முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமறைக்காட்டின் ஆலய வாரணி ஆதினத்திற்கு உரிய நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் வெளியேற்றம் சட்டப்படி துவங்கியது

திருமறைக்காடு எனும் வேதாரண்யம் இலங்கை இராவணன் அரண்மணையின் பின்பகுதிதான் அதன் கோடியக்கரை


இலங்கை யாழ்ப்பாணக் கோயில்களில் வேதாரணியத்தின் செல்வாக்கு  யாழ்ப்பாண ஆலயங்கள் பலவற்றில் வேதாரணியக் குருக்கள் மரபினர் பூஜகர்களாகப் பணிபுரிகின்றனர். கடந்தகாலத்தில், யாழ்ப்பாணத்து ஆலயத் திருவிழாக் காலங்களில் வேதாரணியம் வழியாக நெடுந்தீவுக்கு வரும் தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் யாழ்ப்பாணக் கலைஞர்களுடன் ஒன்றிணைந்து ஒரு குழுவாகச் செயற்படுவர். இவ்வாறு ஒன்றிணைதலை, 'மேளங்கட்டுதல்' எனச் சொல்லும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் உண்டு.

யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவின் நடுக்குறிச்சியில் அமைந்துள்ள பெருக்கடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், நெடுந்தீவில் நைமித்திய பூசை இடம்பெற்ற முதலாவது ஆலயம் எனக் கருதப்படுகிறது. 

“சுமார் 300ஆண்டு காலப் பழமையுடன், இந்தியாவுக்கு அணித்ததாய் பரஸ்பர தொடர்புகளைக் கொண்டிருந்த வேளையில், வேதாரணியத்துச் சைவக் குருமார், சைவப் பண்டாரங்கள் ஆரம்ப காலங்களில் இங்கு கொடியேற்றி, திருவிழாக்களை நடத்தி வந்தனர். கர்ப்பக் கிரஹ விக்கிரகமும் வேதாரணியத்திலிருந்து கடலில் வந்தடைந்ததாகவே கூறப்படுகிறது. கடலில் வந்து கண்டெடுக்கப்பட்ட மூன்று விநாயகர் விக்கிரகங்களில் மற்றொன்று சாவகச்சேரியில் வேதவனப்பதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது"


ஆயினும் மூன்றாவது விக்கிரகம் எங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதென்பது இன்னும் அறியக்கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத்துப் பஞ்சாங்கம், நாட்காட்டி ஆகியவற்றில் வேதாரணிய விசேடவிழாக்கள் பற்றிய குறிப்புக்களும் இடம்பெற்றுள்ளன. இவையாவும் யாழ்ப்பாணத்தில் வேதாரணியத்தின் செல்வாக்கைக் காட்டி நிற்கின்றன.

காலனிய ஆதிக்க கால யாழ்ப்பாணமும் வேதாரணியமும் குறித்து 

வே.கணபதிப் பிள்ளை எழுதிய 'ஈழமண்டல சதகம்' (1930) தில்லைநாத தம்பிரான் என்னும் துறவி பற்றியும் திருஞான சம்பந்த தேசிகர் பற்றியும் இரு செய்யுட்களைக் கொண்டுள்ளது. இவ்விரு பாடல்களிலும் வேதாரணியம் சிறப்பிக்கப்படுகிறது. தில்லைநாத தம்பிரான் குறித்த பாடல் 

“திடமா மனத்தன் சிவயோகி யாந்தில்லை நாதனெனப் படமா லிகந்த பெரியோன் வரணிப் பதித் தம்பிரான் விடமார்களத்தனெம் மாரூர்த் தியாகன் விழாக்கிரத வடமா குவடு தொடுத்தான்முன் னீழநன் மண்டலமே".................(செய்யுள்-69)

'திருமறைக்காட்டாதீன கர்த்தர்' எனுந் தலைப்பில் திருஞானசம்பந்த தேசிகரைக் குறித்த பாடல் வருமாறு.மறைசைப்பதி எனும் வேதாரணியம்

மறைசையானது 'வேதாரணியம்', ‘சத்தியகிரி', 'வேதவனம்', 'திருமறைக்காடு' எனப் பல சிறப்புப் பெயர்களைக் கொண்டது. தமிழ்நாட்டில், தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்தது. கடற்கரையை யொட்டியது. சோழநாட்டின் தென்கரைத் ஸ்தலங்களில் 125 ஆவது ஸ்தலமாக விளங்குவது. இந்த ஸ்தல மூர்த்தி - வேதாரண்யேஸ்வரர், சக்தி யாழைப் பழித்த மொழியம்மை, தல விருட்சம் -வன்னிமரம், தீர்த்தம் மணிகர்ணிகை. 'ரிக், யஜூர், சாம, அதர்வண என நான்கு வேதங்களும் ஓதி முறையாக பூஜித்த ஸ்தலம் என்பதால் வேதாரண்யம்' எனப் பெயர் பெற்றது.

பரஞ்சோதி முனிவரின் வேதாரணிய புராணம் இந்த ஸ்தலத்துக்கேயுரிய ஸ்தலபுராணம். அம்பிகைக்குரிய 64 சக்தி பீடங்களில் ‘சுந்தரி பீடம்' என்ற சிறப்பும் இந்த ஸ்தலத்துக்குரியது. சப்தவிடத் தலங்களில் ஒன்றான இந்த ஸ்தலம், பாடல்பெற்ற ஸ்தலங்களில் முதன்மையானது. ‘வேதங்களால் பூட்டிய கதவை', திறப்பதற்கும் மூடுவதற்கும் முறையே அப்பரும் சம்பந்தரும் பாடிய செய்தி இந்த ஸ்தலத்திற்குரியது. அப்பர், ‘பண்ணின் நேர்மொழியாள். எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கதவினைத் திறந்ததும், சம்பந்தர் 'சதுரம்மறை தான் துதி செய்து வணங்கும்...' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கதவை மூடியதுமான செய்தியை சேக்கிழாரின் பெரியபுராணம் பதிவு செய்துள்ளது. இச்செய்தி, வடமொழியில் அமைந்த வேதங்களுக்கு நிகரான அல்லது மேலான சக்தி, தமிழில் அமைந்த திருமுறைப் பாடல்களுக்கு உரியதென்பதையே நிலைநிறுத்துகிறது. வரலாற்றுச் செய்திகள், தொன்மக் கதைகள், புராணக்கதைகள் ஆகியவற்றை ஏராளமாகக் கொண்டது, இந்த ஸ்தலம்.



சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தினால் யாழ்ப்பாணத்திற்கும் வேதாரணியத்திற்கும் பண்டைக்காலத்திலிருந்து நெருக்கமான உறவு நிலவுகிறது. 'யாழ்ப்பாணம் தனது பல துறைமுகங்களினூடு தென்னிந்தியாவிற்கும் அதனூடு உலகிற்கும் திறக்கப்பட்டு இருந்தெனபதற்கொப்ப 'புவியியல் அண்மை, மொழி ரீதியான தொடர்பு, கலாசார உறவுகள் ஆகியவை இந்த இரண்டு பிராந்தியங்களையும் இணைத்தன' இவையாவற்றுக்கும் மேலாக யாழ்ப்பாணத்தவருக்கும் வேதாரணியத்துக்கும் இடையிலான தொடர்பு புலமைசார்ந்தும் அமைந்திருந்தது.



வேதாரணியத்திற்கு அபிஷேகத்துக்குப் பால் அனுப்புதல், வேதாரணியத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வண்டி மாடுகளும் உழவு மாடுகளும் இறக்குமதி செய்தல், யாழ்ப்பாணத்தில் 'வேதவனம்', ‘வேதவனமுதலி', 'வேதவனப் பிள்ளை' முதலாய ஆட்பெயர்களும் 'வேதாரணியம்', 'வேதாரணியச் சதுக்கம்' முதலாய இடப்பெயர்களும் காணப்படுதல், தில்லைநாதத் தம்பிரான் எனப் பட்டப் பெயர் கொண்டார். இவருக்குப் பின்னர் இவருடைய வம்சாவழியினர் இந்த ஆதீனத்தின் பண்டார சந்நிதிகளாக ஆதீனம் என விளங்கி வருகின்றனர். இவரது வம்சாவழியினர் யாழ்ப்பாணத்தின் கரணவாய் என்னும் இடத்திலிருந்து இன்று வேதாரணியத்திற்குச் செல்வதால், இந்த ஆதீனம், இப்போது 'கரணவாய் வரணி ஆதீனம்' என அழைக்கப்படுகிறது.



"இந்த ஆதீனத்துக்குரிய ஆதீன கர்த்தாவை யாழ்ப்பாணம் கரணவாயில் உள்ள ஆதீனசபை கூடி, வாக்கெடுப்பு நடாத்தி, தேர்ந்தெடுத்து அவருக்குரிய நியமன உத்தரவு வழங்கும் படி தஞ்சாவூரிலுள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையாளருக்குக் கடிதம் அனுப்புவார்கள். அதனைத் தொடர்ந்து நியமன உத்தரவு பண்டாரச் சந்நிதிகளுக்கு பரம்பரை தேவஸ்தானம் அறங்காவல் ஆதீனம் வழங்கப்படும்." 

மேற்படிகூற்று ஆலயத்தின் பொறுப்பும் உரிமையும் யாழ்ப்பாணத்தவருக்குரியது என்பதைக் காட்;டுகிறது.




தமிழ்நாட்டின் வடபாதி மங்கலத்தில் வாழ்ந்த தில்லைநாதத் தம்பிரான் சந்ததியார் வேதாரணிய ஆலய உரிமை குறித்து முதலில் வழக்குத் தொடுத்தார்கள். 1913 ஆம் ஆண்டு தொடுத்த இந்த வழக்கானது, 'வரணி ஆதீனப் பண்டார சந்நிதிகளுக்கே ஆலய உரிமை' என்ற தீர்ப்போடு முடிவுற்றது. இதன் பின்னர், வடபாதி மங்கலம் சோமசுந்தர முதலியாரும் அதே ஊரைச் சேர்ந்த இராசப்ப முதலியாரும் வேதாரணிய ஆலய உரிமைகோரி வழக்குத்தொடுத்தனர். 1919ஆம் ஆண்டு நடைபெற்ற இவ்வழக்கில், சேர் பொன். இராமநாதன் அவர்கள் வரணி ஆதீனத்துக்காக வழக்குரைத்தார். 'ஆதீனம் வரணி ஆதீனத்திற்குரியதே' என்ற தீர்ப்போடு இந்த வழக்கும் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர், தமிழ்நாடு அரசு தனது இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தின் 65ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் 1949இல் வரணி ஆதீனத்தின் அதிகார எல்லைகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது. இதற்கு எதிராகப் பண்டார சந்நிதிகள் வழக்குத் தொடர்ந்தார். 'ஆலயம் வரணி ஆதீனத்திற்கே உரியது' என்ற தீர்ப்புடன் 1953இல் இந்த வழக்கும் முடிவுக்கு வந்தது. இதன் பின்னர், இந்து சமய அறநிலையத்துறை, ஆலய உரிமை தொடர்பாக 1994ஆம் ஆண்டு முறைகேடான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்கு எதிராக, வ ரணி செவ்வந்திநாத பண்டார சந்நிதிகள் வழக்குத் தொடுத்தார். அப்போதைய இந்திய உயர்நீதிமன்ற நீதிபதி கே.பி. சிவசுப்பிரமணியன் அவர்கள் 2005ஆம் ஆண்டு 'இந்தியக் குடியுரிமை அற்றவரை இந்துஅறநெறிக் கட்டளையில் சேர்க்க முடியாது' எனத் தீர்ப்பளித்தோடு, தமிழ்நாடு அரசின் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யும்படி கட்டளையுமிட்டார். அத்துடன் அந்த வழக்கும் முடிவுக்கு வந்தது. அதன் பிரகாரம் யாழ்ப்பாணம் வரணி கரணவாய் ஆதீனத்தின் பொறுப்பில் வேதாரணியம் இன்றுவரை இருந்து வருகிறது. யாழ்ப்பாணம் வரணிச் சைவக்குருக்கள் சமூகத்திலிருந்து இருபத்தியொரு வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, ஆதீன கர்த்தாவாகவும் தர்மகர்த்தாவாகவும் நியமிக்கும் அதிகாரத்தை, வரணிச் சைவக்குருக்கள் மரபினர் பெற்றுள்ளனர்.




யாழ்ப்பாணக் கோயில்களில் வேதாரணியச் செல்வாக்கு  யாழ்ப்பாண ஆலயங்கள் பலவற்றில் வேதாரணியக் குருக்கள் மரபினர் பூசகர்களாகப் பணிபுரிகின்றனர். கடந்தகாலத்தில், யாழ்ப்பாணத்து ஆலயத் திருவிழாக் காலங்களில் வேதாரணியம்வழியாக நெடுந்தீவுக்குவரும் தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் யாழ்ப்பாணக் கலைஞர்களுடன் ஒன்றிணைந்து ஒரு குழுவாகச் செயற்படுவர். இவ்வாறு ஒன்றிணைதலை, 'மேளங்கட்டுதல்' எனக் கூறுவார்கள். வேதாரணியத்தில் யாழ்ப்பாணத்தவர் வசித்த தெரு 'யாழ்ப்பாணத்தார் தெரு' என வழங்கப்படுதல், யாழ்ப்பாணக் குருக்கள் மரபு  வேதாரணியக் குருக்கள் மரபினூடு வளம் பெற்றிருத்தல், யாழ்ப்பாணத்தில் இருக்கும் கல்வி மற்றும் சமூக நிறுவனங்கள் 'வேதாரணியேஸ்வரம் (வேதாரணியேஸ்வரவித்தியாலயம், வேதாரணியேஸ்வரா ஜன சமூக நிலையம்) எனப் பெயர் பெற்றிருத்தல் முதலியவை இருபிராந்தியங்களின் நெருங்கிய உறவைக் காட்டி நிற்கின்றன. இன்னும், வேதாரணியக் குருக்கள் பரம்பரையினர், யாழ்ப்பாணத்தில் உள்ள உடுப்பிட்டி, கரணவாய், வரணி, இணுவில் முதலிய ஊர்களில் இன்றும் வாழ்கின்றனர். இவ்வூர்களில் ‘குருக்கள் பகுதி' என இன்றும் அழைக்கப் பெறும் இடங்கள், வேதாரணிய வம்சாவழிச் சைவக்குருக்கள் சமூகத்தின் வாழிடங்களாக விளங்குகின்றன. யாழ்ப்பாணத்தில் வீரசைவ பண்டார மரபின் செழுமைக்கு வேதாரணியக் குருக்கள் மரபின் ஊடாட்டம், முக்கியமான தொன்றாகக் கணிக்கப்படுகிறது. வேதாரணியம் கோயிலுக்கும் யாழ்ப்பாணத்தாருக்குமான தொடர்பைக் கல்வெட்டுக்கள் வாயிலாகவும் ஆய்வாளர் உறுதிப்படுத்துவர். இத்தகு ஆய்வுகள் யாழ்ப்பாணத்தவருக்கு வேதாரணியத்தோடுள்ள ஊடாட்டத்தை மட்டுமல்லாது, 'யாழ்ப்பாணத்தாரின் வேதாரணியம்' என்பதையும் துலக்கம் செய்கின்றன. வேதாரணியமும் யாழ்ப்பாணம் வரணி ஆதீனமும்

வேதாரணியேஸ்வரத்துக்கு உரித்துடையவர்களாக யாழ்ப்பாணம் வரணி ஆதீன சபையினர் விளங்குகின்றனர். அவர்களுடைய ஆதீனம் 'வரணி ஆதீனம்;' எனவும் ‘யாழ்ப்பாணம் வரணி ஆதீனம்' எனவும் அழைக்கப்படுகிறது. வேதாரணியத்தில் 'வரணி மடம்' என்ற பெயரில் ஒரு மடம் இருந்ததாகக் கூறுவர். தில்லைநாதர் என்ற பெயர் கொண்ட வரணியைச் சேர்ந்த குருக்கள், வேதாரணியத்தின் ஆதீனப்பொறுப்பை ஏற்று, தில்லைநாதத் தம்பிரான் எனப் பட்டப் பெயர்யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் (அல்லது கரணவாய் வரணி ஆதீனம்) என்பது சைவ சமயத்தின் 18 சைவ ஆதீனங்களுள் ஒன்றாகும். இந்த ஆதீனம் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கும், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுக்கும் இடையே உள்ள மிக நீண்ட வரலாற்று மற்றும் ஆன்மீகத் தொடர்பைப் பறைசாற்றும் சான்றாகத் திகழ்கிறது.வரணி ஆதீனம் குறித்த முக்கியத் தகவல்கள் பின்வருமாறு:வரலாற்றுப் பின்னணி மற்றும் தோற்றம்ஊரின் அமைவிடம்: வரணி என்பது இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமம் ஆகும். இக்கிராமம் பழங்காலம் தொட்டே சைவக் குருமார்களின் குடியிருப்பாக இருந்துள்ளது.தோற்றம்: திருக்கைலாய பரம்பரையில் வந்த சைவக் குருமார் ஆதீனமான இது, யாழ்ப்பாணம் கரணவாய், விளைவேலி போன்ற இடங்களைச் சேர்ந்த சரியை, கிரியை, யோக முறைகளில் வல்லவர்களால் வழிநடத்தப்பட்டது.தில்லைநாதத் தம்பிரான்: வரணியைச் சேர்ந்த தில்லைநாதர் என்ற சைவக் குருக்கள், கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் (முதலாம் சரபோசி மன்னர் காலம்) ஒரு கட்டுமரத்தில் கடல் கடந்து தமிழ்நாட்டின் வேதாரண்யத்திற்கு வந்து தொண்டாற்றினார். இவர் பின்னர் 'தில்லைநாதத் தம்பிரான்' எனப் பட்டம் பெற்று, வேதாரண்யம் கோயிலும் வரணி ஆதீனமும் ஒன்றிணையக் காரணமானார். இவரது வம்சாவழியினரே இந்த ஆதீனத்தின் பண்டார சந்நிதிகளாக (ஆதீனகர்த்தர்களாக) விளங்கி வருகின்றனர்.வேதாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாகம்பரம்பரை அறங்காவலர்கள்: தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாடல் பெற்ற ஸ்தலமான வேதாரண்யம் (திருமறைக்காடு) வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயிலின் பரம்பரைத் தர்மகர்த்தாக்களாக (அறங்காவலர்களாக) இந்த யாழ்ப்பாணம் வரணி ஆதீனகர்த்தர்கள் விளங்குகின்றனர்.தற்போதைய நிர்வாகம்: இக்கோயிலின் நிர்வாகம் வரணி ஆதீன சபையினரால், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது.பிற மடங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள்வரணி மடம் (வேதாரண்யம்): வேதாரண்யத்தில் இந்த ஆதீனத்திற்குச் சொந்தமாக 'வரணி மடம்' மற்றும் 'மாணிக்கசுவாமிகள் மடம்' போன்ற மடங்கள் இருந்துள்ளன.தில்லை மடம்: தில்லை (சிதம்பரம்) நகரிலும் இந்த வரணி மடத்திற்குச் சொந்தமான ஒரு மடம் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன.யாழ்ப்பாணத்தார் தெரு: வரணி ஆதீனத்தின் ஆன்மீகத் தொடர்பின் காரணமாக, வேதாரண்யத்தில் இன்றும் "யாழ்ப்பாணத்தார் தெரு" என்ற வீதி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், யாழ்ப்பாணத்திலும் வேதாரண்யத்திலும் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் இவர்களது தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களை ஆக்கிரமிக்கும் கோயில் விரோத கும்பல்: 

ஜெஹபர் ஷெரிப் என்பவர் வெளியிட்டுள்ள ஒரு பல வண்ணப் படத்தில் எதோ 120 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை @tnhrcedept அநியாயமாகப் பிடுங்குவது போல் பொய்யாகச் சித்திரத்துள்ளார். 




இந்த 120 குடும்பங்களும் ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோயில் நிலங்களைப் பல ஆண்டுகாலமாக வேண்டுமென்றே ஆக்கிரமிப்பு செய்து பக்கா மாடி வீடுகள் கட்டி வைத்துள்ள இந்துக் கோயில்களையும், இந்து மதத்தையும் மதிக்காத ஒரு கும்பல். 

இந்தப் படத்தில் ஒரே ஒரு இஸ்லாமியப் பெண் இருப்பதாகப் போட்டு மற்றவர்கள் எல்லாம் பெரும்பான்மை இந்துக்கள் போல் காட்டியுள்ளார். உண்மை இதற்கு நேர் மாறாக உள்ளது. 

இந்த 120 கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களில் எவ்வளவு இஸ்லாமியர்கள் இருக்கின்றனர் என்று யோக்கியனாக இருந்தால் ஷெரிப் சொல்லட்டுமே ! 

"மக்களின் உரிமை என்ன ஆனது" என்று கேட்கும் இவருக்கு கோயில் வழிபாட்டாளர்கள் சொல்லும் விடை இதுதான்: "ஆக்கிரமிப்பு செய்பவர் உரிமை என்ன ஆனது?" என்றுதான் கேட்டிருக்க வேண்டும்.

"பல ஆண்டுகளாக வசித்து வரும்" என்பதற்கு பதிலாக "பல ஆண்டுகளாக கோயில் சொத்தை ஆக்கிரமித்து பக்கா மாடி வீடுகள் கட்டி வசித்து வரும்" என்று யோக்கியனாக இருந்தால் போட்டிருப்பார். 

விலை கொடுத்து முறையாகப் பெற்ற சொத்தின் உரிமை சாதாரண உரிமையாக அரசியல் சட்டம் 300-A ஷரத்தின் 

கீழ் வரும். ஒரு கோயிலின், மசூதியின், சர்ச்சின் சொத்துரிமை அரசியல் சட்டம் ஷரத்து 26ன் கீழ் அந்த மத நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட, உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமை ஆகும். 

வெகு நாட்கள் கழித்து, சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற  @tnhrcedept எடுக்கும் போது "மக்கள் கேட்கும் கேள்விகள்" "மக்களின் நியாயமான கோரிக்கைகள்" எனப் போலியாக சித்தரிக்கும் நிலை உள்ளது- இந்த ஆக்கிரமிப்பாளர்கள் வடமறைக்காடு கோயிலையே வேதாரண்யத்தில் ஆக்கிரமித்துள்ளனர் என்பதை மறைத்துப் பேசும் நிலை  மாற்று இடம் தர வேண்டும் என்று கேட்பதிலேயே இவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளார். 

தமிழக அரசு இவர்களைக் கோயில் நிலங்களில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்.  எனக் கூறும் பல தலைவர்கள் இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த பலரைத் திரட்டி வெளியேற்று நடவடிக்கைகளை முடக்க முயல்வதாகச் செய்திகள் வருகிறது. சட்டப்படி அரசு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளை சட்ட விரோதமாக எதிர்ப்பவர்களைச் சட்டப்படி நடவடிக்கை தேவை வேண்டும்.யாழ்ப்பாணம் வேதாரண்யம் தேவஸ்தானம் என்பது இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கும், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயிலுக்கும் இடையே உள்ள ஆன்மீக மற்றும் வரலாற்றுப் பிணைப்பைக் குறிக்கிறது.யாழ்ப்பாணத்து இந்து மக்கள் மற்றும் சைவப் பெரியார்கள், வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வர சுவாமி ஆலய திருப்பணிகளிலும் அதன் நிர்வாகத்திலும் வரலாற்று ரீதியாக முக்கியப் பங்காற்றி வந்துள்ளனர்.இந்த யாழ்ப்பாணம் - வேதாரண்யம் வரலாற்றுத் தொடர்பு ஆன்மீகப் பிணைப்பு: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல சைவப் பெரியார்கள் மற்றும் வணிகர்கள் கடல் கடந்து வந்து வேதாரண்யம் (திருமறைக்காடு) ஆலயத்திற்குப் பல அறக்கட்டளைகளையும் கொடைகளையும் வழங்கியுள்ளனர்.நிர்வாகப் பங்களிப்பு: ஆலயத்தின் திருப்பணிகள், அன்னதானக் கூடங்கள் மற்றும் நந்தவனப் பராமரிப்பு போன்றவற்றில் யாழ்ப்பாணத்து அன்பர்களின் பங்களிப்புகள் "யாழ்ப்பாணம் தேவஸ்தான" நிதியுதவிகள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.இலக்கியப் பதிவுகள்: யாழ்ப்பாணத்துச் சைவ அறிஞர்கள் வேதாரண்யம் தல புராணப் பதிப்புகளை அச்சிட்டு வெளியிடுவதிலும், ஆலய வரலாற்றைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.🏛️ வேதாரண்யம் திருமறைக்காடர் ஆலயத்தின் சிறப்புகள்தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள இக்கோயில், தேவாரப் பாடல் பெற்ற 276 சிவத்தலங்களில் மிக முக்கியமானதாகும்:மூலவர்: அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் (திருமறைக்காடர்).தாயார்: யாழைப்பழித்த மென்மொழியம்மை (வேதநாயகி). (இறைவியின் குரல் யாழின் ஓசையை விட இனிமையாக இருந்ததால், இங்கு சரஸ்வதி தேவி கையில் யாழ் இல்லாமல், சுவடியை ஏந்தியவாறு தவம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கிறார்).மறைக்காடு புராணம்: நான்கு வேதங்களும் மனித உருவில் வந்து சிவபெருமானை வழிபட்டு, பின்னர் இக்கோயிலின் கதவுகளைத் திருக்காப்பிட்டு (பூட்டி)ச் சென்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.கதவு திறந்த திருப்பதிகம்: மூடியிருந்த இக்கோயில் கதவுகளைத் திருநாவுக்கரசர் (அப்பர்) தனது தேவாரப் பதிகம் பாடித் திறக்கச் செய்தார்; திருஞானசம்பந்தர் பதிகம் பாடி மீண்டும் கதவை மூடச் செய்தார்.சப்த விடங்கத் தலம்: இத்தலம் தியாகராஜரின் ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றான "புவனி விடங்கத் தலம்" ஆகும் (இங்கு தியாகராஜரின் நடனம் 'ஹம்சபாத நடனம்' என்று அழைக்கப்படுகிறது).வேதாரண்யம் வரணி ஆதீனம் மற்றும் ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் தொடர்பான சட்டப் போராட்டம், வரலாற்று ரீதியாக இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பல தசாப்தங்களாக நடைபெற்று வந்துள்ளது. 

1.வரணி ஆதீனத்தின் உரிமை மற்றும் நிர்வாகம்

 இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள வரணி பகுதியில் தோன்றிய "ஸ்ரீலஸ்ரீ தில்லைநாயக தம்பிரான் சுவாமிகள்" வழியினரால் வரணி ஆதீனம் தோற்றுவிக்கப்பட்டது. 

கோவில் நிர்வாகம்: பாடல் பெற்ற தலமான வேதாரண்யம் ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோவிலின் திருப்பணிகள், சொத்து நிர்வாகம் மற்றும் திருவிழாக்களை நடத்தும் பரம்பரை அறங்காவலர் உரிமை இந்த ஆதீனத்திற்கு மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. 


திட்ட வரைவு (Scheme decree): தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) தலையீட்டின் போது, கோவிலின் பரம்பரை அறங்காவலர் உரிமைகள் மற்றும் கோவில் நிர்வாக நடைமுறைகள் சிவில் நீதிமன்றங்கள் (O.S.No.6 of 1993) மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் (A.S.Nos.121 & 122 of 2019) மூலமாக முறைப்படுத்தப்பட்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. 


2.வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்ற வழக்கு (1961)

வேதாரண்யம் கோவில் நிலம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரை சென்ற மிக முக்கியமான வழக்கு "ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் எதிர் இந்திய ஒன்றியம்" (1961) ஆகும். 

 தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் காலத்தில் இக்கோவிலுக்கு "சர்வமான்ய" கொடையாக வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்புப் பாளங்கள் (Salt Pans) மற்றும் நிலங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் (1805–1806 வாக்கில்) மத்திய உப்புத் துறையின் வசம் நிரந்தரக் குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டன. 


உச்சநீதிமன்றத் தீர்ப்பு: மிகக் குறைந்த குத்தகைத் தொகைக்கு (ஆண்டுக்கு ₹4,200 மட்டுமே) இவ்வளவு பெரிய நிலப்பரப்பு மத்திய அரசின் வசம் இருப்பதை எதிர்த்து கோவில் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், 1961 பிப்ரவரி 15 அன்று உச்சநீதிமன்ற நீதிபதி கஜேந்திரகட்கர் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அந்த பழைய குத்தகை ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் அப்போது குறிப்பிட்டது. 


3. தற்போதைய நிலவரம் மற்றும் பட்டா மீட்பு (2023)

2122 ஏக்கர் நில மீட்பு: பல ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு நிலவரித்திட்ட உதவி ஆணையர் (வடக்கு) நீதிமன்றம், அகஸ்தியம்பள்ளியில் உள்ள 2,122 ஏக்கர் உப்புப் பாள நிலங்கள் வேதாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்திற்குச் சொந்தமானது எனத் தீர்ப்பளித்து, கோவில் பெயரில் பட்டா வழங்க உத்தரவிட்டது. 

தற்போதைய கோரிக்கை: மத்திய அரசின் வசம் இன்னும் உள்ள மீதமுள்ள நிலங்களையும் முழுமையாக மீட்டெடுக்கவும், பல தசாப்தங்களாக மாறாமல் இருக்கும் குத்தகைத் தொகையை தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்ப மாற்றியமைக்கவும் தொடர்ந்து பல்வேறு சட்ட முயற்சிகளும், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.வேதாரண்யம் வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது, அதை பலர் தேத்தாகுடி எஸ்.கே.. ராமசாமி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் முன்னெடுப்போடு பல சீனியர் வழக்கறிஞர்கள் ஆதரவில் நடத்தும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி இது வாரணி ஆதீனம் உரிமை சொத்துக்கள் இது சோழ மன்னர்கள் காலத்தில் சைவ பண்டாரம் வழி ஆதீனம் பாரம்பரிய உரிமை உடையது இலங்கை யாழ்பாணம் தொடர்பு உடையது என்பதால், மாநில அரசு போடும் சட்டங்கள் இதைக் கட்டுப்படுத்த முடியாது, ஆகவே இந்திய அரசின் வெளியுறவுத் துறை சார்பாக இதில் உத்தரவு தேவை அதற்கு மத்திய அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும், ஆகவே வழக்கு இதுவரை முடியவில்லை, மேற்கண்ட வழக்கு முடியாமல், இந்த ஆலயம் சார்ந்த சொத்துக்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை எந்த தனிப்பட்ட முடிவையும் எடுக்க முடியாது, ஆகவே அதில் ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் அதை விட்டு தீர்ப்பு வரும்போது வெளியேற வேண்டிய நிலைவரும் இதுவே உண்மை நிலை.ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோவில் நிலங்களை ஆக்கிரமித்த நபர்கள் 

எதோ 120 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை 

 அநியாயமாகப் பிடுங்குவது போல் பொய்யாகச் சித்திரிக்கும் நிலையில் . 

இந்த 120 குடும்பங்களும் ஸ்ரீ வேதாரண்யேஸ்வரர் கோவில் நிலங்களைப் பல ஆண்டுகாலமாக வேண்டுமென்றே ஆக்கிரமிப்பு செய்து பக்காவாக மாடி வீடுகளைக் கட்டி வைத்துள்ளனர், ஹிந்துக் கோயில்களையும், ஹிந்து மதத்தையும் மதிக்காத ஆக்கிரமிப்பு நபர்கள் . 

இந்த 120 கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களில் மாற்று மதத்தை சார்ந்தவர்கள் தான் இருக்கின்றனர் 

"மக்களின் உரிமை என்ன ஆனது" என்று கேட்கும் ஆக்கிமிப்பு நபர்கள் கோயில் வழிபாட்டாளர்கள் சொல்லும் விடை இதுதான்: "ஆக்கிரமிப்பு செய்பவர் உரிமை என்ன ஆனது?" என்றுதான் கேட்டிருக்க வேண்டும்.

"பல ஆண்டுகளாக வசித்து வரும்" என்பதற்கு பதிலாக "பல ஆண்டுகளாக கோயில் சொத்தை ஆக்கிரமித்து பக்காவாக மாடி வீடுகள் கட்டி வசித்து வரும்" என்று கூறி இருக்க வேண்டும், காரணம் இந்திய அரசின் அனுமதி இல்லை 

விலை கொடுத்து முறையாகப் பெற்ற சொத்தின் உரிமை சாதாரண உரிமையாக அரசியல் சட்டம் 300-A ஷரத்தின் 

கீழ் வரும். ஒரு கோயிலின், மசூதியின், சர்ச்சின் சொத்துரிமை அரசியல் சட்டம் ஷரத்து 26ன் கீழ் அந்த மத நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட, உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமை ஆகும். 

   வெகு நாட்கள் கழித்து, சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற  

நீதிமன்றம் தான் இப்போது வழிநடத்தி ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை 

  எடுக்கும் போது "மக்கள் கேட்கும் கேள்விகள்" "மக்களின் நியாயமான கோரிக்கைகள்" எனப் போலியாக சித்தரிக்கும் 

இந்த ஆக்கிரமிப்பாளர்கள் வடமறைக்காடு கோயிலையே வேதாரண்யத்தில் ஆக்கிரமித்துள்ளனர் 

என்பதை மறைத்துப் பேசுகிறார்.

 மாற்று இடம் தர வேண்டும் என்று கேட்பதிலேயே இவர்கள் 

ஆக்கிரமிப்பாளர்கள் என்பதைப் பச்சையாக ஒத்துக் கொண்டுள்ளார். 

   தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு இவர்களைக் கோயில் நிலங்களில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த பலரைத் திரட்டி வெளியேற்று நடவடிக்கைகளை முடக்க முயல்வதாகச் செய்தி வருகிறது. சட்டப்படி அரசு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளை சட்ட விரோதமாக எதிர்ப்பவர்களை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே பக்தர்கள் வேண்டுகோளாகும். . "வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, நீடாமங்கலம் நீரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு" என்ற முதுமொழி மூலம் இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...