சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்த ராஜலட்சுமிக்கு எதிராக எழுந்த ஊழல் லஞ்ச ஒழிப்பு மற்றும் சொத்துக் குவித்த புகாரை விசாரித்து, ஆய்வாளர் விமலா அறிக்கை
சமர்ப்பித்திருந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை , ஜனவரி மாதம் 6 ஆம் தேதி ஒரு குறிப்பாணையை வெளியிட்டதில், ஆய்வாளர் ராஜலட்சுமிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) தயார் செய்யுமாறு ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே மனுதாரர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். முதல் தகவல் அறிக்கையைத் தயார் செய்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநரின் ஒப்புதலுக்கு மனுதாரர் அனுப்பியுள்ளார். பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று, ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் அறிக்கையை ஆய்வு செய்து, சில திருத்தங்களை மேற்கொண்ட பின்னரே முறைப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், வழக்கு பதிவு செய்த காரணத்திற்காக மனுதாரரான விமலாவை பணியிடை நீக்கம் செய்து ஜுன் மாதம் 17 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆய்வாளர் விமலா மீதான இந்தப் பணியிடை நீக்க உத்தரவு முற்றிலும் உள்நோக்கம் கொண்டது என்பது முதற்கட்டமாகத் தெரிகிறது எனவும் . ஜூலை மாதம் 9 ஆம் தேதிக்குள் இதுகுறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும்.
மேலும், இந்த இடைநீக்க உத்தரவிற்கு ஜுலை மாதம் 9 ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அடுத்த விசாரணையை ஜுலை மாதம் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. காவல்துறை உதவி ஆய்வாளராக ராஜலட்சுமி 1999 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தது முதல், அவரது முழுநேர வேலை “வசூல் ”.என பலரும் விமர்சனம் செய்யும் நிலையில்
பொருளாதாரக் குற்றப் பிரிவு, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு, என மாறி இறுதியில் ராஜலட்சுமி வந்து சேர்ந்தது விபச்சாரத் தடுப்புப் பிரிவில் ராஜலட்சுமியின் மாத மாமூல் 50 லட்சம் எனவும் . இதில் 30 லட்சம் மாதம் தோறும் மேல்மட்டம் வரை சென்றதாகவும் தகவல் இத்தொகையை மாதம்தோறும் வாங்கித் தந்தவர் முகாம் உதவியாளர் ஐயப்பன் எனவும் தகவல் வருகிறது,
ராஜலட்சுமி வசூலில் கொடிகட்டி பறக்கும் விஷயம் அவருடன் பணியாற்றும் பல உதவி ஆய்வாளர்களுக்குத் தெரியவந்தது. லஞ்ச ஒழிப்புத் துறை முழுக்க இத் தவகவல் பரவியது.
தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்தவர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலா.
பிப்ரவரி மாதம் 2026 ல் பதிவு செய்யப்படுகிறது. அப்போது ராஜலட்சுமி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் இயக்குனர்
அருண் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நியமிக்கப்படுகிறார். ஒரு சில நாட்கள்
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்த முதல் வேலை, மாதம் 30 லட்சம் மாமூல் கொடுத்ததாகக் கூறப்படும் ராஜலட்சுமி மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்த விமலா என்ற ஆய்வாளரை இயக்குனர் பணியிடை நீக்கம் செய்தார் எனவும் . அதோடு ஜாய் தயாள் என்ற துணைக் கண்காணிப்பாளரை நீலகிரி மாவட்டம் உதகமணடலத்திற்கு மாற்றினார் எனவும்
“ ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே லஞ்சம் வாங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்” என்று இயக்குனரிடம் மாத மாமூல் வாங்கும் நபர்கள் தகவலைப் பரப்ப, இசெய்தி உண்மையா இல்லையா என்பதை புலனாய்வு செய்து விசாரிக்காமலேயே எப் ஐ ஆர் பதிவான நிலையில் தான் செய்தி பதிப்பானது பல இதழ்களில்
விமலா, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி தனக்கு நேர்ந்த பாதிப்பை தனது வழக்கறிஞர் அய்யாத்துரை மூலம் மனு தாக்கல் செய்து முறையிட்டார். சென்னை உயர்நீதிமன்றம், ய்வாளர் விமலாவின் பணி இடைநீக்கத்தை “உள்நோக்கம் கொண்டது” என்று கூறி தடை செய்திருக்கிறது
ஆய்வாளர் விமலா ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் CSU 3 பிரிவில் பணியாற்றுகிறார். ஆய்வாளர் விமலாவை பணியிடை நீக்கம் செய்யும் போது, ஜாய் தயாள் எனும் துணைக் கண்காணிப்பாளரை, விமலாவின் பணியை சரிவர மேற்பார்வை செய்யவில்லை என நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு மாற்றியதாக பிரபல ஆங்கில இதழ் செய்தியாளர் தெரிவிக்கிறார். ஆய்வாளர்
விமலா பணியாற்றுவது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் CSU 3. இந்த பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் கந்தசாமி. ஆறனால் ஜாய் தயாள் பணியாற்றுவது Chennai City IV. ஆய்வாளர் விமலாவை சரியாக மேற்பார்வை செய்யவில்லை என பணிமாற்றம் செய்யவேண்டுமென்றால் துணைக் கண்காணிப்பாளர் கந்தசாமியைத்தான் இடமாற்றம் செய்திருக்க வேண்டும். எனவும்
சம்பந்தமே இல்லாமல் துணைக் கண்காணிப்பாளர் ஜாய் ஏன் ஊட்டிக்கு மாற்றப்பட்டிருகிறார் என்பது நீதிமண்றத்தில் வழக்கறிஞர் எழு வினா
இந்த நிலையில்
ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பணியகத்தின் இயக்குநராக அருண் ஐபிஎஸ்-ஐ தமிழ்நாடு அரசு நியமித்த நாள்: மே மாதம் 25, 2026.
சென்னை பெருநகர விபச்சார தடுப்புப்பிரிவு ஆய்வாளர் ராஜலட்சுமி, பணிபுரியும் பிரிவில்1 ஆய்வாளராக பணிபுரிகிறார். இவர் சென்னை திருமங்கலம், வெல்கம் காலனியில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
இவர் பணியின்போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடாக அதிகளவில் பணம் சம்பாதித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடிப்படையாக வைத்து கடந்த 13-ஆம் தேதி இவரது வீட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
முடிவில் பல்வேறு சொத்துகள் தொடர்புடைய முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதன் தொடர்ச்சியாக வருமானத்தை விட 372 சதவீதம் அதிக சொத்துச் சேர்த்ததாக ஆய்வாளர் ராஜலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதில், “குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆய்வாளர் ராஜலட்சுமி மது விலக்கு அமலாக்கப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, பாலியல் தடுப்புப் பிரிவு, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போன்ற முக்கியமான இடங்களில் பணிபுரிந்தபோது தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, 01.06.2017 முதல் 30.06.2025 வரையிலான காலத்தில், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்.
நேரடி எஸ்ஐ-யாக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி, ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற பிறகு, 2010 ஆம் ஆண்டு முதல் சென்னை நகருக்குள் மட்டுமே முக்கியமான இடங்களில் பணிபுரிந்துள்ளார். எனவே அவரது சட்டவிரோத வருவாயைக் கணக்கிட 01.06.2017 முதல் 30.06.2025 வரையிலான காலம் கணக்கிடப்பட்டது.
இந்தக் காலத்தில் அவர் வருமானத்தை விட ஊழல் மற்றும் சட்டவிரோத வழிகளில் ரூபாய் .5.42 கோடிக்கு சொத்துகளை தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் வாங்கியுள்ளார்.
அதாவது வருமானத்தை விட 372 சதவீதம் அதிமான அளவில் சொத்துச் சேர்த்துள்ளார். இதையடுத்து, அவர் மீது ஊழல் தடுப்புத் சட்டத்தின் கீழ் சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












கருத்துகள்