முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊழல் நபரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பெற்ற லஞ்சம் பணியிடை நீக்கம் விசாரணை தீவிரம்

சென்னையில் லஞ்சப் புகாரை விசாரிக்கச் சென்ற ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலா,


சம்பந்தப்பட்ட லஞ்ச அலுவலரிடமே லஞ்சம் கேட்டு மிரட்டியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட துணைக் கண்காணிப்பாளர் ஜாய் தயாள் உடனடியாக நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் விஜிலன்ஸ் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆட்சியில் முடங்கி இருந்த ஊழல் தடுப்புத்துறை தற்போது கடந்த ஒரு வாரத்தில் வாரிசு சான்றிதழ், வீட்டுமனை அளவீடு, பட்டா மாற்றம், நெல் கொள்முதல் பில், சோலார் பேனர் பரிந்துரை மற்றும் புதிய மின் இணைப்பு போன்ற பணிகளுக்காக பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கிய 7 ஊழல் அரசு பணியானர்களான அலுவலர்கள் கைதாகினர்.

லஞ்சம் வாங்கிய ஒரே வாரத்தில் 7 பேர் கைது,  அதில் திருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் ஞானசேகர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சர்வேயர் செல்வராஜ், விழுப்புரம் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, திண்டுக்கல் பில் கிளர்க் சுமன்ராஜ், தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் அவரது உதவியாளர் சுப்பையா, கோயம்பத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கதிர்வேல், சென்னை மின்வாரிய வணிக ஆய்வாளர் ஜமாலுதீன் ஆகிய 7 அரசு பணியாளர்களான அலுவலர்களை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பொறி வைத்து லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்து கைது செய்தனர்.

மேலும், இதே காலத்தில் நடந்து வந்த 3 ஊழல் வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் விசாரணை முடிவில்  குற்றவாளிகளுக்கு தண்டனையும் அபராதமும் பெற்றுத்தரப்பட்டுள்ளது.  இதுகுறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிவ் அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.



இந்த நிலையில்,  சென்னையில் லஞ்சப் புகாரில் சம்பந்தப்பட்ட நபரை விசாரிக்கச் சென்ற இடத்தில், விசாரணை அலுவலர் ஆன ஆய்வாளர் லஞ்சம் கேட்டு மிரட்டிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த துணைக் கண்காணிப்பாளர் நீலகிரி மாவட்டத்திற்கு பணி மாற்றப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த வருவாய் துறை அலுவலர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில்  அளிக்கப்பட்ட புகாரைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆய்வாளர் விமலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை , விசாரிக்கச் சென்ற ஆய்வாளர் விமலா, சம்பந்தப்பட்ட வருவாய் துறை அலுவலரிடமே லஞ்சம் வாங்கினாராம்.

அதாவது ஆய்வாளர் விமலா

தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகக் கொடுத்தால் இந்தப் புகாரிலிருந்து உங்களைக் காப்பாற்றி விடுகிறேன் என்றும், இல்லை யென்றால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அந்த அலுவலரை மிரட்டியிருக்கிறார்.

ஊழல் தடுப்பு ஆய்வாளரின் இந்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்த அந்த வருவாய் துறை அலுவலர் , அவருக்கு வேண்டிய உயர் காவல்துறை அதிகாரிகளை அணுகி புகார் அளித்தார். காவல் துறையில் இருக்கும் இந்த ஊழல் நபரைப் பிடிக்க, உடனடியாக ஐ.ஜி துரைகுமார் தலைமையில் ஒரு தனியாக உத்தரவிடப்பட்ட  விசாரணையில், ஆய்வாளர் விமலா வருவாய் துறை அலுவலரை மிரட்டி லஞ்சம் கேட்டது ஆதாரங்களுடன் நிரூபணமானது.

விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் அருண் நடவடிக்கை எடுத்து லஞ்சம் கேட்டு துறையின் பெயரைக் கெடுத்து ஊழல் செய்த  ஆயவாளர் விமலாவை பணியிடை நீக்கம் செய்து  உத்தரவு பிறப்பித்தார். சென்னை சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது விமலா பணத்தை மறைத்து வைத்ததாக (Planting cash) மற்றொரு புதிய புகாரும் இவர் மீது எழுந்தது.

மேலும், இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் ஆய்வாளருக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாக துணைக் கண்காணிப்பாளர் ஜாய் தயாள் மீதும் நடவடிக்கையாக அவர் சென்னை பணியில் இருந்து உடனடியாக நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது போல பல இடங்களில் நடந்தாலும் இது சில விவகாரம் மட்டுமே வெளிவருகிறது 100 மேற்பட்ட புகார் மீது நடவடிக்கை பாய்வதில்லை பொறிவைத்து பிடிக்கும் விவகாரம் மட்டுமே லஞ்ச ஊழல் நபர்கள் சிக்குகின்றனர் புகாரை விசாரிக்கச் சென்ற ஆய்வாளர் லஞ்சம் கேட்டு பணிடை நீக்கம் ஆன சம்பவம் காவல்துறையில் லஞ்சம் பெறும் பலர் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பல புகார்கள் உரிய விசாரணை நடத்தாமல் இதுபோல மூடப்பட்ட நிகழ்வுகள் குறித்து உரிய விசாரணை நடத்தினால் இன்னும் பலர் சிக்கலாம். தவெக அரசு நடவடிக்கை எடுத்தால்நல்லது,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...