முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் அமைச்சரவை மூப்புப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டின் அமைச்சரவை மூப்புப் பட்டியலில்  நிதித்துறை அமைச்சர் இருபத்து ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.


கட்சியில் உள்ள சீனியாரிட்டி என்பது வேறு. அமைச்சக நிர்வாகத்தில் அது வேறு என்பதை எப்படிக் கவனிக்காமல் விட்டனர்,


மாநிலத்தில் முதன்மை அமைச்சர் எப்போதுமே முதலிடம் வகிப்பார். அவர் பொறுப்பில் தான் இஆப, இகாப உள்ளிட்ட குடிமைப்பணி நிர்வாகம் மற்றும் காவல் கட்டுப்பாடு இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் கு.காமராசர் ஆட்சியில் மட்டும் தான் காவல் துறை அமைச்சர் பொறுப்பு பூ.கக்கன் வசம் கொடுக்கப்பட்டிருந்தது,

முதலமைச்சர் பொறுப்புக்கு அடுத்து நிதித்துறை அமைச்சர் இடம்பெறுவார். நாட்டின் நிதியை பெருக்குதல், நிதிப்பற்றாக்குறையை  சீர் செய்தல், நிதி தொடர்பான இன்னபிற முக்கிய திட்டமிடல்களை நிதியமைச்சர் கைக் கொள்வார். வருவாய்த்துறைக்கான வழிகாட்டியாக இவரது துறை இருக்கும்.

மூன்றாவது வருவாய்த்துறை. இந்தத் துறையின் அமைச்சர், நிதியமைச்சரின் ஆலோசனை பெற்று வருவாய்க்கு உண்டான வழிவகையை செய்வார். மிக முக்கியமான துறையாக இது கவனம் பெறுகிறது.

நான்காவது உயர்கல்வி அல்லது சட்டம் மற்றும் சிறைத்துறை அல்லது மின்சாரத் துறை இடம்பிடிக்கும். இந்தத் துறைகளின் அவசியத்தை விட மிக மிகத் தேவையுள்ள முக்கியத்துறையாக ஆட்சியாளர்கள், விவசாயத்துறை அல்லது PWD எனப்படும் பொதுப்பணித்துறையைக் கருதினால் இவற்றில் ஒன்று நான்காமிடம் பிடிக்கும். மற்றவை ஐந்து, ஆறு, ஏழு என்ற வரிசை முறைப்படி அமையும். நாட்டு மக்களின் அடிப்படை விஷயங்களை உள்ளடக்கிய துறைகளின் வரிசையானது, அந்தவகையில் முதல் எட்டு இடத்தில் அமைந்துவிடும்.

திமுகவும் அதிமுகவும் ஆட்சி செய்து ஆண்டு முடித்த 1967 தொடங்கி, 2025 வரை இந்த வரிசை தான் பதவி மூப்பு எனப்படும் (சீனியாரிட்டி) வரிசையில் அமைந்திருந்தது. கட்சியில் மிகவும் மூத்தவர் என்பதால் தான் கடந்த முறை  திமுக ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த .கே.துரைமுருகன், முதலமைச்சர் பொறுப்புக்கு அடுத்த இடத்தில் அவை முன்னவர் என்ற அடையாளத்துடன் இரண்டாமிடம் வகித்தார்.

அதிகாரிகள், மூத்த அரசியல்வாதிகளான மாண்புமிகுக்கள் செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகரன் போன்றோர் இதை சுட்டிக்காட்டியிருக்கலாம் தமிழ்நாடு

அமைச்சரவையின் மூப்புப்  பட்டியலை அரசு வெளியிட்டதில் முதல்வர் சி. ஜோசப் விஜய் முதலிடத்தில் இடம்பெற்ற நிலையில், அமைச்சரவையில் மிகவும் மூத்தவராக கருதப்படும் கே. ஏ.செங்கோட்டையன் 5 வது இடத்தில் இருப்பது கவனத்தை ஈர்த்தது. விசிக சார்ந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு புதியவர் 14-வது இடத்தை பெற்றார்.


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்றது. காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் முதவ்வர் சி. ஜோசப் விஜய் ஆட்சி அமைத்துள்ளார்  மே மாதம் 10 ஆம் தேதி  முதல்வராகப் பொறுப்பேற்றார் அவருடன் அன்றைய தினம் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 9 பேர் அமைச்சர்களாகினர்.

பத்து நாட்கள் கழித்து அமைச்சரவை மீண்டும் விரிவாக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிகளும் அமைச்சரவையில் இடம் பெர்ற நிலையில், முதலவர் சி. ஜோசப் விஜய் கேபினட்டில் தற்போது 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர். தமிழ்நாடு அமைச்சரவையில் மூப்புப் பட்டியலை  அரசு வெளியிட்டுள்ளதன்படி முதல்வர் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தும், மூன்றாம் இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் 4-வது இடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் ஆகியோர் உள்ளனர்.

கேபினட்டில மிகவும் மூத்தவராக உள்ள செங்கோட்டையன் 5-வது இடத்தில் உள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் வைத்துள்ளார், கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த காங்கிரசின் விஸ்வநாதன் 11 வது இடத்தில் கல்வித்துறை அமைச்சர் உள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் 12 வது இடத்திலும், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஷாஜகான் 13 வது இடத்திலும், சமூக நீதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் வன்னி அரசு 14 வது இடத்திலும் உள்ளனர்.

அரசு வெளியிட்ட அமைச்சர்களின் மூப்பு பட்டியல் விவரம் வருமாறு;

2.என். ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்

3.ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்

4.டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் - சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்

5.கே.ஏ. செங்கோட்டையன் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்

6.பி. வெங்கடரமணன் - உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்

7.ஆர். நிர்மல்குமார் - எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத் துறை அமைச்சர்

8.ராஜ்மோகன் - பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் துறைகள்: பள்ளிக் கல்வி, தொல்லியல், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு, தகவல் மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டம், செய்தித்தாள் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சிடுதல், அரசு அச்சகம்.

9.டாக்டர் டி.கே. பிரபு - இயற்கை வளங்கள் துறை அமைச்சர் துறைகள்: கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.

10.எஸ். கீர்த்தனா - தொழில்துறை அமைச்சர்

11.பி. விஸ்வநாதன் - உயர்கல்வித் துறை அமைச்சர்

12.எஸ். ராஜேஷ் குமார் - சுற்றுலாத்துறை அமைச்சர்

13.ஏ.எம். ஷாஜஹான் - சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்

14.வன்னி அரசு - சமூக நீதித் துறை அமைச்சர்

15.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்துத் துறை அமைச்சர்

16.பி. ராஜ்குமார் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

17.வி. சம்பத் குமார் - பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர்

18.எம். விஜய் பாலாஜி - கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர்

19.கே. விக்னேஷ் - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

20.கே. தென்னரசு - வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர்

21.ஜெ. முகமது ஃபர்வாஸ் - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

22.வி. காந்திராஜ் - கூட்டுறவுத் துறை அமைச்சர்

23.கே. ஜெகதேஸ்வரி - சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர்

24.வினோத் - வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர்

25.சி. விஜயலட்சுமி - பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்

26.டி. சரத்குமார் - மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்

துறைகள்: மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.

27.ரமேஷ் - இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்

28.பி. மதன் ராஜா - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர்

29.என். மேரி வில்சன் - நிதி, திட்டமிடல் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்

30.ஸ்ரீநாத் - மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை அமைச்சர்

31.எஸ். கமலி - கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்

32.ஆர். குமார் - செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்

33.ஆர்.வி. ரஞ்சித்குமார் - வனத்துறை அமைச்சர்

34.டி. லோகேஷ் தமிழ்செல்வன் - வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர்

35.ராஜீவ் - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் உள்ளனர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...