முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருப்பரங்குன்றம் மலை மீதான தீப வழக்கு உச்சநீதிமன்றத்தின் முடிவை நோக்கி நகர்கிறது

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது பூர்வீக தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளின் உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு புதியதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகத் தகவல்,

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில்,  விசாரணைக்கு வந்த போது இன்று மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில், 'புதிய அரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், அவமதிப்பு வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே என்க் கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஜூன் 22 ல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவை நிறைவேற்ற முடியாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தீபத்தூணில்  தீபம் ஏற்ற இரு நீதிபதிகள்  பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில் நேற்று 21-06-2026) காலை 11-00 மணி அளவில் மதுரை பழங்காநத்தம் டவுண்டானா அருகில் இந்துமக்கள்கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சியின் மதுரை மாட்டத்தலைவர் சோலைகண்ணன் தலைமையில் தீப உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் மற்றும் ,தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் புலிகொடிவேந்தன் K.C.திருமாறன் ஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.



ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக மதுரை முனிச்சாலை பகுதியில் இதே நாளில் 2005 ஆம் ஆண்டில்  பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட வீரத்தியாகி A.R.காளிதாஸின் 21-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கும்,தீபம் ஏற்றுவதற்காக தன்னுயிரை தீயை வைத்து மாய்த்து கொண்ட தீபப்போராளி பூர்ணசந்திரனின் திருஉருவப் படத்திற்கும் மலர் அஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.

மேலும் சிவசேனாவின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ், இந்துமக்கள்கட்சி மாநில துணைத்தலைவர் பாம்பன் பாலன்ஜி, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தளபதி மாநிலப் பொருப்பாளர் மருது ஆனந்த், ஹிந்து மக்கள் கட்சியின் தென்மாவட்டத்தலைவர் கிருஷ்ணன், ஹனுமன் சேனா மாநிலச் செயலாளர் இராமலிங்கம்,, ஹிந்துமக்கள்கட்சி மாநிலத் தொண்டரணிச் செயலாளர் அண்ணாத்துரை, ஹிந்துமக்கள்கட்சி மதுரை மாநகரச் செயலாளர் கோவில் செல்வம், ஹிந்துமக்கள்கட்சி மதுரை மாவட்டக் கொள்கை பரப்புச் செயலாளர் ஸ்ரீராம்ஜி மற்றும் ஹிந்து மக்கள் கட்சி, தென்னிந்திய பார்வர்ட் பிளாக், அனுமன் சேனா நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மேற்கண்ட தீப உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.






ஆர்ப்பாட்டத்தின் பத்து  கோரிக்கைகள் வைக்கப்ட்ட நிலையில் இன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவை உடனடியாக செயல்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த இராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். அப்போது ராம ரவிக்குமார் சார்பில், 'புதிய அரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், அவமதிப்பு வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே என்று கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு (ஜூன் 22 ல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.  இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர், உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஏற்கனவே மன்னிப்புக் கேட்டனர்.

கடந்த ஜூன் மாதம் 4-ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.    “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது. தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, கோவில் மற்றும் தர்ஹா தரப்பு, மக்கள் தரப்பு ஆகியோரை இணைத்து ஏன் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். இதன் இறுதி முடிவு உச்சநீதிமன்றம் வழங்கப்போகும் இறுதி முடிவில் தான் தீப வெளிச்சம் வரவேண்டும், அது விரைவில் வர ஆன்மீகம் சார்ந்த அரசியல் தலைவர்கள் முயல வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...