மொரிஷியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் துறைமுகத்திலிருந்து இந்தியக் கடற்படைக் கப்பல் தர்காஷ் புறப்பட்டது
இந்தியக் கடற்படையின் மறைமுகத் தாக்குதல் போர்க்கப்பலான தர்காஷ், தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பணிகளுக்காக, மொரிஷியஸ், போர்ட் லூயிஸ் துறைமுகத்தில் தனது பயணத்தை நிறைவுசெய்து, 22 ஜூன் 2026 அன்று புறப்பட்டது.
இந்தப் பயணத்தின் போது, கப்பல் பணியாளர்கள், நட்பு ரீதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற கைப்பந்துப் போட்டி, மொரிஷியஸ் தேசிய கடலோரக் காவல்படை வீரர்களுக்கான தொழில்முறைப் பயிற்சி முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு துறைமுக நடவடிக்கைகளில் பங்கேற்றனர். மேலும், 21 ஜூன் 2026 அன்று இந்தக் கப்பல் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்பட்டது. இதில், புலம்பெயர்ந்த இந்தியர்கள், உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த 450 பேர் கலந்துகொண்டது மக்களுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஐஎன்எஸ் தர்காஷ் நீர்மூழ்கிக் கப்பலின் படைப்பிரிவு அதிகாரி கேப்டன் ரோஹித் மிஸ்ரா, காவல்துறை ஆணையர் திரு ராம்பேர்சாத் சூரூஜேபல்லி, பிஎம்எஸ்எம், மொரிஷியஸ் நாட்டிற்கான இந்திய காவல் ஆணையரும், மொரிஷியஸ் நாட்டிற்கான இந்தியத் தூதர் திரு அனுராக் ஸ்ரீவஸ்தவாவையும் சந்தித்துப் பேசினார். மேலும், 2026-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை நினைவுகூரும் வகையில், 21 ஜூன் 2026 அன்று மொரிஷியஸ் தேசிய கடலோரக் காவல்படை வீரர்களுக்கான யோகா நிகழ்வும் நடைபெற்றது.
இந்தப் பயணம், இந்தியா - மொரிஷியஸ் இடையேயான நெருக்கமான, நீடித்த உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், கடல்சார் ஒத்துழைப்பு, பிராந்தியப் பாதுகாப்பு, மகாசாகர் (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) தொலைநோக்குப் பார்வையை மேம்படுத்துவதில் இந்தியாவின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
RY38.jpeg)
(1)UH8N.jpeg)
(2)IRWM.jpeg)
கருத்துகள்