முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

3 ஆண்டுகள் ஒப்பந்தப் பணிக்கு அரசு வழக்கறிஞர் நியமனம் அறிவிக்கை

அரசு வழக்கறிஞர்கள் நியமனம்


தொடர்பான வழக்கில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழ் நாடு அரசுக்கு செனனை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டது.




இந்த நிலையில்  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக கூட்டணி ஆட்சியமைத்தது. தொடர்ந்து பல்வேறு நீதிமன்றங்களுக்கான புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.




இதற்கிடையில் உச்ச நீதி​மன்றம், சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்றம் மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதி​மன்​றங்​களில் கூடு​தல் அட்​வகேட், கூடு​தல் அரசு வழக்​கறிஞர், சிறப்பு அரசு வழக்​கறிஞர்​கள், அரசு வழக்​கறிஞர்​கள் என 204 பணிகள் அடங்கிய நியமனம் குறித்து சட்​டத்​துறை அமைச்​சர் நிர்மல்குமாருக்கு காங்​கிரஸ் கட்சி சார்​பில் கடிதம் அளிக்​கப்​பட்​ட நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழ் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதில் அரசு அரசியல் தலையீடுகள் உள்ளது.






 தற்போதைய ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியில் இருக்கக்கூடிய ஒரு அரசியல் கட்சி (காங்கிரஸ்) கட்சி எந்தெந்த நீதிமன்றங்களில் யார் யாரை நியமிக்க வேண்டும் என தனது கட்சிக்காரர்களை அறிவித்துள்ளது. அது அனைத்து சமூக வலைதளங்களிலும் தற்போது பரவியும் வருகிறது. இது முற்றிலும் சட்ட விரோதம். அரசியல் தலையீடு இல்லாமல் உரிய தகுதி உடைய வழக்கறிஞர்களை நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது.


இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் ஜோதி ராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த பொழுது அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி, இந்த கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நபர்கள் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட மாட்டார்கள் என உறுதியளித்தார். இருந்தும் அரசு தரப்பில் இந்தக் கடிதம் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர். தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் தகுதியின் அடிப்படையில், சட்டத்துறைஅல்லது உள்துறை மூலம் நேரடி விண்ணப்பங்கள் அல்லது தேர்வு குழு  பரிந்துரைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு ஏற்ப நியமன விதிகள் மாறுபடும்.பின்வரும் தகுதிகள் மற்றும் நடைமுறைகள் மூலம் தகுதியான வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர்: அடிப்படைக் தகுதிகளாக Eligibility Criteria கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் (LLB) இந்திய வழக்கறிஞர்கள் மன்றத்தில்  வழக்கறிஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞராக (Public Prosecutor அல்லது Addl. Public Prosecutor) பணியாற்ற குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் நீதிமன்ற அனுபவம் கட்டாயம். உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு பிளீடர் போன்ற உயர் பணிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவமும், அதிகபட்ச வயது வரம்பு 60-க்குள் இருக்க வேண்டும். நியமன நடைமுறை (Notification): அரசாணை (G.O.) அல்லது மாவட்ட ஆட்சியர் இணையதளம் மூலமாக தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது (உதாரணமாக, மே மற்றும் ஜூன் மாதங்களில் அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் உரிய படிவங்களை பூர்த்தி செய்து, பார் கவுன்சில் சான்றிதழ், அனுபவ சான்றிதழ்கள்  மற்றும் புகைப்படங்களுடன் சம்பந்தப்பட்ட துறையிடம் சமர்ப்பித்த பின் தேர்வுக் குழு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாநில அரசின் சட்ட அதிகாரிகளால் தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. மாநில அரசுடன் ஆலோசித்து, தகுதியான வழக்கறிஞர்களை குறிப்பிட்ட பணிக்காலத்திற்கு (பொதுவாக 3 ஆண்டுகள்) நியமித்து அரசாணை வெளியிடப்படும்.தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றங்களில் வாதாட மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் மாநிலத்தின் தலைமை வழக்கறிஞராகவும், பி.வி.பாலசுப்பிரமணியம் மற்றும் டி.கௌதம் ஆகியோர் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.சமீபத்திய நியமனங்களின் சென்னை உயர் நீதிமன்றம்: உரிமையியல் (Civil) வழக்குகளில் அரசு சார்பில் ஆஜராக 10 வழக்கறிஞர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், குற்றவியல்  மூத்த வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் உட்பட பல வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மதுரை கிளைக்கு உரிமையியல் வழக்குகளில் அரசு சார்பில் வாதாட 7 வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.விசாரணை நீதிமன்றங்கள் தமிழ்நாடு காவல்துறை மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளுக்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்ற அரசு உதவி வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுகின்றனர். அரசு வழக்குகளை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ அரசாணைகள் பற்றிய கூடுதல் விவரங்களை தமிழ்நாடு அரசு சட்ட அதிகாரிகள் நியமனம் 2026.

உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கான 140 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது,

தமிழ்நாடு அரசின் பொது (சட்ட அதிகாரிகள்) துறை, 12.06.2026 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு எண் 1/2026 மூலம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் பணியாற்றுவதற்கான அரசு சட்ட அதிகாரிகளுக்கு தகுதியான வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள அறிவிப்பின் படி மொத்தம் 140 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 99 இடங்களும், மதுரை கிளைக்கு 41 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.






சென்னை மதுரை மொத்தம்

கூடுதல் அட்வகேட் ஜெனரல் (Additional Advocate General) 5 3 8

மாநில அரசு வழக்கறிஞர் (State Government Pleader) 1 - 1

அரசு வழக்கறிஞர் (Government Pleader) - 1 1

சிறப்பு அரசு வழக்கறிஞர் (Special Government Pleader) 20 8 28

கூடுதல் அரசு வழக்கறிஞர் (Additional Government Pleader) 30 14 44

அரசு வழக்கறிஞர் – சிவில் (Government Advocate – Civil) 40 14 54

அரசு வழக்கறிஞர் – வரிகள் (Government Advocate – Taxes) 3 1 4

மொத்தம் 99 41 140


வயது வரம்பு இல்லை

பின்வரும் பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை:

Additional Advocate General,

State Government Pleader,

Government Pleader,

Special Government Pleader,

அதிகபட்ச வயது 60

பின்வரும் பணிகளுக்கு விண்ணப்பதாரர் 60 வயதை பூர்த்தி செய்திருக்கக் கூடாது:

Additional Government Pleader,

Government Advocate (Civil),

Government Advocate (Taxes),

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் (LL.B.) பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு பார் கவுன்சிலில் Advocates Act, 1961-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

அனுபவத் தகுதி (Standing at the Bar)

Additional Advocate General,

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வழக்கறிஞர் அனுபவம்.

அதில் குறைந்தது 7 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்காடியிருக்க வேண்டும்.

State Government Pleader

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம்.

அதில் 7 ஆண்டுகள் உயர்நீதிமன்ற அனுபவம்.

Government Pleader

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம்.

அதில் 7 ஆண்டுகள் உயர்நீதிமன்ற அனுபவம்.

Special Government Pleader

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம்.

அதில் 7 ஆண்டுகள் உயர்நீதிமன்ற அனுபவம்.

Additional Government Pleader

குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம்.

அதில் 5 ஆண்டுகள் உயர்நீதிமன்ற அனுபவம்.

Government Advocate (Civil / Taxes)

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம்.

அதில் 3 ஆண்டுகள் உயர்நீதிமன்ற அனுபவம்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள் முழுமையாக ஆன்லைன் மூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இணையதளம்: www.lawofficerscivil.tn.gov.in

விண்ணப்பிக்க கடைசி நாள்:

29.06.2026 மாலை 5.45 மணி

ஆன்லைன் அல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள்


1.கல்விச் சான்றிதழ்கள்.


2.தமிழ்நாடு பார் கவுன்சில் பதிவு சான்றிதழ்.


3.தேவையான அனுபவத்தை நிரூபிக்கும் வகையில் மூத்த வழக்கறிஞர் அல்லது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சான்று.


நியமனம் முழுமையாக ஒப்பந்த (Contractual) அடிப்படையில் இருக்கும்.


அரசு நிர்ணயிக்கும் காலத்திற்கு பணி வழங்கப்படும்.

ஒரு மாத முன் அறிவிப்பு அல்லது ஒரு மாத Retainer Fee வழங்கி எந்த நேரத்திலும் நியமனம் ரத்து செய்யப்படலாம்.

தவறான தகவல் வழங்கப்பட்டால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் அல்லது நியமனம் ரத்து செய்யப்படும்.

தேர்வு மற்றும் நியமனம் 2017-ஆம் ஆண்டு சட்ட அதிகாரிகள் நியமன விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு, உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அரசு தரப்பில் ஆஜராக விரும்பும் அனுபவமிக்க வழக்கறிஞர்களுக்கு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக 140 காலியிடங்கள் ஒரே அறிவிப்பில் வெளியிடப்பட்டிருப்பது சட்டத்துறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது வயது, அனுபவம் மற்றும் தகுதிகளை சரிபார்த்து, ஜூன் 29, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நியமனம் நேர்மையாக நடந்தால் தவெக ஆட்சி ஊழல் ஒழிக்கும் என நம்பலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...