மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுது.
இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பெரியவர்களுக்கான புதிய கட்டண விபரம்:36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்: ரூபாய் . 1,500-லிருந்து ரூபாய் . 2,500 ஆக உயர்வு, 36 பக்கங்கள் தட்கல் பாஸ்போர்ட்: ரூபாய் . 3,500-லிருந்து ரூபாய் . 5,000 ஆக உயர்வு 60 பக்க ஜம்போ சாதாரண பாஸ்போர்ட்: ரூபாய் . 2,000-லிருந்து ரூபாய் . 3,500 ஆக உயர்வு 60 பக்க ஜம்போ தட்கல் பாஸ்போர்ட்: ரூபாய் . 4,000-லிருந்து ரூபாய் . 6,000 ஆக உயர்வு குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான விபரம் 18 வயதுக்குட்பட்டோர் (சாதாரண 36 பக்கங்கள்): ரூபாய் . 1,000-லிருந்து ரூபாய் 1,750 ஆக உயர்வு 18 வயதுக்குட்பட்டோர் (தட்கல் 36 பக்கங்கள்): ரூபாய் . 4,250 மூத்த குடிமக்கள் மற்றும் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு,
சாதாரண சேவைக்கு ரூபாய் . 5,000 முதல் ரூபாய் . 6,000 வரையும், தட்கல் சேவைக்கு ரூபாய் . 7,500 முதல் ரூபாய் . 8,500 வரையும் வசூலிக்கப்படும். இதுகுறித்த முழுமையான தகவல்களையும், சேவைக் கட்டணங்களையும் அதிகாரப்பூர்வ இந்திய பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் காணலாம்.
இது சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஒரு காலத்தில் தற்போது பாஜக சார்ந்த ஜனதா அரசில் (1977 - 1979) மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் இந்தியாவின் பத்தாவது பிரதமாக பதவி ஏற்ற அடல் பிஹாரி வாஜ்பாய் ஆவார். அவரது ஆட்சிக் காலத்தின் போது தான், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் கணிசமாகக் குறைக்கப்பட்டு, சாமானியன் ஏழைகளும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பை எளிதாக்கும் வகையில் "ஏழைகளின் பாஸ்போர்ட்" என அறியப்படும் பாஸ்போர்ட் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
1977-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி ஏர் உழவன் சின்னத்தில் வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதலாவது காங்கிரஸ் அல்லாத பிரதமரானார். அவரது அமைச்சரவையில் அடல் பிஹாரி வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சரானார்
வெளியுறவுத்துறை அமைச்சரான அடல் பிஹாரி வாஜ்பாய் ஐ.நா. பொதுச் சபையில் ஹிந்தியில் உரையாற்றிய முதல் நபராவார். அவர் ஆட்சி நிர்வாகத்தில் தான் விலைவாசி மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது, உணவகங்களில் கட்டாயம் ஏழைகளுக்கு ஒரு ரூபாய் ஜனதா சாப்பாடும், ஜவுளிக்கடையில் ஆறு ரூபாய்க்கு ஜனதா வேட்டி மற்றும் சேலையும் கிடைத்தது அதோடு சுதந்திரம் அடைந்த பின்பும் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்த பாஸ்போர்ட் எனும் கடவுச்சீட்டும் விலை மலிவாக ஒரு ரூபாய்க்கு முதலில் வழங்கி சாமானியன் வெளிநாடு வேலைவாய்ப்பு கல்வி எனச் செல்லும் நிலை உறுவானது, அதன், மூலம் வளர்ச்சி அடைந்த தமிழகத்தின் கிராமங்கள் அதிகம் பயனடைந்த உழைக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆகவே வாஜ்பாய் ஒவ்வொரு வீட்டிலும் வாழ்வில் வளம் சேர்த்த தலைவரானார்.
அதன் பின் வந்தது தான் பாரதீய ஜனதா கட்சி (BJP) 1980 ல் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் பதவி விலகியதையடுத்து ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. 1980-ல் அடல் பிஹாரி வாஜ்பாய், L.K. அத்வானி, பைரோன் சிங் செகாவத், இதர RSS உறுப்பினர்கள் மற்றும் ஜன சங்க உறுப்பினர்கள் இணைந்து பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்கினர். பாரதீய ஜனதா கட்சியின் நிறுவனர் முகர்ஜி காலத்தில் முதலாவது தலைவராக வாஜ்பாய் பொறுப்பேற்றார்.
1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர் பெற்றது அனைவரும் தோல்வி கண்ட போதிலும் ஏழைகளின் தலைவனாக வாஜ்பாய் மற்றும் அத்வானி வெற்றி பெற்றனர். ஆகவே இந்தியக் குடியுரிமை கொண்ட கடவுச்சீட்டு விலை உயர்வு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நிலை என அதை உணர்ந்தவர்கள் கூறும் நிலை. பாஜக அடித்தள மக்கள் மத்தியில் கால் ஊன்றாத நிலைக்கு காரணம் சாமானிய மக்களைப் பற்றி கவலைப்படாத காரணம் தான். அதில் தணியார் மயம் மிகுந்த பாதிப்பு.








கருத்துகள்