நடிகை சுகன்யா குறித்து நீண்ட கால சந்தனக் கடத்தல் கொள்ளையன் வீரப்பன் அளித்த ஒரு அவதூறு பேட்டியை ஒளிபரப்பியதற்காக, சன் டிவி நிறுவனத்திற்கு ரூபாய் .10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது அந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது வழக்கின் துவக்கம் :- 1996-ஆம் ஆண்டு, சந்தனக் கடத்தல் கொள்ளையன் வீரப்பனை பேட்டி கண்டு அதனை சன் டிவி ஒளிபரப்பிய. பேட்டியில் கொள்ளையன் வீரப்பன் நடிகை சுகன்யா குறித்து தெரிவித்த அவதூறு கருத்துக்களுக்கு எதிராக நடிகை சுகன்யா தொடர்ந்த. வழக்கை விசாரித்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் 2015- ஆம் ஆண்டில் சன் டிவி ரூபாய் .10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சன் டிவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தற்போது விசாரணை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதி செய்தது.
மேற்கண்ட ஒளிபரப்புக்கு முன் அநாவசியமான அல்லது அவதூறான கருத்துக்களை எடிட் செய்யும் உரிமை சன் டிவிக்கு இருந்தும், அவர்கள் அதைச் செய்யவில்லை என்றும், கொள்ளையன் வீரப்பன் கூறிய குற்றச்சாட்டுகளைச் சரிபார்க்கத் தவறியது அவர்களின் தவறு என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவின் மகனுடன் நடிகை சுகன்யாவுக்கு தொடர்பிருப்பதாக 1995-ஆம் ஆண்டு ஒளிபரப்பான பேட்டியில் கூறப்பட்ட விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. (தீர்ப்பு வந்த போது)
அதனைத் தொடர்ந்து நடிகை சுகன்யா அவதூறு மற்றும் மானநஷ்ட வழக்கை சிட்டி சிலில் நீதிமன்றம் மூலம் தொடர்ந்தார்.
நீண்டகாலமாக நடைபெற்று இந்த வழக்கில், 2015-ஆம் ஆண்டு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் சுகன்யாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்து ரூபாய் .10,00,500 நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு உயர் நீதிமன்றம் மூலம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சுமார் 30 ஆண்டுகளைக் கடநது வந்த இந்த வழக்கில் மீண்டும் நடிகை சுகன்யாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
செய்திகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் செய்தி வெளியிட முடியாது என்றும், ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்ததுள்ளது.
முப்பது வருஷம் நீடித்த இந்த வழக்கின் தீர்ப்பு, தனிநபர் கண்ணியத்தையும் ஊடகப் பொறுப்பையும் மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது.
1995-ஆம் ஆண்டில் இருந்ததை விட, இன்று 2026- ஆம் ஆண்டில் சமூக ஊடகங்களின் வளர்ச்சி மிகவும் அதிகம்.
"வியூஸ்" (Views) மற்றும் "லைக்ஸ்"களுக்காக எதையும் பேசலாம் என்ற போக்கு சமூக வலைதளங்களில் பெருகிவரும் இந்தச் சூழலில், அரசின் பதிவு பெற்ற ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு இந்தத் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை மணி.
சமூக வலைதளங்களில் சிலர் உரிய அனுமதி இல்லாமல் பகிர்வது தவறு ஆனால் உரிய அனுமதி பெற்ற செய்தி பருவ இதழ்கள் மற்றும் காட்சி ஊடகங்கள் பகிர்வதற்கு முன், தீர்ப்பின் சமீபத்திய அதிகாரப்பூர்வ நீதிமன்ற ஆவணங்கள் அல்லது நம்பகமான செய்தி ஆதாரங்களை நன்றாக சரிபார்ப்பது அவசியம்.
ஆதாரமற்ற வதந்திகளைச் செய்தியாக்குவது கருத்துச் சுதந்திரமல்ல, அது ஒருவரது வாழ்வைச் சிதைக்கும் ஆயுதம் என்பதை உரிய ஊடகங்களும் மற்றும் சில ஆர்வக்கோளாறு உள்ள முகநூல், யூடியூப் போன்ற தளங்களில் உள்ளோரும் உணர வேண்டும். இதுவே இந்த தீர்ப்பு கூறும் கருத்து.இந்திய அரசியலமைப்பில் பத்திரிகை சுதந்திரம் . இருப்பினும், சட்டப்பிரிவு 19(1)(a)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள "பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின்" ஒரு பகுதியாகவே பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது.
அது வரம்பற்றதல்ல. நாட்டின் நலன் கருதி, சட்டப்பிரிவு 19(2)-ன் கீழ் அரசு பின்வரும் காரணங்களுக்காகப் பத்திரிகை சுதந்திரத்தின் மீது நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இதில் முக்கிய சில வழக்குகள் உள்ளது. ரொமேஷ் தாப்பர் எதிர் மெட்ராஸ் மாநிலம் (1950):தீர்ப்பில், கருத்துக்களைப் பரப்புவதும், புழக்கத்தில் விடுவதும் பத்திரிகை சுதந்திரத்தின் முக்கிய அங்கம் என உச்ச நீதிமன்றம் முதலில் உறுதி செய்தது.
மற்றும் சகால் பேப்பர்ஸ் எதிர் இந்திய ஒன்றியம் (1961): பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடித்தளம் என நீதிமன்றம் சட்டப்பிரிவு 361A: நாடாளுமன்றம் அல்லது மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடரின் உண்மைச் செய்திகளைப் பத்திரிகைகளில் வெளியிடுவதற்கு ஊடகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. இது பதிவுகள் இல்லாத சமூக ஊடகங்கள் மற்றும் யூடியூப் உள்ளிட்டவைகளுக்குப் பொருந்தாது.



























கருத்துகள்