முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியத் திரை உலகின் மூத்த கலைஞர் கே.பாக்யராஜ் காலமானார்

இந்தியத் திரை உலகின் மூத்த கலைஞர் கே.பாக்யராஜ் இன்று காலமானார்.


உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார். அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர், இயக்குநர், வசன கர்த்தா இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர்,  அரசியல் தலைவர் எனப் பல பரிமாணங்களில் திரைத் துறைக்கு தனது பங்களிப்பைச் செய்தவர் கே. பாக்யராஜ். தமிழ் திரை உலகில் நடிகர்கள் இயக்குநராகவும், இயக்குநர்கள் நடிகர்களாவும் அவதாரம் எடுத்தாலும் இரு கலைகளும் ஒருசேர செய்து இரண்டிலும் சாதித்த வெகு சிலரில் பாக்யராஜும் ஒருவர். தனது தாய் அமராவதி பெயரில் இல்லம், கோபிச்செட்டிபாளையம் வெள்ளாங்கோவில் மக்கள் மண் வாசனை தான் வாழ்வில் தன் உழைப்பு தன் அறிவு தன் முயற்சி மூலம் இந்தப் புகழ் வந்த நிலை, 




சமீபத்தில் மறைந்த முதுபெரும் பாரதிராஜாவின் சீடராக இருந்தவர் கே.பாக்யராஜ். பாரதி ராஜாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஶ்ரீதேவி நடித்த மயில் கதை 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக தனது திரைப் பயணத்தைத் துவங்கி ர். இயக்குநர் என்பதையும் கடந்து நடிகராகவும் தனி முத்திரை பதித்தவர் கே.பாக்யராஜ் இன்று காலை நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு நெஞ்சு வலி எனக் கூறியதால் அப்பல்லோமருத்துவமனை அழைத்துச் சென்றபோது அவருடைய உயிர் பிரிந்தது.கே.பாக்கியராஜ்  திரைக்கதை மன்னன் 100 படங்கள் அதில் 

ஞானப்பழம் போல 25 படங்களை இயக்கியவர் 

பொய்சாட்சி போல 75 படங்களில் நடித்திருக்கிறார் 



வெற்றிப் படங்கள் மட்டுமே ஜனங்கள் மத்தியில் மனனமானது திரைக்கதை விஷயத்தில் 

ஆராரோ ஆரிரரோ , மௌனகீதங்கள் தூறல் நின்னு போச்சு , டார்லிங் டார்லிங் டார்லிங் 

உள்ளிட்ட சில படங்கள் ஆய்வு செய்ய உதவும் சிலருக்கு 

நல்ல குளம் நல்ல ஊரு நல்ல மனைவி என்று இருந்த பாகியராஜ் 

மகள் வாழ்க்கை ஒரு மார்க்கத்தில் போனதில் மனதில் வருத்தம் கொண்டார் 

பிள்ளையோ இந்தி தெரியாது போடா லிஸ்ட் 

இரண்டாவதாக அமைந்துள்ள மனைவி பூர்ணிமா சொக்கத் தங்கம்

இன்று போய் நாளை வா வை மீண்டும் தன்மகனை வைத்து எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்க சட்ட நுணுக்கங்களைப் பயன் படுத்தி பாலச்சந்தர் மகள் அதைப் பெற்று இவரை ஏமாற்றினார், 





இவரின் முதல் 20 படங்கள் பல மொழிகளில் பணத்தை பவுனாக அள்ளியது 

தாவணி கனவுகளின் கிளைமாக்ஸ் சிறிய மாற்றம் செய்திருந்தால் இன்னும்  வென்றிருக்கும் , அதற்கு பிறகு  என்னதான் எங்க சின்ன ராசா,  ராசுக்குட்டி என அருமையான படம் தந்தாலும் ஏற்றம் தடைக்கலம் ஆனது 

அதனால் தான் காசு இருக்கனும் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தாலும் பெயர் எடுக்காமல் போனது, இயக்குனர் கே பாக்கியராஜ் என்பவரை விமர்சிப்பதை விட 




அவரின் அற்புத படைப்புக்களை மட்டும் பேச வேண்டும், அதில் சில படங்கள் ஆபாசம் இரட்டை அர்த்தம் இருந்தும் ஜனங்கள் ரசனை மாறவில்லை காரணம் திரைக்கதை 

சுவரில்லாத சித்திரங்கள் ஒரு கை  ஓசை  முந்தானை முடிச்சு வரை 

1978 துவங்கி 1996 வரை நல்ல படங்களை தந்தவர் 

நேற்று வரை தரவில்லை என்றாலும் ,          இயக்குனர் கே.பாக்யராஜ்  ஜோபித்த காலத்தில் சினிமா மற்றும் பத்திரிகை உலகம் கௌரவ உச்சத்திலிருந்தது. அடிப்படை வாழ்வை, அதன் மனிதர்களை, பெண்களை அவர் எப்படியெலௌலாம் கூர்ந்து கவனித்திருக்கிறார் என்பதை அவர் படங்களைப்பார்த்து பலருக்கு வியப்புண்டு.

அவரது குருவான பாரதிராஜா சாமானியர்களை திரை நட்சத்திரமாக்குவார். ஆனால் சீடர் கே.பாக்யராஜ், தெருக்கூத்து  மற்றும் நாடகக்கலைஞர்களை திரைப்பிரவேசம் செய்ய வைத்து வாழவைத்திருக்கிறார். 



மண்ணாங்கட்டி சுப்பிரமணிக்கு தனது படங்களில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார், மற்றும் 

கவுண்டர் மணி என்கிற நாடக நடிகரை '16 வயதினிலே' படத்தில் நடிக்க வைத்த போது கவுண்டமணி என தவறாகப் பெயரெழுதியவர். அதுவே அவர் பெயராக நிலைத்தது. 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ராதிகாவின் அக்காள் கணவர் வேடத்துக்கு நடிகர் டெல்லி கணேஷை பாரதிராஜா நினைத்திருக்க இவர் கவுண்டமணியைச்சொல்லி சிபாரிசு செய்கிறார். வேடம் மணிக்கு என உறுதி ஆனதும் அவரைத் தேடி நள்ளிரவில் அவர் வீடு வரை போகிறார். இவரைப்பார்த்ததும் கவுண்டமணி "ஒத்துக்கிட்டாரா?..எனக்கு வேடம் உண்டா?" என ஓடி வந்து கேட்டதும் அவரை அடுத்துள்ள முக்கு கோவிலுக்கு அழைத்துப்போகிறார். தானே வாங்கிக்கொண்டு வந்த கற்பூரம், தீப்பெட்டியைக் கொடுத்து ஏற்றச்சொல்கிறார் கே.பாக்யராஜ். 

'இந்தப்பாத்திரத்தில் இனி கவுண்டமணிக்கு ஏறுமுகம் தான்' என உணர்ந்ததை வெறும் வாய் வார்த்தையோடு சொல்லாமல் தானே கற்பூரம் வாங்கி கோவிலுக்கு அழைத்துப்போய் சூடம் ஏற்ற வைத்துச் சொல்லி இருக்கிறாரென்றால் அவர் கவுண்டமணியோடு கொண்ட நட்பின் ஆழம் வியக்க வைக்கிறது.

நாடகக்கலைஞர்கள் மேல் தனி வாஞ்சையோடு அவர் அணுகிய விதத்தால்,  சங்கிலி முருகன், கவுண்டமணி, கே.கே.சௌந்தர், செந்தில், கல்லாப்பெட்டி சிங்காரம், செந்தாமரை, குலதெய்வம் ராஜகோபால், சி.ஆர் சரஸ்வதி என வளர்ந்த கலைஞர்கள் ஏராளம். 


தன்னோடு வாய்ப்புத் தேடிக்கொண்டு அலைந்த ராதாகிருஷ்ண மூர்த்தி என்கிற வாலிபன் தான் இயக்குனரானதும் "இன்னும் எத்தனை நாள்யா நடிக்க சான்ஸ் தேடுவாய்..வா...இந்த நடிப்பெல்லாம் தூக்கிப்போட்டுட்டு என் கூட அசிஸ்டண்ட்டா வந்துடு.." என அழைத்து அவரை பார்த்திபனாக்கியவர். 

இலக்கிய உலகில் உள்ளவர்கள் திரையில் பிரகாசிக்க வேண்டுமென பிரபஞ்சன் எழுதிய 'தேநீர்' கதையை ஊமை ஜனங்கள் எனப் படமாக்கிய போது இயக்குனர் ஜெயபாரதியின் மனைவியோடு நாயகனாக நடித்துக்கொடுத்தவர். எழுத்தாளர் பாலகுமாரனை இது நம்ம ஆளு திரைப்படம் மூலம் இயக்குனராக்கியது தெரிந்த கதை. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரை தனது உதவி இயக்குனராகவே வைத்திருந்தார்.

சென்னைக்கு பயணமான போது முதலில் தான் வேலை செய்த இயக்குனர் ராமகிருஷ்ணனுக்கு 'பொய் சாட்சி' படத்தில் நடித்துக் கொடுத்தார். தயாரிப்பாளரோ கே.பாக்யராஜ் பெயரை வைத்தால் தான் விற்பனையாகுமெனச் சொல்ல இயக்குனர் ராமகிருஷ்ணன் விலகிவிடுகிறார். மிச்சத்தை கே.பாக்யராஜே எடுத்து பூர்த்தியாக இயக்குனர் பெயராக பாக்யராஜ் பெயர் வேண்டுமென சொல்ல பாக்யராஜ் மறுக்க கடைசியில் இயக்குனர் பெயரில்லாமல் வந்தது.


தூயவனிடம் காப்பிரைட்டராக சில நாட்கள் இருந்ததால் அவரை தயாரிப்பாளராக்கி 'விடியும் வரை காத்திரு' படத்தில் நடித்தார்.

தன் முதல் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த சி.ஆர்.சரஸ்வதியை தன் கட்சியில் மகளிரணித் தலைவியாக்கி இருந்தவர் வருமானத்துக்காக ''எங்க சின்ன ராசா'வில் சித்தியாக்கினார். சரஸ்வதி பெரிய நடிகையானார்.

பலரது வாழ்க்கையின் திரைக்கதையை மாற்றி எழுதியவர். இவரை சினிமா நினைவில் வைக்கும் 

ஒரு காட்சி பாக்கியராஜ் படத்தில் இருந்து , நினைவூட்டக் கூறினால் இது ஆளு நம்ம படத்தில் கலைஞானம் சுண்டல் விறக பூணூல் போடாது போன, இப்போ வேள்விக்கு பூணூல் என்பது தான் இவர் எம்ஜிஆர் கலை வாரிசு கடைசி காலத்தில் திமுக தலைவரின் தோழன்  கால மாற்றம் தான் காரணம்.                                      "காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது....

அந்த  பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது ....   ஏரிக்கரை பூங்காற்றே…

நீ போற வழி தென்கிழக்கோ….

தென்கிழக்கு வாசமல்லி…".மாறா நினைவாக நுங்கம்பாக்கம் ஏரிக்கரை லேக் ஏரியா பசுமை நினைவுகள் என்றும் மாறாது. பாக்யா இதழ் ஆசிரியர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், பல்கலை வித்தகருக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் அஞ்சலி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...