வழிபாட்டு ஸதலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகாமையில் 500 மீட்டர் தொலைவிற்குள் இருந்த 717 அரசு மது விற்பனைக் கடைகளை மூடுவதற்கு முதல்வர் உத்தரவிட்டிருந்ததன்படி, தற்போது மூடப்பட்ட அந்த 717 கடைகளின் அதிகாரப்பூர்வ விவரப் பட்டியலைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டதாக உள்ள விவரம் :-
சென்னை வடக்கு மாவட்டத்தில் 13 கடைகள், சென்னை மத்தியில் -9 , சென்னை தெற்கில்-9, காஞ்சிபுரம் வடக்கு-10, காஞ்சிபுரம் தெற்கு-8, திருவள்ளூர் கிழக்கு-27, திருவள்ளூர் மேற்கு-6 என சென்னை மண்டலத்தில் மொத்தம் 82 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதேபோல், கோயம்பத்தூர் வடக்கு-48, கோயம்பத்தூர் தெற்கு-23, கரூர்-8, ஈரோடு-42, திருப்பூர்-31, நீலகிரி-27 என கோயம்பத்தூர் மண்டலத்தில் மொத்தம் 179 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
அரக்கோணம்-7, தர்மபுரி-7, கிருஷ்ணகிரி-7, நாமக்கல்-14, சேலம்-22, திருவண்ணாமலை-19, வேலூர்-6 என சேலம் மண்டலத்தில் மொத்தம் 82 அரசு மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் 21 கடைகள், நாகப்பட்டினம்-4, புதுக்கோட்டை-17, பெரம்பலூர்-6, தஞ்சாவூர்-6, திருச்சிராப்பள்ளி -15, திருவாரூர்-6, விழுப்புரம்-9 என திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் மொத்தம் 84 அரசுமதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் 26 கடைகள், கன்னியாகுமரி-15, இராமநாதபுரம்-29, தேனி-12, திருநெல்வேலி-33, தூத்துக்குடி-63, மதுரை தெற்கு-39, மதுரை வடக்கு-13, விருதுநகர்-42, சிவகங்கை மாவட்டத்தில் 18 கடைகள் என மதுரை மண்டலத்தில் மொத்தம் 290 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுமது விற்பனைக் கடைகளில் சராயப் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்த 200 பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அரசு மது விற்பனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுவிலக்குத் துறையைப் பொருத்தவரை, அரசு மது விற்பனைக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் விவகாரமும் மிக முக்கியமான பிரச்சனையாக குடிக்கும் நபர்கள் மத்தியில் உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில், மது போத்தல்களுக்கு எம்.ஆர்.பி. விலையை விட பத்து ரூபாய் அதிகமாக வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்தன. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய், “பாட்டிலுக்கு 10 ரூபாய்” என்ற பாடலைப் பாடி அந்த விவகாரத்தை பெரிதாக்கினார்.
இதையடுத்து, தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகும் அரசு மது விற்பனைக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்குவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. பல்வேறு இடங்களில் மது குடிப்பவர்கள், பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலிப்பது தொடர்பான சம்பவங்களை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியும் வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு மது விற்பனைக் கடைகளில் நடைபெற்று வந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டதில், மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக புகார்கள் எழுந்தது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சுமார் 200 மது விற்பனைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசு மது விற்பனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிர்வாகத்தில் கூடுதல் வசூல் உள்ளிட்ட முறைகேடுகளை முற்றிலுமாக தடுப்பதற்கு அரசு தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், 1983 ஆம் ஆண்டு எம். ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக அரசால், தமிழகத்தில் சாரயம் மதுவகைகளின் மொத்த விற்பனைக்காக தொடங்கப்பட்டது. இந்திய நிறுவனச் சட்டம் - 1956 ன் படி மாநில அரசின் கட்டுப்பாட்டின் படி இயங்கும் அமைப்பாக நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்து வந்துள்ளது. முதன் முதலில் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் சி. ராஜகோபாலச்சாரியின் காங்கிரஸ் கட்சி அரசால் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. அன்றிலிருந்து 2001 வரை, 1971–74, 1983–87, 1990–91 ஆகிய சிறு கால இடைவெளிகளைத் தவிர தமிழ்நாட்டில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது.பொதுவாக மது என அறியப்பட்ட எத்தனால் அடங்கிய குடி போதை வஸ்து வேதியியல் வரைவிலக்கணத்தின் படி மது என்பதில் வேறு கலவைகளும் அடங்குகின்றன. மதுபானங்கள் பொதுவாக கரும்புக் கழிவு மொலாசஸ் மூலம் பியர் வகைகள், பழரச வகைகள், வடி பானங்கள் என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. எத்தனால் உளத்தூண்டல் போதை மருந்து இது மூளைத்திறன் மயக்க மருந்தாகவும் செயற்படுகிறது. கூடுதலான நாடுகள் மது உற்பத்தி, விற்பனை, உட்கொள்ளல் தொடர்பான பல விதிமுறைகளைக் கையாண்டு வருகின்றன. மதுபானம் உலகின் கூடுதலான நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டும் பலரால் உட்கொள்ளப்பட்டும் வருகின்றது. மதுபானங்களை உட்கொள்ளல் 1990 வரை தலைமறைவாக நடந்த நிலை மாறி சில கலாச்சாரங்களில் சமூக நிகழ்வுகளில் முக்கிய அம்சமாகவே மாறி காணப்படுகிறது.
குருதியில் காணப்படும் எத்தனால் அளவு ஒரு குறித்த அளவை விஞ்சினால் அவர் சட்டரீதியாக போதையுற்றவராக கருதப்படுவார். இவ்வாறு போதையுற்றவர்கள் வாகனம் செலுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் பழக்க அடிமைத்தனத்தை தூண்டும் தன்மை உடையன.1980 களில் குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 26 ஆக இருந்தது. 2007 ஆம் ஆண்டில் 18 ஆகக் குறைந்துவிட்டது. அசோசெம் என்கிற வர்த்தகக்கூட்டமைப்பின் சமூக வளர்ச்சிப் பிரிவு செய்த ஆய்வில், 19-26 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மத்தியில் குடிப்பழக்கம், 60 சதவீதம் அதிகரித்துள்ளதென்கிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் டீன் ஏஜ் குடிப்பழக்கம் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.. படிபகங்களை தனியாரும் குடிப்பகங்களை அரசும் நடத்தும் நிலை மாற வேண்டும் அதன் பிறகு படிப்படியாக மது விலக்கு கொண்டு வரவேண்டும் என்பதே சமூக அக்கறை கொண்ட பல தலைவர்ளின் கருத்தாக உள்ளது




கருத்துகள்