பாவாடை சாமியைக் காக்க என் எல் சி க்கு எதிராகப் போராடும் படையாட்சிகள்,
ஆதரவுத் தலைவர்களின் கண்டனக் குரல். . என்.எல்.சி நிலக்கரி சுரங்க மூன்றாவது விரிவாக்கத்திற்காக 30 கிராம மக்களின் குலதெய்வக் கோயிலை இடிப்பதா?
பாமக மற்றும் தவாக கட்சிகள் கண்டனம் .பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குபபம்,தெற்கு மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் பாவாடைராயன் கோயிலை, நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்நி இடிக்க என்.என்.சி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கையாகத் திகழும் அங்காளம்மன் பாவாடைராயன் கோயிலை இடிக்க என்.எல்.சி நிர்வாகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. தெற்கு மேலூரில் அமைந்திருக்கும் அங்காளம்மன் பாவாடைராயன் கோயில் அப்பகுதியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் குலதெய்வக் கோயிலாக திகழ்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு அப்பால் அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வக்கோயிலாகத் திகழ்கிறது.இந்தக் கோயில் அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள நிலங்களை என்.எல்.சி நிறுவனம் ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளது. இப்போது 1ஏ சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக கோயிலை இடிக்கும் முயற்சியில் என்.எல்.சி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வாழும் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அதையும் மீறி கோயிலை இடிக்க என்.எல்.சி நிர்வாகம் துடிக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசின் ஆதரவையும் கோரியிருக்கிறது.
அங்காளம்மன் -பாவாடைராயன் கோயில் அதே பகுதியில் நீடிப்பதால் என்.எல்.சிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. அதே நேரத்தில் அந்தக் கோயில் இடிக்கப்பட்டால் லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கை பாதிக்கப்படும். இவற்றைக் கருத்தில் கொண்டு தெற்கு மேலூர் அங்காளம்மன் பாவாடைராயன் கோயிலை இடிக்கும் முடிவை என்.எல்.சி நிறுவனம் கைவிட வேண்டும்; இந்த விஷயத்தில் என்.எல்.சிக்கு தமிழ்நாடு அரசும் போதிய அழுத்தம் கொடுத்து இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும்' ஏன வலியுறுத்தியுள்ளார். இந்த ஆலயத்தை வழிபடும் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பாவாடைராயன், மற்றும் பாவடைப் பிரியன், பவாடைசாமி, எனப் பெயர் வைத்து வருகின்ற நிகழ்வு நாம் காண்லாம், பாமகவின் முன்னால் தலைவர்களில் ஒருவராக இருந்த நெய்வேலி வாழைச் செலவன் கூறக் கேட்டுள்ளோம்.
தமிழக அரசு தலையிட்டு கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்துள்ள தெற்கு மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை, நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக இடிக்க என்.என்.சி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கையாகத் திகழும் அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை இடிக்க என்.எல்.சி நிர்வாகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே இருந்தவர்கள் கடலூரை சுரண்டியது போதும்..என்.எல்.சி. நிறுவனம் கையகப்படுத்தியுள்ள நிலத்தில் உள்ள குலதெய்வக் கோயிலை இடிக்கும் முடிவை கைவிட தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் அங்காளம்மன் - பாவாடைராயன் கோயிலை இடிக்கும் முடிவை என்.எல்.சி. நிறுவனம் கைவிட வேண்டும். தமிழக அரசு என்.எல்.சி.க்கு ஆதரவு அளிக்காமல், மக்களின் உணர்வுகளையும் இறை நம்பிக்கையையும் மதித்து மக்கள் பக்கம் நின்று, என்.எல்.சி. நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி கோயிலை இடிக்கும் முடிவை கைவிட முயற்சி எடுக்க வேண்டும்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது சுரங்கங்களை விரிவாக்கம் செய்யும் நோக்கில் நெய்வேலி, விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் விளைநிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் முன்னிலையில் சுரங்க விரிவாக்கப் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி. மேற்கொண்டபோது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நான் களத்துக்கு வந்து ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியதன் காரணமாகவே நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே நெய்வேலி அருகே அமைந்துள்ள தெற்கு மேலூர் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் - பாவாடைராயன் கோயில், அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் குலதெய்வக் கோயிலாக உள்ளது.
இக்கோயில் கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வக் கோயிலாகவும் உள்ளது.
இந்தக் கோயிலை ஒட்டிய நிலங்களை என்.எல்.சி. ஏற்கனவே கையகப்படுத்தியுள்ள நிலையில், 1ஏ சுரங்கத்தின் விரிவாக்கத்திற்காக கோயிலை இடிக்கும் முயற்சியில் என்.எல்.சி. நிர்வாகம் தமிழ்நாடு அரசின் ஆதரவை கோரியுள்ளது.
கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இக்கோயிலை இடிக்கும் முடிவை என்.எல்.சி. நிறுவனம் கைவிட தமிழக அரசு என்.எல்.சி.க்கு ஆதரவு அளிக்காமல், மக்களின் உணர்வுகளையும் இறை நம்பிக்கையையும் ஏற்று மக்கள் பக்கம் நின்று, என்.எல்.சி. நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி கோயிலை இடிக்கும் முடிவை கைவிட முயற்சி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள தெற்கு மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காளம்மன் - பாவாடைராயன் கோவில், அப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குலதெய்வமாக விளங்குகிறது. பாவாடைராயன் தமிழ் மக்களின் முக்கிய காவல் தெய்வம் ஆவார்.கோவில் பற்றிய முக்கிய தகவல்கள்:அமைவிடம்: நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகேயுள்ள தெற்கு மேலூர் (Therku Melur).தெய்வம்: பார்வதியின் அவதாரமான அங்காளபரமேஸ்வரி அம்மனின் மடியில் அமர்ந்து அருள்பாலிக்கும் காவல் தெய்வம்.வரலாறு: பல நூற்றாண்டுகள் பழமையானது; கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வ வழிபாட்டுத் தலமாக உள்ளது.திருவிழாக்கள்: சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழாவும், ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஊஞ்சல் உற்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தற்போதைய நிலை:என்.எல்.சி (NLC) நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக இந்த இடத்தை கையகப்படுத்தி, இக்கோவிலை இடிக்க நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.





















கருத்துகள்