தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் பணமோசடி விவகாரம் தொடர்பாக,
நீர்வளத்துறை (பொதுப்பணித்துறை) உயர் அதிகாரிகள் மற்றும் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனை ஏற்கனவே நடத்தியது. தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக ஆற்று மணல் விற்பனை செய்யப்படுவதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், கணக்கில் காட்டப்படாமல் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை (ED) வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.சோதனைக்கு உள்ளான நீர்வளத்துறையின் முதன்மைப் பொறியாளர் முத்தையா மற்றும் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம்
ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. முக்கிய மணல் ஒப்பந்ததாரர்களான புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனைகள் நடைபெற்றது. அதோடு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை முதன்மை அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனைகளில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், சுமார் ரூபாய் .12.82 கோடி ரொக்கப் பணம், மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த விவகாரத்தில் திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், அரியலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் விளக்கம் அளிக்கக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சம்மனை எதிர்த்து திமுகவின் கடந்த அரசு நீதிமன்றம் சென்ற போதிலும், உச்ச நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன் பேரில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இவ்வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் நடந்த பின்னர், கடந்த கால மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த திமுக ஆட்சிக் காலத்தில் மணல் குவாரிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதிகாரி ஒருவர் மீது அமலாக்கத்துறை வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியது. அவர் திருவள்ளூர் கோட்டத்தில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர், அவர் பணி செய்த நாட்களில் கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் பணம் சம்பாதித்துள்ளார்.
அப்படியானால் திமுக ஆட்சி தலைமைக்கு எவ்வளவு ஊழல் பணம் கொடுத்திருப்பார். என மக்களே கற்பனை செய்து பாருங்கள்.
மணல் குவாரி முறைகேடுகளில் அவருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்க துறைக்கு தெளிவான ஆதாரம் கிடைத்ததன் பேரில் அவரது வீட்டில் அப்போது சோதனை நடந்தது. ஆனால் கடந்த ஆட்சியில் அவர் மாற்றம் செய்யப்படவில்லை. ஊழல்வாதிகள் எப்படி மாற்றுவார்கள் பணம் வராதே!
தற்போது தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு ஊழல் அதிகாரிகள் ஒவ்வொருவராக பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு தற்போது வரை ஊழல் செய்தவர்கள் எந்த வெட்கமுமில்லாமல் வலம் வரும் அந்த அதிகாரியை தகுதி குறைந்த பணியில் மாற்றம் செய்து நீர்வளத் துறை உத்தரவிட்டிருப்பது அந்த துறை வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
கடந்த காலங்களில் அதிமுக திமுக என எந்த ஆட்சி வந்தாலும் அவரை மாற்ற முடியாமல் தைரியமாக ஊழல் அவரை வலம் வர வைத்தது அவரை மீறி யாரும் முக்கிய பணியிடத்துக்கு வர முடியாது என்ற நிலையும் இருந்தது.
அப்படிப்பட்ட அதிகாரி ஒருவரை தமிழக வெற்றிக்கழக அரசு தூக்கி எறிந்துள்ளது தான் பாராட்டி குறிப்பிடத்தக்கது.
அந்தப் பொறியாளர் பெயரே பொதுப்பணித் திலகம் அவர் மீதான முக்கிய முறைகேடு குற்றச்சாடடு பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி, விசாரணை அமைப்புகளின் வளையத்தில் இருந்தும், இவர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நீர்வளத்துறையில் இணைத் தலைமைப் பொறியாளர் பதவியில் அமர்த்தப்பட்டது குறித்து துறை ரீதியான அதிகாரிகள் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தனர். ஒப்பந்தப் பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. தன் சிறப்பு
அரசு வளங்களைத் தனது சுயநலனுக்காகப் பயன்படுத்தியது மற்றும் திறமையான அதிகாரிகளை திட்டமிட்டுப் புறக்கணித்ததாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. சிக்கிய இவர் இனி சிக்கப்போவது பலர்.





கருத்துகள்