முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய பதிவு சட்டத்திற்கு விரோதமாக மாநில பதிவு திருத்தச்சடடம் 34 சி உள்ள நிலையில் அதை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தின் புதிய திருத்தம் பிரிவு 34-C  சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை ரத்து செய்தது.


போலிப் பத்திரப்பதிவுகளைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்திருத்தம், பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தன்னிச்சையானதாக இருப்பதாகக் கூறி நீதிமன்றம் இந்த  உத்தரவைப் பிறப்பித்தது.பிரிவு தமிழ்நாடு அரசு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதியன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற இந்த புதிய சட்டத்திருத்தத்தை அமல்படுத்தியதன்படி, அசையா சொத்துக்களைப் பதிவு செய்யும்போது பின்வரும் ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டது அசல் மூலப் பத்திரம், சொத்தின் முந்தைய அசல் பத்திரம் கண்டிப்பாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  பத்திரம் பதிவு செய்வதற்கு 10 நாட்களுக்குள் பெறப்பட்ட தற்போதைய வில்லங்கச் சான்றிதழ் .  பூர்வீகச் சொத்தாக இருந்தால் வருவாய்த்துறை வழங்கிய பட்டா.அசல் பத்திரம் தொலைந்திருந்தால் காவல்துறை வழங்கிய கண்டுபிடிக்க முடியவில்லை என்ற Non-traceable Certificate மற்றும் ஆங்கில தமிழ் நாளிதழ்களின் விளம்பரம். தேவை என்ற நிலையில்

இந்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், எம். ஜோதிராமன் ஆகிய நீதிபதிகள் அமர்வு  ஜூன் 23, 2026 அன்று ரத்து செய்தது. அதில் பத்திரப்பதிவுத் துறை என்பது ஆவணங்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் ஒரு நிர்வாக அமைப்பு மட்டுமே தவிர, சொத்து உரிமையை (Title) தீர்மானிக்கும் அதிகாரம் அதற்கு அதற்கு இல்லை. சொத்துக்களைப் பரிமாற்றம் செய்வது என்பது இந்திய அரசியல் சாசனம் பிரிவு 300 -A-ன்கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமை. அசல் பத்திரம் இல்லை என்பதற்காகப் பதிவை மறுப்பது மக்களின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும்.  இந்தச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதில் சார்பதிவாளர்களுக்குத் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை. இதனால் அசல் ஆவணம் இல்லாத பொதுமக்கள் சொத்துக்களைப் பதிவு செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.

தற்போதைய நிலை (உத்தரவின் முக்கிய அம்சங்கள்)அசல் பத்திரம் தேவையில்லை: இனிமேல் அசல் மூலப் பத்திரம் இல்லாவிட்டாலும் பொதுமக்கள் தடையின்றிப் பத்திரப்பதிவு செய்துகொள்ளலாம். அது அவர்களின் சொத்தாக இருக்கும் நிலையில் முறையான வில்லங்கச் சான்று: மோசடிகளைத் தடுக்க, சொத்துக்களின் சர்வே எண் மற்றும் கதவு எண் வாரியாக அனைத்து வில்லங்க விவரங்களையும் துல்லியமாகத் தொகுத்து பொதுமக்களுக்கு வழங்க நீதிமன்றம் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.2025-ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு, பதிவுத்துறைச் சட்டத்தில் (Registration Act, 1908) 34-சி எனும் புதிய பிரிவை இணைத்து, 'அசல் ஆவணங்களை உற்பத்தி செய்தல்' (Production of Original documents) எனும் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது. இதன்படி, நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களைப் பதிவு செய்யும்போது, அந்தச் சொத்தின் அசல் உரிமை ஆவணத்தை (Original Parent Document) கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், பதிவு செய்ய முடியாது எனக் கட்டாயமாக்கியது

மோசடிப் பத்திரப்பதிவுகளைத் தடுக்கும் நோக்கில் இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாகக்  கூறப்பட்ட நிலையில் 

இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து, பல தரப்பினர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அசல் ஆவணங்களை கட்டாயமாக்கும் இந்த சட்டத்திருத்தம், மத்திய சட்டமான பதிவுச் சட்டம், 1908-ன் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்று கூறியுள்ளனர்.

"பதிவுச் சட்டத்தின் பிரிவு 69, விதிகளை உருவாக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால், அந்த அதிகாரம், மத்திய சட்டத்தின் விதிகளுக்கு முரணான விதிகளை உருவாக்க அனுமதிக்காது. இந்த சட்டத்திருத்தம், பதிவு அலுவலர்களுக்கு அளவுக்கதிகமான அதிகாரத்தை வழங்குகிறது. மேலும், அசல் ஆவணத்தை இழந்தவர்கள் அல்லது அதைப் பெற முடியாதவர்களின் உரிமைகளைப் பாதிக்கிறது" என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், "அசல் ஆவணம் இல்லாத நிலையில், நகல் அல்லது சான்றளிக்கப்பட்ட பிரதிகளை அடிப்படையாகக் கொண்டு பதிவு செய்ய மறுக்கும் அதிகாரத்தை இந்த சட்டத்திருத்தம் வழங்குகியது.  இது பதிவு அலுவலர்களின் அதிகாரத்தை மீறுவதாகும்" என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

'இந்த சட்டத்திருத்தம், மோசடியைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது உண்மை தான். ஆனால், அது பல எளிய மக்களின் சொத்துரிமைகளை பாதிக்கும் விதமாக அமைந்தது. பலர் தங்களின் பழைய ஆவணங்களை 100 ஆண்டுகள் பூர்வீகம் என்பதால் இழந்து விடுகிறார்கள்; அல்லது குடும்பப் பிரச்சினைகளால் அசல் ஆவணங்களைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள். இந்தச் சட்டம், அத்தகையவர்களின் பதிவைத் தடுத்து, அவர்களின் சொத்து உரிமைகளை பறிக்கும் ஒரு கருவியாக மாறியிருக்கும். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சாதாரண மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான முடிவாகும். மேலும், இந்த தீர்ப்பு, எதிர்காலத்தில் இதுபோன்ற சட்டத்திருத்தங்களை கொண்டுவரும் போது, அது அடிப்படை உரிமைகளுக்கு முரணாக இல்லாமல் மற்றும் மத்திய சட்ட விதிகளை மீறாமல் இருப்பதை உறுதி செய்யும்.'

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...