர்கள் தகுதிகள்இந்து மதம்: விண்ணப்பதாரர் கண்டிப்பாக இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.பின்னணி: ஒழுக்கமானவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், கோயில் திருப்பணிகளில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
சமூகப் பிரதிநிதித்துவம்: அறங்காவலர் குழுவில் கட்டாயம் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் (SC/ST) சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.2. நிர்வகிக்கும் அதிகார அமைப்புகள்ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள கோயில்கள்: மாநில அரசால் நேரடியாக அறங்காவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.ரூ.10 லட்சத்திற்கும் குறைவான வருமானம்: மாவட்ட அளவிலான குழுக்கள் மூலமாக நியமிக்கப்படுகின்றனர்.கோயில் குழு அமைப்பு: ஒவ்வொரு கோயில் அறங்காவலர் குழுவிலும் குறைந்தபட்சம் 3 முதல் அதிகபட்சம் 5 உறுப்பினர்கள் வரை இருப்பார்கள்.3. விண்ணப்பிக்கும் முறைகோயில் நிர்வாகப் பணிகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பங்களிப்பை உறுதி செய்யவும் அவ்வப்போது அறநிலையத்துறை சார்பில் அறிவிப்புகள் (Notifications) வெளியிடப்பட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் HR&CE Official Website வாயிலாக அறிவிப்புகளைக் கண்டறிந்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ் இந்து சமய திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்வதற்காக பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும் மூன்று அறங்காவலர்களுக்கு குறையாமலும், ஐந்து அறங்காவலர்களுக்கு மிகாமலும் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும். இக்குழுவில் பெண் உறுப்பினர் ஒருவரும் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரும் இடம் பெற வேண்டும். இக்குழுவின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் ஆகும்.
தக்கார் நியமனம் அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அல்லது தற்காலிகமாக காலியிடம் ஏற்படும் பொழுது அடுத்த அறங்காவலர் குழுநியமனம் செய்யப்படும் வரை, திருக்கோயிலின் அறங்காவலருக்குரிய கடமைகளை செய்திட இடைக்கால ஏற்பாடாக தகுதியான ஒருவர் தக்காராக நியமனம் செய்யப்படுவார்.அறங்காவலர்கள் நியமனம்
இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ் இந்து சமய திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்வதற்காக பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். ஸ்கீம் இல்லாத தேவஸ்தான சமஸ்தான நிர்வாகம் மற்றும் மடாதிபதி இல்லாத பரம்பரை அறங்காவலர் இல்லாத ஆலயங்களில் மட்டுமே அறநிலையத்துறை அறங்காவலர்களை நியமனம் செய்யமுடியும், அதை ஊழலுக்கு அப்பாற்பட்டு நல்ல நபர்கள் நியமித்தால் நல்லது.

























கருத்துகள்