முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாக்டர் சி விஜபாஸ்கர் ராஜினாமா ஏற்கப்பட்டதால் ஆறு தொகுதி இடைத்தேர்தலைச் சந்திக்கும் நிலை

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர்


பதவியை ஜூன் மாதம் 16, 2026 ல்  ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து  ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, விராலிமலை சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மே மாதம் 13 ஆம் தேதியன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக கொறடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக டாக்டர் சி.விஜயபாஸ்கர் வாக்களித்ததன் காரணமாக அவரது மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் பறிக்கப்பட்டன. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை, உண்மையான விமர்சனங்களையும் குறைகளையும் கேட்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார் அதில் "தலைமை என்பது அதிகாரமோ அல்லது ஆணவமோ அல்ல, அது அரவணைப்பது" என்று எடப்பாடி கே.பழனிசாமியைச் சாடினார். மேலும், "இது முடிவல்ல, ஒரு புதிய தொடக்கம்" என்றும் அவர் ஆடியோ செய்தி வெளியிட்டார் அடுத்தகட்ட அரசியல் நகர்வு ஜூன் மாதம் 22-ஆம் தேதி முதல்வர் சி.ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் விழாவில், டாக்டர் சி.விஜயபாஸ்கர்


தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகிகின்றன. அதே வேளையில், ஆளும் திமுக தரப்பிலும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடந்த ஒரே மாதத்தில் பதவியை ராஜினாமா செய்யும் 5-வது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது. மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தனர். முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் இந்த 5 அதிமுக எம்.எல்.ஏ-க்களின் தொகுதிகளையும் சேர்த்து, தமிழகத்தில் தற்போது மொத்தம் 6 தொகுதிகள் காலியனதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் தொடங்க உள்ளன.டாக்டர் சி.விஜயபாஸ்கர் 

இவர் ரொம்ப ஸ்மார்ட்டானவர்.  ஆகத் திறமை வாய்ந்த  இயல்பிலேயே ஊழல்முறைகேடுகளில் கொடி கட்டிப் பறப்பவர். அதாவது மற்றவர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் அட்டைப்பூச்சிக்கு நிகாரானவர் என பலரால் விமர்சிக்கப்படும் நபர் 

சுகாதாரப் பணியாளர்களான செவிலியர்களின் அடிமாட்டுச்  சம்பளத்திலும் கமிஷன் பிடுங்க தனியார் நிறுவனம் மூலம் திட்டம் தீட்டி அம்பலப்பட்டவர் விஜயபாஸ்கர்.

2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம், புகார்தாரர் ஒருவரிடமிருந்து ரூபாய் .100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மிரட்டிப் பறித்ததாக அவர் மீது சிபி-சிஐடி (CB-CID) வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டதை கடந்த திமுக அரசை சரிகட்டியதால் சமாளித்தார்..!

அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது (2016-2021), வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் .35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக இவர் மீதும் இவர் மனைவி மீதும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும் இன்று வரை வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இதுவரை நடவடிக்கையின்றி தப்பித்து வருகிறார் என்றால், திமுகவிலும் மிக நல்ல தொடர்பில் தானிருந்தார்.

இளைஞர்களை சீரழிக்கும் குட்கா விற்பனையை அனுமதித்தற்காக ரூபாய் 39.91 கோடி லஞ்சம் பெற்றவர்.

2016 ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நவம்பர் மாதத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் ஒரு சோதனை நடந்ததில் அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில்  மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து மாத்திரைகள் வாங்கிய வகையில் ஊழல் செய்து கையூட்டாக டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு ரூபாய் .5.16 கோடி  கிடைத்திருக்கிறது. சுகாதாரத்துறை நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்கள் மூலம் ரூபாய் . 2 கோடியே 38 லட்சத்து 75 ஆயிரம் கையூட்டாகவே கிடைத்துள்ளது. டாக்டர் 

எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர்கள் நியமனத்தில் ரூபாய் .32 லட்சம் லஞ்சமாக வாங்கப்பட்டிருக்கிறது.தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மருந்துகள் மற்றும் தளவாடங்களை வாங்கிய வகையில் மட்டும் ரூபாய் .1.28... கோடி லஞ்சம்   போன்ற தகவல்கள் கண்டறியப்பட்டது.

எனில், அதற்கு முன்னும், பின்னுமாக எத்தனை கோடிகள் சம்பாதித்திருப்பார் ! அந்த வகையில் இன்று பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி இந்த  வில்லங்க டாக்டர் சி.விஜயபாஸ்கர். பல கல்லூரிகள், குவாரி என பல வகையில் சொத்துக்கள் ராப்பூசல் கிராமம் மட்டுமல்ல பல இடங்களில் 

புதுக்கோட்டை மாவட்டத்தின் மிகப் பெரிய கோடீஸ்வராக  தற்போதுள்ள டாக்டர் சி.விஜயபாஸ்கர் உயர்ந்துள்ளதற்கு பின்னணியில் எங்கும் ஊழல், எதிலும் லஞ்சம் மட்டுமின்றி,  இயற்கை வளங்களை அழிக்கும் குவாரிகள் உள்ளிட்ட ஏகப்பட்ட தொழில்கள், வியாபாரங்கள் செய்து வருபவர். 

ஒவ்வொரு ஓட்டுக்கும் தலா 2,000 முதல் 5,000 வரை தந்து விராலிமலையில் சட்டமன்ற உறுப்பினர் ஆனவரான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தற்போது ராஜினாமா செய்திருக்கிறார் என்றால், இழந்த பணத்தைவிட அதிக ஆதாயம் கருதியே அடுத்தகட்ட நகர்வை எடுத்திருப்பார் என்பது உறுதி.

இவரை தற்போது நேர்மையான ஆட்சி தர இதுவரை ஆர்வம் காட்டும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்பதால் அப்படி இணைத்தால், அது தமிழக வெற்றிக் கழகத்தை பாதிக்க வாய்ப்பு உண்டு என அக் கட்சியின் நபர்கள் பேசுவது தெரிகிறது.ஜனவரி மாதம் 2025 ல், புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடிய ஜாபர் அலி, கனிமக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டதாக வழக்கு உள்ள நிலையில் 

பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும், அதிமுக இதை கையில் எடுக்காததன் காரணம், கனிமவளக் கொள்ளையை செய்ய உடந்தையாக இருந்ததே டாக்டர் சி. விஜயபாஸ்கர் என்பதே பரவலாக பேச்சு. 

புற்றுநோயை உண்டாக்கும் குட்கா தயாரிப்பாளர்களிடம் மாத மாமூல் வாங்கி அதற்காக சிபிஐ வழக்கை இப்போதும் எதிர்கொண்டுள்ளார்.  

கொரோனா காலத்தில் வாங்கப்பட்ட உபகரணங்கள் அனைத்திலும், 40 சதவீதம் கமிஷன் புகழ் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தான். 

இவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், செவிலியர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவர் மாறுதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருந்து கொள்முதலில் லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் லஞ்சம் வாங்க ஒரு பிஏ, செவிலியர் கல்லூரி ஒப்புதலுக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ, மருத்துவ கல்லூரி அனுமதிக்கு லஞ்சம் வாங்க ஒரு பிஏ என 12 பி.ஏக்களை வைத்திருந்த ஒரே அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தான். 

மணல் மும்மூர்த்திகளான புதுக்கோட்டை எஸ். ஆர். இராமச்சந்திரன், திண்டுக்கல் இரத்தினம் மற்றும் கரிகாலனின் காட்பாதர் இந்த டாக்டர் சி விஜயபாஸ்கர் தான் என  பலரும் பேசும் நிலை.   மணல் கடத்தலை தடங்கலின்ச்றி செய்ய புதுக்கோட்டைக்கு வருண் குமாரின் மனைவியை எஸ்பியாக திமுகவிடம் பேசி புதுக்கோட்டையில் நியமனம் செய்ததும் இவர் தான் எனப் பேசப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...